தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, சிவா ஆறுமுகம் கதை, திரைக்கதை எழுதி இயக்கும் படம் ‘நிழற்குடை.’
படத்தில் விஜித் கதாநாயகனாகவும், கண்மணி மனோகரன் கதாநாயகியாகவும் முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர், மனோஜ் குமார், வடிவுக்கரசி, கவிதா ரவி, அக்ஷரா ஆகியோருடன் நிஹாரிகா, அஹானா என்கிற இரண்டு குழந்தை நட்சத்திரங்களும் நடிக்கின்றனர். தர்ஷன் என்ற இளைஞர் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.
தர்ஷன் பிலிம்ஸ் ஜோதி சிவா தயாரிக்கும் இந்த படம் இன்றைய இளைய சமூகம் வெளிநாட்டு மோகத்தால் தங்கள் குடும்ப உறவுகளையும் பெற்றோரையும் தங்கள் குழந்தைகளையும் காப்பதில் இருந்து எப்படி எல்லாம் தடம் மாறுகிறார்கள், அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதை குடும்பப் பின்னணியில், எதிர்பாராத திருப்பங்களுடன், மர்ம முடிச்சுகளுடன் திரில்லர் படமாக உருவாகியுள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடைபெற்று நிறைவடைந்ததையடுத்து, பட ரீலீஸுக்கான பணிகள் நடந்து வருகிறது. படம் விரைவில் வெளிவரவிருக்கிறது.
படக்குழு:-
இசை: நரேன் பாலகுமார்
ஒளிப்பதிவு:ஆர்.பி குருதேவ்
கலை இயக்குநர்: விஜய் ஆனந்த்
படத்தொகுப்பு: ரோலக்ஸ்
மக்கள் தொடர்பு: ஏ.ஜான்

