HomeCinemaலெஷ்மிகாந்தன் கொலை வழக்கு சினிமா விமர்சனம்

லெஷ்மிகாந்தன் கொலை வழக்கு சினிமா விமர்சனம்

Published on

1978 காலகட்டத்தில் நடக்கிற கதை. கவன ஈர்ப்புக்காக ‘மட்டுமே லெட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறதே தவிர, பிளாக் & ஒயிட் காலத்து எம் கே தியாகராஜ பாகவதருக்கும் என் எஸ் கிருஷ்ணனுக்கும் தொடர்புள்ள கொலை வழக்குக்கும் இந்த படத்தின் கதைக்கும் தொடர்பில்லை.

தொழில்முறை திருடன் அறிவுமதி சர்ந்தர்ப்ப சூழ்நிலையால் ஒருவரை கொலை செய்துவிட, தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது. தூக்கில் போட சில நிமிடங்களே இருக்கும்போது சிறைத்துறை அதிகாரியிடம் நான் செய்தது கொலையென்றால் என்னை துக்கில் போடுவதும் கொலைதான் என்கிறான். அவன் சொல்வது அதிகாரியை யோசிக்க வைக்கிறது.

இந்த நிலையில் ஆடியன்ஸ் தூக்கு தண்டனை ரத்தாகி விடும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கிக் கொள்வதை தவிர்க்க முடியாது. அப்படி எதிர்பார்ப்பது நடக்கிறதா? இல்லை துக்கு தண்டனை நிறைவேறுகிறதா என்பது மீதிக்கதை…

அறிவுமதி யாரை கொலை செய்தான், எதற்காக செய்தான் என்பதெல்லாம் பரபரப்பான ஃபிளாஷ்பேக்.

அறிவுமதியாக வெற்றி. திருடன், கொலை செய்வதற்கான அனைத்து தகுதிகளும் கொண்ட நபரை கொலை செய்தவன், மரண தண்டனையும் கொலைதான் என சிறையதிகாரி முன் துணிச்சலாக பேசுபவன்,பாசமான மகன், பிரியமான கணவன் என அவருக்கான பங்களிப்பை அலட்டிக் கொள்ளாத உடல்மொழியில் பரிமாறியிருக்கிறார்.

குற்றவாளியின் கருத்தை அவனது வாழ்நாளின் கடைசியிலும் காது கொடுத்துக் கேட்கும் பொறுமையான சிறை அதிகாரியாக ரங்கராஜ் பாண்டேவின் நடிப்பு இயல்பாக இருக்கிறது.

பிரிகிடா சகாவுக்கு வெற்றியின் காதலியாக, மனைவியாக மிகச்சில காட்சிகளில் தலை காட்டுகிற வேலை. வழக்கமான கிறங்கடிக்கும் சிரிப்பும் கேரக்டருக்கு பொருத்தமான நடிப்பையும் தந்து போகிறார்.

கந்து வட்டிக் கொடூரன், காமவெறியன் என ஏற்ற பாத்திரத்தில் கெத்து காட்டியிருக்கிறார் கவிதா பாரதி. படத்தின் திரைக்கதை, வசனத்திலும் பங்களித்திருக்கிறார்.

அம்மாவாக லிஸி ஆண்டனியின் நடிப்பு கவனம் பெறுகிறது. சித்தப்பு சரவணன், கன்யா பாரதி, இயக்குநர் சுப்ரமணிய சிவா, லொள்ளுசபா மாறன் என மற்றவர்களின் நடிப்பும், தர்புகா சிவாவின் பின்னணி இசையும், எம் வி பன்னீர்செல்வத்தின் ஒளிப்பதிவும் நேர்த்தி. பாடல்கள் கதையோட்டத்தில் கலந்திருக்கிறது.

தண்டனைகளில் தவிர்க்கப்பட வேண்டியது மரண தண்டனை என்பதை வலியுறுத்துகிற விதமாக தயாள் பத்மநாபன் இயக்கியிருக்கும் இந்த படம் சமூகத்தில் விவாதத்தை உருவாக்க வாய்ப்பிருக்கிறது.

Rating 3 / 5

Latest articles

வெங்கட்ரமணன் பாசக்கார அமைச்சர்! -இயக்குநர் சுரேஷ் நெகிழ்ச்சி

விஜயகாந்த் நடித்த 'பெரியண்ணா', தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்த 'நாகா' படங்களை இயக்கியவர் சுரேஷ். இவர் எஸ்.ஏ. சந்திரசேகரின்...

ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் டீசர் வெளியீடு!

  https://www.youtube.com/watch?v=zF5Ug3GpJZ4 பன்முக தன்மை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் - 'பாகுபலி' போன்ற பிரம்மாண்டமான படங்களை உருவாக்கியவர்கள் - தனித்துவமான...

‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது!

இயக்குநர் ஷிவானி செந்தில் ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்....

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

More like this

வெங்கட்ரமணன் பாசக்கார அமைச்சர்! -இயக்குநர் சுரேஷ் நெகிழ்ச்சி

விஜயகாந்த் நடித்த 'பெரியண்ணா', தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்த 'நாகா' படங்களை இயக்கியவர் சுரேஷ். இவர் எஸ்.ஏ. சந்திரசேகரின்...

ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் டீசர் வெளியீடு!

  https://www.youtube.com/watch?v=zF5Ug3GpJZ4 பன்முக தன்மை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் - 'பாகுபலி' போன்ற பிரம்மாண்டமான படங்களை உருவாக்கியவர்கள் - தனித்துவமான...

‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது!

இயக்குநர் ஷிவானி செந்தில் ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்....