‘சிந்துநதிப் பூ’ செந்தமிழன் திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி இயக்கும் பிடிவாதம் படத்தின் பாடல் பதிவு இன்று துவங்கியது. படத்தில் கதாநாயகனிலிருந்து மற்ற கதாபாதிரங்கள் வரை பிரபலமான நடிகர், நடிகைகள் நடிக்கவிருக்கிறார்கள். படத்தின் கதையை யோகம் எழுதியுள்ளார்.
பேம்ஸ் மீடியா ஜெய் ராம், சிவா மாஸ் சினிமாஸ் யோகம் இணைந்து தயாரிக்கின்றனர்.
படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ”பிடிவாதம்னா முரட்டு வைராக்கியம். கடிவாளம் கட்டுன குதிரை மாதிரி தன் இலக்கை நோக்கி ஓடுற ஹீரோ ஹீரோயினோட பயணம் தான் பிடிவாதம் படத்தோட கதைக் கரு. இது ஒரு ஜாலியான சுவாரஸ்யமான படம்.
வரும் நவம்பர் மாதம் படப்பிடிப்பை வடலூரில் துவங்கி, ஒரே செட்யூலில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம். அடுத்த ஆண்டு மே மாதம் 1ம் தேதி தொழிலாளர் தினத்தில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
படக்குழு:
ஒளிப்பதிவு: முத்ரா
இசை: விஜய் மந்தாரா
எடிட்டிங்: நவீன் குமார்

