HomeCinemaடீசரை வெளியிட தடை விதித்தார்கள். சென்சாரில் 54 கட் கொடுத்தார்கள்! -தடைகளைத் தாண்டி 'வா பகண்டையா'...

டீசரை வெளியிட தடை விதித்தார்கள். சென்சாரில் 54 கட் கொடுத்தார்கள்! -தடைகளைத் தாண்டி ‘வா பகண்டையா’ படத்தை வெளியிடும் இயக்குநர் பி.ஜெயக்குமாரின் விரிவான பேட்டி

Published on

உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை இழுத்துப் போட்டு வெளுத்து வாங்குகிற விதத்தில் உருவாகி, தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நேரத்தில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிற படம் ‘வா பகண்டையா.’

டிரெய்லர் வெளியானபோது அதிலிருந்த வசனம், பாடல் வரிகள் சர்ச்சைக்குள்ளாகி, இந்த படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான ஜெயக்குமார் சிலரால் மிரட்டல்களைச் சந்தித்தார். பின்னர் இந்த படம் சென்சாரிலும் சிலபல சிக்கல்களைச் சந்தித்தது. அதையெல்லாம் கடந்து ஒருவழியாக வரும் ஏப்ரல் 12-ம் தேதி படம் திரைக்கு வருகிறது.

வா பகண்டையா இயக்குநர் ஜெயக்குமார்

படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது? ஏன் இத்தனை பிரச்சனைகள்? இப்படியான கேள்விகளோடு இயக்குநரை சந்தித்தோம்…

சாதிப் படமாக எடுத்ததால்தான் தொடர்ச்சியாக பிரச்சனைகள் உருவாகிறதா?

”எதை வைத்து நான் சாதிப்படம் எடுத்திருப்பதாக சொல்கிறீர்கள்? டிரெய்லரை வைத்து சொல்கிறீர்கள் என்றால் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். நான் எடுத்திருப்பது சமூக நீதி பேசுகிற படம். சாதி கூடாது என்று வலியுறுத்துகிற படம். அரசியலும் பேசியிருக்கிறேன்.”

அரசியல் பேசுவதால்தான் பிரச்சனையா?

”அரசியல் பேசுவது மட்டுமில்லை; படத்தில் நம்முடைய பிரதமர் மோடி சாயலில் ஒருவரை நடிக்க வைத்திருக்கிறேன். அதை வைத்து பாஜக.வுக்கு ஆதரவான படம் என்ற கோணத்தில் பேச்சு எழுந்தது. படத்தில் ‘சாதி என்பது மாம்பழத்துக்குள் இருக்கும் வண்டு மாதிரி’ என்ற வசனம் வருகிறது. அதை உண்மையில் மாம்பழத்தை சின்னமாக கொண்ட கட்சியை மனதில் வைத்து எழுதவில்லை. கதைக்கு அதைவிட சரியான சரியான உதாரணம் கிடைக்கவில்லை. அதுதான் உண்மை. அதை புரிந்துகொள்ளாமல், அதையும் பிரச்சனையாக்கினார்கள். பாடல் வரிகளில் ஈழம் என்ற சொல் வருவதையும் பிரச்சனையாக்கினார்கள்.

சிலர் தங்களுக்கு படத்தை போட்டுக் காட்ட வேண்டும் என்றெல்லாம் நெருக்கடி கொடுத்தார்கள். நான் அதற்கெல்லாம் சம்மதிக்கவில்லை. கருத்து எதுவானாலும் என் படத்தை மக்கள் பார்த்து முடிவெடுக்கட்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.”

மோடி சாயலில் உள்ள நபர்தான் படத்தின் ஹீரோவா?

”இல்லை. அவர் கெஸ்ட் ரோலில்தான் வருவார். ஆனால், அவருடையது முக்கியமான கதாபாத்திரம்.”

சென்சாரில் என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்தித்தீர்கள்?

”படம் சமகால சமூக அவலங்களை தோலுரித்துக் காட்டுவதால், அரசியல் வசனங்கள் இருப்பதால் 54 கட் கொடுத்தார்கள். இது தேர்தல் நேரம் என்பதால் டீசருக்கு தடை விதித்துள்ளார்கள். அதற்கெல்லாம் பிரதமர் சாயலில் இருப்பவர் நடித்திருப்பதும் ஒரு காரணம். டீசரை சமூக வலைதளங்களில்கூட வெளியிட முடியாத சூழ்நிலையில், 30 விநாடிக்குள் இருக்கும்படியான கிளிப்பிங்ஸ் சிலவற்றை டிவி சேனல்களில் விளம்பரப்படுத்தி படம் வருவதை மக்களுக்கு தெரியப்படுத்தி வருகிறோம்.”

படத்தை ரிலீஸ் செய்வதற்கு எதிர்ப்பு ஏதும் வந்துள்ளதா?

”’இல்லை; இதுவரை அப்படியான எந்த எதிர்ப்பும் வரவில்லை. தமிழ்நாடு முழுக்க 200 தியேட்டர்களில் படத்தை வெளியிட திட்டமிட்டு அதற்கான வேலைகள் நடக்கிறது.”

உங்கள் படத்தை ஏன் பார்க்க வேண்டும்’ என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்?

”படம் சமூக அவலங்களைப் பேசுகிறது. மக்களில் பலரும் சந்திக்கிற பிரச்சனைகளைப் பேசுகிறது. வெறுமனே அரசியல் பேசுவது, காரசாரமாக கருத்து சொல்வது என்று சுருக்கிக் கொள்ளாமல் பொழுதுபோக்கு அம்சங்களையும் வைத்துள்ளேன்.

