HomeGeneral ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் இது போன்றதொரு மாஸான திரைப்படம் அவசியம் தேவை! -'தி பாரடைஸ்' திரைப்படத்தின் பத்திரிகையாளர்...

 ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் இது போன்றதொரு மாஸான திரைப்படம் அவசியம் தேவை! -‘தி பாரடைஸ்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி

Published on

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்து, வரும் 24-ம் தேதி  உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில் நடிகர் நானி பேசுகையில்,
 ”தி பாரடைஸ் திரைப்படம் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நான் நல்ல நடிகரா? இல்லையா? என்று எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு ஒரு விசயம் மட்டும் தெரியும். நான் உங்களைப் போன்ற ஒரு நல்லதொரு பார்வையாளன்.
ஒரு பார்வையாளராக மாஸான திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அது போன்றதொரு திரைப்படங்கள்  வெளியாவது குறைவு. அப்படி ஒரு பிரம்மாண்டமான மாஸான திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்து ரசிக்க வேண்டும் என ஆவலுடன் காத்திருக்கிறேன். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் திரைப்படம் தான் ‘தி பாரடைஸ்’.
ஒவ்வொரு ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் இது போன்றதொரு மாஸான திரைப்படம் அவசியம் தேவை.‌ இந்தப் படம் அப்படிப்பட்டதொரு திரைப்படம். இதை நான் நம்பிக்கையுடன் சொல்கிறேன். இதனை நீங்கள் 24 ஆம் தேதி திரையரங்குகளுக்கு வந்து, இந்த படத்தை பார்த்த பிறகு சொல்வீர்கள்.‌
இந்த படத்தில் அழுத்தமான எமோஷன்களை பற்றி பேசி இருக்கிறோம். அதே தருணத்தில் திரையரங்குகளில் பார்த்து ரசிக்கும் அற்புதமான அனுபவங்களையும் வழங்கி இருக்கிறோம்.
தமிழ் திரைப்படங்கள் எனக்கு ஒரு பைபிள் மாதிரி. என்னுடைய சினிமா அறிவிற்கும்… என்னுடைய சினிமா மீதான ஆர்வத்திற்கும்.. என்னுடைய சினிமா மீதான காதலுக்கும்… சினிமா மீது பிரியம் வந்ததற்கும்… தமிழ் சினிமாவில் உள்ள கலைஞர்கள் தான் இன்ஸ்பிரேசன். அதிலும் கமல்ஹாசன்- மணிரத்னம்- பாக்கியராஜ்- பாரதிராஜா-  என பல சாதனையாளர்களை குறிப்பிடலாம்.
நான் ஒவ்வொரு முறையும் சென்னைக்கு வருகை தரும் போதெல்லாம் என்னுடைய திரை குடும்பத்திற்கு வந்தது போன்று உணர்வு எழும். எனக்கும், கடந்த காலத்தில் சென்னைக்கும், தமிழ்நாட்டிற்கும் நிறைய தொடர்பு உண்டு. என் மீது தமிழ் ரசிகர்கள் மட்டும் அன்பும் அதிகம். அதனை நான் பல தருணங்களில் உணர்ந்திருக்கிறேன்.
நான் என்னுடைய படத்திற்கு தமிழில் பின்னணி குரலில் பேசுவதற்கு தமிழ் ரசிகர்கள் மீதான பேரன்பு தான் காரணம்.
என்னுடைய திரையுலக பயணத்தில் மிகவும் கடினமாக உழைத்த திரைப்படம் ‘தி பாரடைஸ்’. என்னுடைய திரையுலக பயணத்தில் நான் பெரிதும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கும் திரைப்படமும் இதுதான்.‌
நான் நம்பிக்கையுடன் சொல்கிறேன் 24ஆம் தேதி திரையரங்குகளில் உங்களுக்காக தரமான சம்பவம் காத்திருக்கிறது.
அடுத்த முறை நான் என்னுடைய படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக சென்னைக்கு வரும்போது, ரசிகர்கள் அனைவரும் என்னை ‘தி பாரடைஸ்’ படத்தில் நடித்திருக்கும் ‘ஜடல்’ என்ற கேரக்டர் பெயரை சொல்லித்தான் அழைப்பீர்கள்” என்றார்.
இயக்குநர் ஸ்ரீகாந்த் வோடேலா பேசுகையில்,
 ”எனக்கு தமிழ் தெரியாது. அடுத்த படத்தில் தமிழை கற்றுக்கொண்டு பேசுகிறேன். இந்த திரைப்படம் தாயை பற்றியும்… புரட்சியைப் பற்றியும்… பேசும் திரைப்படம். இந்த வகையிலான திரைப்படம் ரசிகர்களுடன் அதிகமாக எளிதில் தொடர்பு கொள்ளும் என நம்புகிறோம்” என்றார்.
நிகழ்வில் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா- நடிகர்  நானி ஆகியோர் பதிலளித்தனர். சென்னையில் உள்ள நானியின் ரசிகர்களுக்காக ‘தி பாரடைஸ்’ படத்திற்கான பிரத்யேக காட்சிக்குரிய முதல் டிக்கெட்டை நானி அறிமுகப்படுத்தினார்.

Latest articles

இயக்குநர் பேரரசு, நடிகர் ரவிக்குமார் எழுதிய இரண்டு புத்தகங்களை வெளியிட்டார்!

எழுத்தாளராக அவதாரம் எடுத்துள்ள நடிகர் ரவிக்குமார், தான் எழுதிய 'நான் ராமசாமி பேசுறேங்க', 'மகிழ்வித்து மகிழ்' இரண்டு புத்தகங்களுக்கும்...

சண்டக்காரி சினிமா விமர்சனம்

ஜாலியாய் பார்த்து ரசிக்க ஒரு படம். லண்டனில் ஒரு பெரு நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞன் வெற்றியை, அவரது உயரதிகாரி மாயா...

கோல்ட் கால் சினிமா விமர்சனம்

ஒரு விஷயத்தை பலரும் நம்புவதால் அதில் உண்மை இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்படியொரு கருத்தை புதுமுகங்களின் நடிப்பில்...

More like this

இயக்குநர் பேரரசு, நடிகர் ரவிக்குமார் எழுதிய இரண்டு புத்தகங்களை வெளியிட்டார்!

எழுத்தாளராக அவதாரம் எடுத்துள்ள நடிகர் ரவிக்குமார், தான் எழுதிய 'நான் ராமசாமி பேசுறேங்க', 'மகிழ்வித்து மகிழ்' இரண்டு புத்தகங்களுக்கும்...

சண்டக்காரி சினிமா விமர்சனம்

ஜாலியாய் பார்த்து ரசிக்க ஒரு படம். லண்டனில் ஒரு பெரு நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞன் வெற்றியை, அவரது உயரதிகாரி மாயா...