ஹீரோ தன்னுடன் நட்பாகப் பழகும் பெண்ணைக் காதலிக்க, அவள் காதலை மறுத்து நட்பைத் தொடர்கிறாள். ஹீரோ அப்செட்டாகிறான். ஒரு கட்டத்தில் அவள் அவனை விரும்புவதாக சொல்கிற சூழ்நிலையில், அவள் நமக்கு வேண்டாம் என அவன் ஒதுங்குகிறான். அதற்கான காரணத்தில் சுவாரஸ்யமிருக்கிறது.
ஹீரோவாக (படத்தை இயக்கியிருக்கிற) பாரி இளவழகன். ஜாலியான இளைஞனாக காதலியை சுற்றிச் சுற்றி வருகிறார். காதலியைப் பற்றி, அவருடைய குடும்பத்தின் பழக்க வழக்கம் பற்றி தெரிந்து கொண்டபின் அவள் தன் குடும்பத்துக்கு ஒத்து வர மாட்டாள் என ஒதுங்குகிறார்.

