இரவு நேரம், இளைஞன் ஒருவன் யாரும் நுழைந்து விட முடியாத அளவுக்கு கண்காணிப்பு வட்டத்துக்குள் இருக்கும் தன் காதலியின் வீட்டுக்குள் சாமர்த்தியமாக நுழைகிறான். காதலனும் காதலியுமாக சேர்ந்து விடிவதற்குள் அந்த வீட்டுக்குள் தங்கியுள்ள, ஒரு நபரைக் கொலை செய்ய திட்டமிடுகிறார்கள். அவர்கள் குறி வைக்கும் நபரைக் கொல்வதற்காக இன்னொரு நபரும் அந்த வீட்டுக்குள் வருகிறார்.
கொலை செய்ய திட்டமிடுகிற அளவுக்கு அந்த நபர் என்ன குற்றம் செய்தார்? திட்டமிட்டபடி கொலை செய்தார்களா? காதலனும் காதலியும் மண வாழ்க்கையில் இணைந்தார்களா? இல்லையா?
இப்படியான கேள்விகளுக்கு பதில்கள் மீதிக் கதையில்… இயக்கம் ராம்பிரபா