படம் சமூக அவலங்களைப் பேசுகிறது. மக்களில் பலரும் சந்திக்கிற பிரச்சனைகளைப் பேசுகிறது. வெறுமனே அரசியல் பேசுவது, காரசாரமாக கருத்து சொல்வது என்று சுருக்கிக் கொள்ளாமல் பொழுதுபோக்கு அம்சங்களையும் வைத்துள்ளேன்.

ஹீரோ, ஹீரோயின் புதியவர்கள் என்றாலும் ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, மீரா கிருஷ்ணன், நித்திஷ் வீரா, பவர் ஸ்டார் சீனிவாசன், மனோபாலா, காதல் சுகுமார், பிளாக் பாண்டி, போண்டா மணின்னு பிரபலமான நடிகர்கள் நடிச்சிருக்காங்க.

எஸ்.பி.பி. அவர்கள் கடைசியாக பாடிய இரண்டு பாடல்கள் உட்பட படத்தில் ஏழு பாடல்கள் இருக்கிறது. அத்தனை பாடல்களுக்கும் சீனியர் மியூஸிக் டைரக்டர் எஸ்.ஏ.ராஜ்குமார் சிறப்பாக இசையமைத்துள்ளார். எல்லா பாடல்களும் கதைக்களத்துக்கு பொருத்தமாக இருக்கும்; மக்களும் ரசிப்பார்கள். இப்படி ஒரு கமர் ஷியல் படத்தில் என்னவெல்லாம் இருக்க வேண்டுமோ அதெல்லாம் இருப்பதால் என் படத்தை பார்க்கலாம்.

பிரச்சனைகளைப் பேசிவிட்டுக் கடந்துபோகாமல் பிரச்சனைகளுக்கான தீர்வையும் எடுத்துச் சொல்லியிருக்கிறேன்.”

இயக்கி, தயாரித்த முதல் படத்திலேயே பல பிரச்சனைகளை சந்தித்து விட்டீர்கள். அடுத்தடுத்து படம் இயக்கும் எண்ணம் இருக்கிறதா?

”எண்ணம் மட்டுமல்ல; கதை அது இதுவென எல்லாமும் தயாராக இருக்கிறது. ஆளுமை என பெயரும் வைத்தாயிற்று. சீக்கிரமே ஷூட்டிங் போக திட்டமிடுகிறோம். இந்த முறை முழுக்க முழுக்க கமர்ஷியலாக ஒரு படத்தை கொடுக்கவிருக்கிறேன். அதுவும் என் சொந்த தயாரிப்பிலேயே உருவாகிறது. சமூகத்துக்காக ஒரு நல்ல விஷயத்தை செய்றப்போ பிரச்சனைகள் வரத்தான் செய்யும். அதையெல்லாம் சமாளிக்கத் தயாரா இருக்கிறேன்.”

 

 

Latest articles

உலகம் முழுக்க மக்கள் என்னை பாகுபலியாக அடையாளம் கண்டுகொள்கிறார்கள்! -நடிகர் பிரபாஸ் உற்சாகம்

“பாகுபலி: தி பிகினிங்” திரைப்படம் இந்திய சினிமாவின் போக்கையே மாற்றியமைத்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பிரபாஸ் இன்னும்...

‘இம்மார்டல்’ திரைப்படத்திலிருந்து வெளியான ‘லவ் யூ லவ் யூ காட்டேரி’ பாடலுக்கு இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு!

https://www.youtube.com/watch?v=-vlnhbtkyhw இசையமைப்பாளர் சாம் சி எஸ் தொடர்ந்து வித்தியாசமான இசை அனுபவங்களை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில்,...

ஹார்ட்டீன் சினிமா விமர்சனம்

இன்றைய தலைமுறையினரின் உணர்வுகளையும், காதலையும் மையமாகக் கொண்ட படம். ஜெய்ப்பூரில் உணவகம் நடத்தி வரும் சிவாவும் சாதனாவும் காதலர்கள். ஒரு...

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ வெப் சீரிஸ் விமர்சனம்

இன்ஸ்டா பிரபலங்களின் நடிப்புப் பங்களிப்பில் கிரிக்கெட் விளையாட்டையும் தீவிர ரசிகர்களின் உணர்வுகளையும் மையமாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் டிராமா. ஒரு கிராமத்தைச்...

More like this

உலகம் முழுக்க மக்கள் என்னை பாகுபலியாக அடையாளம் கண்டுகொள்கிறார்கள்! -நடிகர் பிரபாஸ் உற்சாகம்

“பாகுபலி: தி பிகினிங்” திரைப்படம் இந்திய சினிமாவின் போக்கையே மாற்றியமைத்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பிரபாஸ் இன்னும்...

‘இம்மார்டல்’ திரைப்படத்திலிருந்து வெளியான ‘லவ் யூ லவ் யூ காட்டேரி’ பாடலுக்கு இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு!

https://www.youtube.com/watch?v=-vlnhbtkyhw இசையமைப்பாளர் சாம் சி எஸ் தொடர்ந்து வித்தியாசமான இசை அனுபவங்களை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில்,...

ஹார்ட்டீன் சினிமா விமர்சனம்

இன்றைய தலைமுறையினரின் உணர்வுகளையும், காதலையும் மையமாகக் கொண்ட படம். ஜெய்ப்பூரில் உணவகம் நடத்தி வரும் சிவாவும் சாதனாவும் காதலர்கள். ஒரு...