Sunday, March 15, 2026
spot_img
HomeMovie Reviewதாய் கிழவி சினிமா விமர்சனம்

தாய் கிழவி சினிமா விமர்சனம்

Published on

மண்மணத்துடன் ஒரு படம்.

அந்த தண்டட்டி கிழவி பவுனுத்தாயி வட்டிக்கு கடன் கொடுப்பதும் கடனை திருப்பி வசூலிப்பதில் கடுமையாக நடந்து கொள்வதும் வழக்கம். அதனாலேயே ஊரில் பலருக்கும் அவள் மீது வெறுப்பு. ஒரு கட்டத்தில் அவள் பக்கவாதம் வந்து படுக்கையில் விழுந்துவிட, ஊர் மக்களுக்கு ‘அப்பாடா’ என்றிருக்கிறது. மகன்களும் அவள் எப்போது போய்ச் சேருவாள் என்ற எதிர்பார்ப்பிலேயே இருக்கிறார்கள்.

அந்த நேரத்தில்தான், பவுனுத்தாயி பல பவுன் நகைகளை மறைத்து வைத்திருக்கிற ரகசியம் மகன்களுக்கு தெரிகிறது. அதுவரையிலான மனநிலை அப்படியே தலைகீழாய் மாறுகிறது. தாய் கிழவியைக் காப்பாற்றி, தங்கம் இருக்குமிடத்தை கண்டுபிடிக்க களமிறங்குகிறார்கள். அவர்களால் கிழவியைக் காப்பாற்ற முடிந்ததா, தங்கத்தை கைப்பற்ற முடிந்ததா என்பது மீதிக் கதை… இயக்கம் சிவகுமார் முருகேசன்

ஒப்பனையால் மதுரை மாவட்ட தண்டட்டி கிழவிகளின் நகலாகவே மாறியிருக்கிற ராதிகா அகம்பாவப் பேச்சுக்களாலும், அடாவடி செயல்பாடுகளாலும், ஸ்டைலிஷ் அப்பத்தாவாக ரசிக்கத்தக்க நடவடிக்கைகளாலும், பொருத்தமான உடல் மொழியாலும் ‘பவுனுத்தாயி’க்கு  உயிரூட்டியிருக்கிறார். தங்கத்தை மறைத்து வைத்ததுபோல் பாசத்தையும் மறைத்து வைத்திருக்கும் அந்த தாய் கிழவி, கிளைமாக்ஸில் தான் ஏன் அப்படியொரு அராஜகப் பேர்வழியாக இருக்கிறேன் என்பதற்கு கொடுக்கும் விளக்கமும் சரி, சேமிப்பின் அவசியம், பெண் சுதந்திரம் பற்றியெல்லாம் எடுத்துச் சொல்வதும் சரி அர்த்தமுள்ளதாக இருக்கிறது.

தாய் கிழவியின் மகன்களாக சிங்கம்புலி, அருள்தாஸ், பால சரவணன், மகளாக ரேச்சல் ரெபேக்கா, மருமகனாக முத்துக்குமார், மற்ற முக்கியமான கேரக்டர்களில் முனீஸ்காந்த், இளவரசு என படம் முழுக்க ஏராளமான நடிகர் நடிகைகள். ஒருவர் கூட வீணடிக்கப்படவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கவர்கிறார்கள்.  அவர்கள் மூலம் ஆடியன்ஸுக்கு கடத்தப்படும் வாழ்வியல் யதார்த்தங்கள் ஆழமானவை, அழுத்தமானவை.

காட்சிகளின் தன்மைக்கேற்ப பின்னணி இசையமைத்திருக்கும் நிவாஸ் கே பிரசன்னா, ஜெகன் கவிராஜ், கருமாத்தூர் மணிமாறன் இருவரது வரிகளையும் இனிய பாடல்களாக்கி மனதில் தங்க வைக்கிறார். விவேக் விஜயகுமாரின் ஒளிப்பதிவு கதைக்களத்தை தாங்கும் தூண்களில் ஒன்றாகியிருக்கிறது.

‘சிரிக்கலாம், ரசிக்கலாம்’ ரக பொழுதுபோக்கு படைப்புதான் என்றாலும், அதன் மூலம் சொல்லியிருக்கிற கருத்துக்களால் படத்தை சமூகத்திற்கான பாடமாக்கியிருக்கிறார் இயக்குநர் சிவகுமார் முருகேசன்!

Rating 3.5 / 5 

Latest articles

அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி, காமெடி, ரொமான்ஸ் கலந்த அழகான லவ் டிரமா ‘நீ Forever’ மார்ச் 27-ம் தேதி ரிலீஸ்!

இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து இயக்குநர்  உருவாகியுள்ள 'தருணம்' என்ற வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் புகழ்...

வெஞ்சென்ஸ் சினிமா விமர்சனம்

அதிகாரத்தில் இருக்க வேண்டும், அதிகாரத்தில் இருப்பவர்கள் தனக்கு கீழ் இருக்க வேண்டும், எந்த நேரமும் புகழ் போதையில் மிதக்க...

கெணத்த காணோம் சினிமா விமர்சனம்

வறட்சிக்குப் பேர்போன ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் தண்ணீர்ப் பஞ்சத்திற்கு தீர்வுகாண கிணறு தோண்டுகிறார்கள். அதிகபட்சம் 20 அடி...

More like this

அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி, காமெடி, ரொமான்ஸ் கலந்த அழகான லவ் டிரமா ‘நீ Forever’ மார்ச் 27-ம் தேதி ரிலீஸ்!

இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து இயக்குநர்  உருவாகியுள்ள 'தருணம்' என்ற வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் புகழ்...

வெஞ்சென்ஸ் சினிமா விமர்சனம்

அதிகாரத்தில் இருக்க வேண்டும், அதிகாரத்தில் இருப்பவர்கள் தனக்கு கீழ் இருக்க வேண்டும், எந்த நேரமும் புகழ் போதையில் மிதக்க...
error: Content is protected !!