Thursday, January 22, 2026
spot_img
HomeCinemaஇந்த படத்தில் யாரும் கஷ்டப்பட்டு வேலை செய்யவில்லை; இஷ்டப்பட்டு வேலை செய்தோம்! -‘வட்டார வழக்கு' பட...

இந்த படத்தில் யாரும் கஷ்டப்பட்டு வேலை செய்யவில்லை; இஷ்டப்பட்டு வேலை செய்தோம்! -‘வட்டார வழக்கு’ பட நிகழ்வில் நடிகர் சந்தோஷ் நம்பிராஜன் பேச்சு

Published on

‘டூலெட்’ படத்தில் நடித்து கவனம் ஈர்த்த சந்தோஷ் நம்பிராஜன், கதையம்சமுள்ள படங்களில் நடித்துவரும் ரவீனா ரவி நடிப்பில், கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கிய படம் ‘வட்டார வழக்கு.’ இந்த படம் வரும் டிசம்பர் 29-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

நிகழ்வில் இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் பேசியபோது, ‘‘பின்னணி இசையை நம்பி இருக்கக்கூடிய படம் இது. இந்தக் கதைக்கு இளையராஜா சார் இசை இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அவர் படம் பார்த்து சம்மதித்து 12 நாட்கள் ஒரு தியானம் போல, பின்னணி இசையை செய்து கொடுத்தார். அதேபோல் நல்ல படம் என்பதால் படத்தில் நடித்தவர்கள், ஒளிப்பதிவாளர் என பலரும் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆதரவு கொடுத்தனர். பொருளாதாரத்தில் சில குறை நிறைகளோடு இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். அதை மன்னித்து உங்கள் ஆதரவைக் கொடுங்கள்’ என்றார்.

நடிகர் சந்தோஷ் நம்பிராஜன், ‘‘இந்தப் படத்தில் யாரும் கஷ்டப்பட்டு வேலை செய்யவில்லை இஷ்டப்பட்டு தான் வேலை செய்து இருக்கிறோம். இசைஞானி இசையில் நடித்துள்ளது எனக்குப் பெருமையாக உள்ளது. இப்போதெல்லாம் சின்ன படங்களை வெளியிடுவது கஷ்டம், தியேட்டர் கிடைப்பதில்லை என்று சொல்கிறார்கள். அது முற்றிலும் பொய். நீங்கள் ஒரு தரமான படத்தை எடுத்தால் அதை வெளியிடுவதற்கு சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேல் சார் தயாராக இருக்கிறார். நீங்கள் உழைப்பையும், படத்தையும் நேர்மையாக கொடுத்தால் உங்களுக்கான அங்கீகாரமும் அடையாளமும் விருதுகளும் தானாக வந்து சேரும் என்பது நிச்சயம். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்” என்றார்.

நடிகை ரவீனா ரவி, ‘‘நல்ல கதையம்சம் கொண்ட படம் இது. எல்லோரும் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறோம். திரையரங்கில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.

படத்தை வெளியிடுகிற சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்தி வேலன் ‘‘கமர்ஷியல் படங்கள் என்பதை விட உண்மைக்கு நெருக்கமான படங்களை விநியோகிப்பதில்தான் எனக்கு ஆத்மார்த்த திருப்தி. இந்த படமும் அப்படியான படம். மக்கள் ஆதரவளிக்க வேண்டும்” என்றார்.

 

Latest articles

பாரத்- சான்வி மேக்னா நடிப்பில் சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

நல்ல கதையம்சத்துடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்குவதை அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் நோக்கமாக கொண்டிருக்கிறது. அந்த...

‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகள் பகிர்ந்த அனுபவங்கள்!

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான வரலாற்று கதையான ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ள ரக்ஷனா இந்துசூடன்,...

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!

தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் காட்சிகள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டு...

தீவிரமான படைப்பாக ‘தடயம்.’ மீண்டும் ZEE5 ஓடிடி தளத்தில் சமுத்திரகனி!

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளுக்கும், சமூகப் பார்வை கொண்ட நடிப்புக்கும் பெயர் பெற்ற சமுத்திரகனி, மீண்டும் ZEE5 ஓடிடி...

More like this

பாரத்- சான்வி மேக்னா நடிப்பில் சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

நல்ல கதையம்சத்துடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்குவதை அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் நோக்கமாக கொண்டிருக்கிறது. அந்த...

‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகள் பகிர்ந்த அனுபவங்கள்!

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான வரலாற்று கதையான ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ள ரக்ஷனா இந்துசூடன்,...

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!

தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் காட்சிகள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டு...
error: Content is protected !!