HomeCinemaராவ் பகதூர் (தெலுங்கு) திரைப்பட விமர்சனம்

ராவ் பகதூர் (தெலுங்கு) திரைப்பட விமர்சனம்

Published on

மனித மனதின் உளவியல் சிக்கல்களைப் பேசும் விசித்திரமான பரிசோதனைப் படம்.

ராவ் பகதூர் மாபெரும் ஜமீன் பரம்பரை வாரிசு; தனது இரு மகன்களில் ஒருவர் இறந்துவிட, மனைவியை வீட்டின் ஒரு அறையில் சிறை வைக்கிறார். காலம் கடந்தோட முதுமையடைகிறார். குடிக்கு அடிமையாகி, கல்லீரல் புற்றுநோய் உருவாகி, நோய் முற்றி இன்னும் சில நாட்களில் சில நாட்களில் இறந்து விடுவார் என உறவுகள் எதிர்பார்க்கும் நிலையில் இருக்கிறார். மனநலம் பாதிக்கப்பட்டவர் மாதிரியும் நடந்து கொள்கிறார்.

நோய் முற்றிய பின்னும் அவரது உயிர் பிரியாமல் இருப்பதற்கு, அவர் எதையோ தெரிந்து கொள்ள விரும்புவதுதான் காரணம் என்கிறார்கள். அப்படி எதை தெரிந்து கொள்ள விரும்புகிறார் என்பதையும், அவர் கடந்து வந்த வாழ்க்கைப் பாதையையும் விரிவாக காண்பித்தபடி சுற்றிச் சுழல்கிற படத்தின் பெரும்பகுதி வெரி வெரி இன்ட்ரஸ்டிங்.

இளமைப் பருவம், முதுமைப் பருவம், உடல் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட நிலை, மாயாஜால கற்பனையுலகில் வாழ்கிற நிலை என வயதுக்கும் கதாபாத்திரத்தின் தன்மைக்கும் ஏற்றபடி வித்தியாசமான உடல்மொழியும் அசத்தலான முகபாவங்களும் டயலாக் டெலிவரியுமாக பாராட்டும்படியான நடிப்பால் ராவ் பகதூருக்கு உயிரூட்டியிருக்கிறார் சத்யதேவ்.

ஆணாதிக்கத்தில் சிக்கியிருக்கும் பெண்ணின் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார் பகதூரின் வாழ்க்கைத் துணையாக வருகிற தீபா தாமஸ்.

பகதூரின் ரகசியங்கள் அனைத்தும் அறிந்த ஃபேமிலி டாக்டராக விகாஸ் முப்பாலா, மகன்களில் ஒருவராக சிறுவன் கிரண், இன்னொரு மகனாக பிரணாய் வாகா, போலீஸ் அதிகாரியாக ஆனந்த் பாரதி, வேலைக்காரியாக பாலா பராசர் என ஒவ்வொருவருக்கும் கதையில் பெரியளவில் முக்கியத்துவமிருக்கிறது. அதை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

கார்த்திக் பர்மாரின் நேர்த்தியான ஒளிப்பதிவு அரண்மனையின் பிரமாண்டத்தை, கனவுலக காட்சிகளை அழகாக பதிவு செய்திருக்கிறது. ஸ்மரன் சாயின் பின்னணி இசை மற்றும் அஸ்வின் ராஜசேகரின் ஒலி வடிவமைப்பு படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது.

படு வித்தியாசமான கதை, ரசிக்க வைக்கிற, கலகலப்பூட்டுகிற காட்சிகள், அடடே என்று ஆச்சரியப்பட வைக்கிற கிளைமாக்ஸ் ட்விஸ்ட்… படம் பார்த்து முடித்ததும் வேறோரு உலகத்துக்குள் சென்று கொஞ்ச நேரம் சுற்றித் திரிந்து திரும்பிய உணர்வு ஏற்படும். அதற்காகவே ராவ் பகதூரைப் பார்க்க தியேட்டருக்கு போகலாம்.

Rating 3.5 / 5 

 

 

Latest articles

நிறைய உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்; நல்ல கதையோடு வாருங்கள்! -‘அர்ஜுனன் பேர் பத்து’ பட விழாவில் நடிகர் யோகிபாபு பேச்சு

யோகிபாபு நடித்துள்ள 300 வது படம் அர்ஜுனன் பேர் பத்து. இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில்...

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

Zee Studios  மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு...

தமிழ்வாணன் தயாரித்து நடிக்க ‘போங்கு’ பட இயக்குநர் தாஜ் இயக்கும் புதிய படம் தொடங்கியது!

மலைகளின் இளவரசியான ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைத்து, அந்த மக்களுக்கு...

லெஷ்மிகாந்தன் கொலை வழக்கு சினிமா விமர்சனம்

1978 காலகட்டத்தில் நடக்கிற கதை. கவன ஈர்ப்புக்காக 'மட்டுமே லெட்சுமிகாந்தன் கொலை வழக்கு' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறதே தவிர,...

More like this

நிறைய உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்; நல்ல கதையோடு வாருங்கள்! -‘அர்ஜுனன் பேர் பத்து’ பட விழாவில் நடிகர் யோகிபாபு பேச்சு

யோகிபாபு நடித்துள்ள 300 வது படம் அர்ஜுனன் பேர் பத்து. இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில்...

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

Zee Studios  மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு...

தமிழ்வாணன் தயாரித்து நடிக்க ‘போங்கு’ பட இயக்குநர் தாஜ் இயக்கும் புதிய படம் தொடங்கியது!

மலைகளின் இளவரசியான ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைத்து, அந்த மக்களுக்கு...