HomeCinemaமலைக்கிராமத்தில் பாலியல் வன்முறை வெறியாட்டம்; காரணம் யார்? பரபரப்பு கூட்டும் உண்மைச் சம்பவ பின்னணியில் உருவான...

மலைக்கிராமத்தில் பாலியல் வன்முறை வெறியாட்டம்; காரணம் யார்? பரபரப்பு கூட்டும் உண்மைச் சம்பவ பின்னணியில் உருவான ‘தி ஐ -3’ ரிலீஸுக்கு தயார்!

Published on

குரு பிரகாஷ் இயக்கத்தில் ‘ஶ்ரீ ஸ்வர்ணலட்சுமி மூவிஸ்’ கொடைக்கானல் ஆர்.ராஜேந்திரன் தயாரிக்கும் படம் ‘தி ஐ -3.’

ரோஷன் – சந்தியா கதாநாயகன் நாயகியாக நடிக்க ரமேஷ், மாலி, சுஜி, ஸ்ரீ, சாய் கோபி, லோகேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒரு மலைக்கிராமத்தில் அதிர்ச்சிக்கு உள்ளாகும் வகையில் சில சம்பவங்கள் நடைபெறுகிறது. இளம் பெண்கள், காதலர்கள், பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். போலீஸ் அதிகாரிகளும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர். இச்சூழ்நிலையில் தொழிலதிபர் ராகவன் மீது போலீசுக்கு சந்தேகம் எழுகிறது. ஆனால் அதற்கான ஆதாரம் ஏதும் இல்லாததால் மாற்று வழியை கையாளுகின்றனர். அது என்ன வழி? கொலையாளிகள் யார்? என்று பல கோணங்களில் துப்பு துலக்கப்பட்டு கண்டுபிடிக்கப்படுவதே படத்தின் திரைக்கதை.

படப்பிடிப்பு தேனி மாவட்டம் மேகமலை, தாண்டிக்குடி, கொடைக்கானல், சின்னமனூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் 45 நாட்களாக இடைவிடாது நடைபெற்று முடிவடைந்தது. இதுவரை யாரும் சென்றிடாத இடமான தேனி மாவட்டத்திலுள்ள மேகமலையில் முழு நீள சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது.

‘பாபிலோனா தொடாத பருவத்தோட்டம்’ எனும் துள்ளலிசைப் பாடல், ‘உனக்குள் நான் தொலைந்து போனேன்’ எனும் மென்மையான காதல் பாடல் உட்பட படத்தில் மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளன.  இடம் பெற்றுள்ளது.

பட வெளியீட்டுக்கான அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில் படம் விரைவில் வெளியாகவுள்ளது.

படக்குழு:-

கதை  திரைக்கதை இயக்கம் – குரு பிரகாஷ்
இணைத்தயாரிப்பு – செல்வ சத்யா, ரஞ்சிதா
வசனம் -முத்துக்குமார்
ஒளிப்பதிவு – ராஜேஷ் குமார்
இசை -ஜீவா வர்ஷினி
பாடல்கள் -காதல் மதி
எடிட்டிங் – சி.எஸ் பிரேம்குமார்
நடனம் – விமல்
சண்டைப்பயிற்சி – ரவி ராஜ்
மக்கள் தொடர்பு -வெங்கட்

Latest articles

இந்தக் குழுவுடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் பணியாற்ற வேண்டும்! -இதயம் முரளி படத்தின் வெற்றி விழாவில் விருப்பம் தெரிவித்த நடிகை கயாது லோகர் 

அதர்வா நடிக்க, ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கிய 'இதயம் முரளி' திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துகொள்ள...

‘நெக்ஸா இந்தியன் ஸ்ட்ரீமிங் அகாடமி விருதுகள்’ விழாவில் சிறந்த இசையமைப்பாளராக கௌரவிக்கப்பட்ட சாம் சி எஸ்!

இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம்...

மூன்றாம் முறை தேசிய விருது… ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு பாடகர் வேல்முருகன் காசு மாலையுடன் பாராட்டு!

நேற்று (19 ஜூலை 2026) அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில்  ஜி.வி. பிரகாஷ்குமார் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்குத் தேர்வு...

46 ஆண்டுகால திரைப்பயணத்தில் மேலும் ஒரு மகுடம் சூட்டிய ‘அமரன்’ – 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் மூன்று விருதுகளை வென்றது!

இந்திய திரையுலகில் நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தனது தனித்துவமான கலைப் பார்வையால் அழியாத...

More like this

இந்தக் குழுவுடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் பணியாற்ற வேண்டும்! -இதயம் முரளி படத்தின் வெற்றி விழாவில் விருப்பம் தெரிவித்த நடிகை கயாது லோகர் 

அதர்வா நடிக்க, ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கிய 'இதயம் முரளி' திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துகொள்ள...

‘நெக்ஸா இந்தியன் ஸ்ட்ரீமிங் அகாடமி விருதுகள்’ விழாவில் சிறந்த இசையமைப்பாளராக கௌரவிக்கப்பட்ட சாம் சி எஸ்!

இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம்...

மூன்றாம் முறை தேசிய விருது… ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு பாடகர் வேல்முருகன் காசு மாலையுடன் பாராட்டு!

நேற்று (19 ஜூலை 2026) அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில்  ஜி.வி. பிரகாஷ்குமார் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்குத் தேர்வு...