Monday, March 16, 2026
spot_img
HomeCinemaகிராஃபிக் நாவலை இதுவரை யாரும் திரைப்படைப்பாக எடுக்காததால் தமிழுக்கு இது புதிதாக இருக்கும்! -‘தி வில்லேஜ்'...

கிராஃபிக் நாவலை இதுவரை யாரும் திரைப்படைப்பாக எடுக்காததால் தமிழுக்கு இது புதிதாக இருக்கும்! -‘தி வில்லேஜ்’ வெப் சீரிஸ் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிலிந்த் ராவ் பேச்சு

Published on

ஆர்யா நடிப்பில், மிலிந்த் ராவ் இயக்கத்தில், தமிழில் முதல் முழுமையான ஹாரர் திகில் ஒரிஜினல் சீரிஸாக உருவாகியுள்ளது ‘தி வில்லேஜ்’ வெப் சீரிஸ்.

இந்த சீரிஸ் வரும் நவம்பர் 24-ம் தேதி இந்தியா மற்றும் 240+ நாடுகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில், ஆங்கில சப்டைட்டிலோடு வெளியாகவுள்ளது.

 

தனது குடும்பத்தைக் காப்பாற்றப் போராடும் ஒருவனின் அபாரமான போராட்டமே கதைக்களம். இந்த சீரிஸின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் இயக்குநர் மிலிந்த் ராவ் பேசியபோது, ‘‘கிராஃபிக் நாவலை இங்கு யாரும் திரைப்படைப்பாக செய்ததில்லை. அந்த வகையில் இது தமிழுக்கும் ஆர்யா சாருக்கும் மிகவும் புதியது. இதை அவர் செய்ய ஒத்துக்கொண்டது பெரிய விசயம். கிராஃபிக் நாவலை தமிழ்நாட்டில், தூத்துக்குடி அருகில் நடக்கும் கதை போல நமக்கு நெருக்கமாக, நம் மொழியில் உருவாக்கியுள்ளோம்.

இந்த சீரிஸிற்கு இசை மிகமிக முக்கியம். அதை உணர்ந்து கிரிஷ் கோபாலகிருஷ்ணன் அட்டாகாசமான இசையை தந்துள்ளார். மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் சீரிஸ் சிறப்பாக உருவாக நன்றாக உழைத்திருக்கிறார்கள்” என்றார்.

நடிகர் ஆர்யா பேசியபோது, ‘‘மிலிந்த் இந்தக்கதையை சொன்ன போது, இதை எடுக்க முடியுமா என்றுதான் முதலில் கேட்டேன். அவர் எழுதியது மிகப்பெரிய விஷிவல். படத்தை விட பெரிய பட்ஜெட். அவர் சொல்வதில் 80 சதவீதம் எடுத்தாலே போதும் என்று சொன்னேன். இவ்வளவு பெரிய பட்ஜெட்டை ப்ரைமில் ஒகே செய்தார்கள். மிலிந்த் சொன்ன மாதிரி எடுத்து விட்டார். மிலிந்த் ஈஸியாக எந்த ஒரு காட்சிக்கும் ஒகே சொல்ல மாட்டார். இதை எடுப்பது மிகக்கடினம். ப்ராஸ்தடிக் மேக்கப், ஷூட்டிங் லோகேஷன் என எல்லாமே மிக கடினமாக இருந்தது. மூன்று வருட நீண்ட பயணம். இதை எடுத்து முடித்ததற்கே மிகப்பெரிய பார்ட்டி வைக்க வேண்டும். அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறோம். இது எனக்கு புது அனுபவமாக இருந்தது. நான் இப்படியான ஹாரர் கதையில் நடித்ததே இல்லை. இது முழுக்க முழுக்க வித்தியாசமான கான்செப்ட். அதை நம்பித்தான் ஒத்துக் கொண்டேன்.

