HomeCinemaகன்னட திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ புரந்தனா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் தமிழ்த் திரையுலகில் தனது...

கன்னட திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ புரந்தனா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் தமிழ்த் திரையுலகில் தனது முதல் படத்தை தயாரிக்கிறது!

Published on

கன்னட திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ புரந்தனா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ், தனது மிகப்பெரிய வெற்றிப் படமான ’S/o முத்தண்ணா’ மூலம் பரவலாக அறியப்பட்டது. தற்போது ’எம்ஜிஆர்’ என்ற புதிய படத்தை தயாரித்து வருகிறது. தயாரிப்பாளர் ஹரி பிரசாத் பி.வி தலைமையிலான இந்த நிறுவனம், தற்போது தமிழ் திரையுலகில் தனது பயணத்தை தொடங்குகிறது.

இந்த புதிய படத்தின் கதாநாயகனுக்காக தமிழ் திரையுலகின் பல முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் செல்வராகவனும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தயாரிப்பு நிறுவனத்துடன் ’S/o முத்தண்ணா’ மற்றும் ’எம்ஜிஆர்’ படங்களில் இணைந்து பணியாற்றிய திறமையான இயக்குநர் ஸ்ரீகாந்த் ஹுன்சூர் இன்னும் பெயரிடப்படாத இந்த புதிய தமிழ் படத்தை இயக்குகிறார்.

ஸ்ரீ புரந்தனா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் ஹரி பிரசாத் கூறுகையில், “இந்திய சினிமாவில் தமிழ் சினிமா துறைக்கென்று எப்போது சிறப்பான இடம் உண்டு. புதுமை, சிறந்த கதைகள் மற்றும் தனித்துவமான படங்கள் ஆகியவற்றிற்காக தமிழ் சினிமா கொண்டாடப்படுகிறது. தமிழ் சினிமாவில் ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என்ற என்னுடைய நீண்டநாள் கனவு இந்தப் படம் மூலம் நிறைவேறுவது மகிழ்ச்சி. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் இந்த படத்திற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

இந்த புதிய படத்தில் நடிகர் செல்வராகவன் இணைந்திருப்பது கூடுதல் பலம். அவரின் திறமையான நடிப்பு, திரை ஆளுமை மற்றும் சினிமாவிற்கான அர்ப்பணிப்பு ஆகியவை இந்த படத்திற்கு பெரும் பலமாக இருக்கும். இப்படத்திற்கு கன்னட திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான சரண் ராஜ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை ஸ்கேட்டிங் கிருஷ்ணா மேற்கொள்கிறார்.

படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரைப் பற்றிய மேலும் பல சுவாரஸ்யமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்” என்றார்.

ஹோம்பாலே ஃபிலிம்ஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் போன்ற அண்டை திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்து பான் இந்திய படங்களின் வெற்றி விகிதத்தை அதிகமாக்கியுள்ளது. அந்த வரிசையில் இணைகிறது ஸ்ரீ புரந்தனா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ்.

Latest articles

இந்தக் குழுவுடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் பணியாற்ற வேண்டும்! -இதயம் முரளி படத்தின் வெற்றி விழாவில் விருப்பம் தெரிவித்த நடிகை கயாது லோகர் 

அதர்வா நடிக்க, ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கிய 'இதயம் முரளி' திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துகொள்ள...

‘நெக்ஸா இந்தியன் ஸ்ட்ரீமிங் அகாடமி விருதுகள்’ விழாவில் சிறந்த இசையமைப்பாளராக கௌரவிக்கப்பட்ட சாம் சி எஸ்!

இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம்...

மூன்றாம் முறை தேசிய விருது… ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு பாடகர் வேல்முருகன் காசு மாலையுடன் பாராட்டு!

நேற்று (19 ஜூலை 2026) அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில்  ஜி.வி. பிரகாஷ்குமார் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்குத் தேர்வு...

46 ஆண்டுகால திரைப்பயணத்தில் மேலும் ஒரு மகுடம் சூட்டிய ‘அமரன்’ – 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் மூன்று விருதுகளை வென்றது!

இந்திய திரையுலகில் நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தனது தனித்துவமான கலைப் பார்வையால் அழியாத...

More like this

இந்தக் குழுவுடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் பணியாற்ற வேண்டும்! -இதயம் முரளி படத்தின் வெற்றி விழாவில் விருப்பம் தெரிவித்த நடிகை கயாது லோகர் 

அதர்வா நடிக்க, ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கிய 'இதயம் முரளி' திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துகொள்ள...

‘நெக்ஸா இந்தியன் ஸ்ட்ரீமிங் அகாடமி விருதுகள்’ விழாவில் சிறந்த இசையமைப்பாளராக கௌரவிக்கப்பட்ட சாம் சி எஸ்!

இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம்...

மூன்றாம் முறை தேசிய விருது… ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு பாடகர் வேல்முருகன் காசு மாலையுடன் பாராட்டு!

நேற்று (19 ஜூலை 2026) அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில்  ஜி.வி. பிரகாஷ்குமார் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்குத் தேர்வு...