HomeMovie Reviewஅருள்வான் சினிமா விமர்சனம்

அருள்வான் சினிமா விமர்சனம்

Published on

கல்வியின் அருமை புரியாமல், நமக்கெதற்கு கல்வி என்ற மனநிலையில் வாழ்கிற மலை வாழ் மக்கள். அவர்களில் ஒருவரான சிறுமி குறிஞ்சிக்கு தம் இனம் அப்படி இருப்பது தவறு என உணர்த்துகிறது அவளது தாத்தாவின் மரணம்.

படிப்பின் அவசியத்தை உணரும்போது பூப்பெய்துகிறாள். உடனடியாக அவர்களின் பாரம்பரிய நடைமுறைப்படி கல்யாணத்துக்கு ஏற்பாடாகிறது. அதையெல்லாம் கடந்து படிப்பதற்கான முயற்சியில் மலையிலிருந்து இறங்குகிறாள். கலெக்டரை சந்தித்தால் தான் எதிர்பார்க்கும் படிப்பு கிடைத்துவிடும், தாங்கள் வசிக்கும் பகுதிக்கு பள்ளிக்கூடம் வந்துவிடும் என்று நம்புகிறாள். அந்த நம்பிக்கை நிறைவேறியதா இல்லையா என்பது மீதிக் கதை…

குறிஞ்சியாக கிருத்திகா. கவலை, வலி, சோகம், துக்கம், பயம், பதற்றம், எதிர்பார்ப்பு, முகமலர்ச்சி என எல்லாவித உணர்வுகளையும் வெளிப்படுத்த வேண்டிய கனமான பாத்திரம். அதற்கு உயிரூட்டியிருக்கிறது அந்த சிறுமியின் நடிப்பு.

சிறுமி நினைத்தபடி படிப்பதற்கு தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி எப்படியெல்லாம் கடமையாற்ற முடியுமோ அப்படியெல்லாம் கடமையாற்றுகிற கலெக்டராக அருள்நிதி. ஒரு கட்டத்தில் பதவியை விட்டு விலகி அடுத்த கட்டமாக மலையில் ஏறும்போது கேரக்டரின் மதிப்பும் ஏறுகிறது.

கிருத்திகாவின் அப்பாவாக ஆரவ், அடக்குமுறைக்கு ஆளாகி அனுபவிக்கும் வேதனைகளைப் பிரதிபலிப்பதில், அடக்குமுறைக்கு எதிராக சீறி பாய்வதில் கவனிக்க வைக்கிறார். கிருத்திகாவின் அம்மாவாக ரம்யா பாண்டியன், மலைவாழ் மக்களின் நலனின் அக்கறை கொண்டவராக காளி வெங்கட், கலெக்டரின் பி ஏ’வாக விடிவி கணேஷ், காவல்துறை அதிகாரியாக கவிதா பாரதி என நன்றாக நடிப்பவர்களை பார்க்க முடிகிறது.

காட்டிலாக்கா அதிகாரியாக ஜான் விஜய். கொடூரமானவராக நடிப்பது அவருக்கு பழகிப்போன விஷயம். அதை ரிப்பீட் செய்திருக்கிறார்.

ஜி வி பிரகாஷ் இசையில் ‘வேல் செவ்வேல்’ பாடலில் உற்சாகம் தெறிக்க, ‘அல்லிப் பூவே’ பாடல் இதம் தருகிறது. கதையின் உணர்வுகளுக்கு உத்வேகம் தருகிறது பின்னணி இசை. ஓங்கி உயர்ந்த மலை, அருவி, அடர்த்தியான காடு மேடுகளை பசுமை மாறாமல் படமாக்கி காட்சிகளை பிரமாண்டமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார்.

மலைவாழ் மக்களுக்கு கல்வி கிடைப்பதில் இருக்கிற சிரமங்களை, அரசாங்கத்தின் அலட்சியப் போக்கை, நிலவும் அடக்குமுறையை எடுத்துக் காட்டி, கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருக்கிற இயக்குநர் கணேஷ் விநாயகன் விமர்சகர்களின், ரசிகர்களின் பாராட்டு மழையில் நனையத் தயாராகலாம்.

Rating 3.5 / 5  

Latest articles

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு கல்வி உதவி வழங்கும் விழா! இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிப்பு.

2026-ம் ஆண்டுக்கான இயக்குநர் சங்க உதவி இயக்குநர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை பெப்சி தலைவர் ஆர் .கே. செல்வமணி,...

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனர் சக்திவேலனின் பிறந்தநாள் விழா – திரையுலக பிரபலங்கள் பங்கேற்பு!

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் நிறுவனர் சக்திவேலனின் பிறந்தநாள் விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த பிறந்தநாள் விழாவில் தமிழ்...

ஜீவாவின் அர்ப்பணிப்பால் 40 நாட்களில் நிறைவடைந்த ‘தகப்பன்’ படப்பிடிப்பு!

நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின்...

செப்டம்பர் 4-ல் தமிழுக்கு வரும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ – தமிழ் டிரெய்லர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=Fv1FQi6CWe4 சமீபத்தில் வெளியாகி மலையாள ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’, தற்போது தமிழ் ரசிகர்களையும் கவர...

More like this

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு கல்வி உதவி வழங்கும் விழா! இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிப்பு.

2026-ம் ஆண்டுக்கான இயக்குநர் சங்க உதவி இயக்குநர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை பெப்சி தலைவர் ஆர் .கே. செல்வமணி,...

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனர் சக்திவேலனின் பிறந்தநாள் விழா – திரையுலக பிரபலங்கள் பங்கேற்பு!

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் நிறுவனர் சக்திவேலனின் பிறந்தநாள் விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த பிறந்தநாள் விழாவில் தமிழ்...

ஜீவாவின் அர்ப்பணிப்பால் 40 நாட்களில் நிறைவடைந்த ‘தகப்பன்’ படப்பிடிப்பு!

நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின்...