ஆடுகளம் நரேனுடன் சேர்ந்து என் குழந்தையையும், மனைவியையும் தேடுவது தான் கதை. ஒவ்வொரு எபிஸோடும் அடுத்து என்ன என்று எதிர்பார்க்க வைக்கும். இந்த மாதிரி கதையில் விஷுவல் மற்றும் சவுண்ட் ரொம்ப முக்கியம். அதை மிலிந்த் கொண்டு வந்திருக்கிறார். விஷுவல் எபெஃக்ட்ஸ் எல்லாம் முடித்து, உங்கள் முன் கொண்டு வர இவ்வளவு காலம் தேவைப்பட்டது. இப்போது பார்க்க மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும்” என்றார்.

இந்த சீரிஸுக்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார், பாடல் வரிகளை மதுரை சொல்ஜர் (சியான் சாஹீர், செந்தில் குமார்), ஐக்கி பெர்ரி, சினேகன், குரு அய்யாதுரை மற்றும் ஷில்பா நடராஜன் எழுதியுள்ளனர். முத்து சிற்பி(காளிமுத்து), சிந்துரி விஷால், மதிச்சியம் பாலா(ஜி. முருகன்), குரு அய்யாதுரை, மதுரை சோல்ஜர் (சியான், செந்தில் குமார்), ஐக்கி பெர்ரி, கிரிஷ் கோபாலகிருஷ்ணன், டி.பிரதிமா பிள்ளை, ஷில்பா நடராஜன் ஆகியோர் பாடியுள்ளனர்.

Latest articles

ஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளியிட்டு நிகழ்வை மலேசியாவில் பிரமாண்டமாக நடத்திய டத்தோ அப்துல் மாலிக்கின் மனித நேயத்தை பாராட்டி தேசம் ஐக்கான் விருது வழங்கி கெளரவிப்பு!

மலேஷியாவின் திரைப்படத் தயாரிப்பாளரும், திரைப்பட வினியோகஸ்தரும்,தொழில் அதிபருமான டத்தோ அப்துல் மாலிக் புகழ் பெற்று விளங்கி வருகிறார். தமிழ்...

செல்வராகவன் நடித்துள்ள மனிதன் தெய்வமாகலாம் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ்!

செல்வராகவன் நடித்துள்ள புதிய திரைப்படமான மனிதன் தெய்வமாகலாம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில்,...

மேட் இன் கொரியா சினிமா விமர்சனம்

எளிமையான குடும்பத்துப் பெண் செண்பகத்துக்கு சிறுவயதிலிருந்தே கொரியாவுக்கு போகவேண்டும் என்பது ஆசை. அந்த ஆசை, அவர் ஒருவரை காதலிக்கும்...

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் தமிழ்க்குமரன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்பில் உற்சாகமாக நடந்த ரூம் பாய் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா! 

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க, திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள 'ரூம் பாய்'...

More like this

ஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளியிட்டு நிகழ்வை மலேசியாவில் பிரமாண்டமாக நடத்திய டத்தோ அப்துல் மாலிக்கின் மனித நேயத்தை பாராட்டி தேசம் ஐக்கான் விருது வழங்கி கெளரவிப்பு!

மலேஷியாவின் திரைப்படத் தயாரிப்பாளரும், திரைப்பட வினியோகஸ்தரும்,தொழில் அதிபருமான டத்தோ அப்துல் மாலிக் புகழ் பெற்று விளங்கி வருகிறார். தமிழ்...

செல்வராகவன் நடித்துள்ள மனிதன் தெய்வமாகலாம் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ்!

செல்வராகவன் நடித்துள்ள புதிய திரைப்படமான மனிதன் தெய்வமாகலாம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில்,...

மேட் இன் கொரியா சினிமா விமர்சனம்

எளிமையான குடும்பத்துப் பெண் செண்பகத்துக்கு சிறுவயதிலிருந்தே கொரியாவுக்கு போகவேண்டும் என்பது ஆசை. அந்த ஆசை, அவர் ஒருவரை காதலிக்கும்...
error: Content is protected !!