HomeCinemaமனிதன் தெய்வமாகலாம் சினிமா விமர்சனம்

மனிதன் தெய்வமாகலாம் சினிமா விமர்சனம்

Published on

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நல்லது செய்கிறவர்களை மக்கள் தெய்வமாக நினைப்பதுண்டு. இந்த கதையின் ஹீரோ ராகவன் சில கொலைகள் செய்கிறார். அதனால் தெய்வமாகிறார். அது எப்படி என்பதும், ஏன் கொலைகள் செய்கிறார் என்பதும் கதையோட்டம்…

ராகவனாக, அப்பாவி கிராமத்து மனிதராக வருகிறார் இயக்குநர் செல்வராகவன். மனைவியோடு மகிழ்ச்சியான வாழ்க்கை, புதிதாய் துவங்கிய ஹோட்டல் பிஸினஸில் பரபரப்பு என்றிருக்கிற அவருக்கு எம் எல் ஏ’வின் மச்சானுடன் பகை உருவாகிறது. ஒரு கட்டத்தில் தான் உயிருக்கு உயிராய் நேசித்த இரண்டு பேரின் மரணத்திற்கு அவர் காரணமாகிவிட அரிவாளைத் தூக்குகிறார். நடிப்பில் ஏற்கனவே இதேபோல் அநியாய அக்கிரமக் காரர்களை வதம் செய்த அனுபவத்தை ரீப்பீட் செய்திருக்கிறார். பாச நேசத்தை வெளிப்படுத்தியிருக்கும் விதத்தில் குறையில்லை.

குஷி ரவி லட்சணமாக இருக்கிறார்; கிராமத்துப் பெண் கேரக்டருக்கு பொருந்திப் போகிறார். செல்வராகவனுக்கு மனைவியாக வருகிற அவரருக்கு உணர்வுபூர்வமாகவும் உணர்ச்சியைக் கொட்டியும் நடிக்க வாய்ப்பிருக்கிறது. பாராட்டும்படி நடித்திருக்கிறார்.

கஷ்டத்திலிருக்கிற குடும்பப் பெண்களுக்கு வட்டிக்கு பணம் கொடுப்பதும், திருப்பிக் கொடுக்க முடியாத பெண்களை காமப்பசிக்கு பயன்படுத்துவதுமாக மைம் கோபிக்கு எந்தவித தனித்துவமும் இல்லாத வில்லன் வேடம். வழக்கமான உருட்டல் மிரட்டல் இருக்கிறது.

செல்வராகவனுக்கு அக்காவாக கெளசல்யா. ஒரு காலத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர். வயதின் முதிர்ச்சி முகத்தில் தெரிகிறது. அதற்கேற்ப முதிர்ச்சியான கேரக்டரில் கவனிக்க வைக்கிறார்.

செல்வராகவன் தன் சொந்த குழந்தைபோல் பிரியம் வைத்திருக்கிற சிறுமியிலிருந்து மற்ற கதாபாத்திரங்களில் வருகிற அத்தனைப் பேரின் நடிப்பிலும் யதார்த்தமிருக்கிறது.

ஏ கே பிரியன் கதையின் போக்கைப் பலப்படுத்தும் விதமாக பின்னணி இசையைத் தந்திருக்க, ரவிவர்மா தன் ஒளிப்பதிவில் காட்சிகளை நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார்.

குற்றச் செயல்களை கெத்தாக செய்கிற ஒருவனால், நல்லவன் ஒருவன் நேரடியாக பாதிக்கப்பட்டால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை பல படங்களில் பார்த்தாயிற்று. அதையே மீண்டும் சிறுசிறு மாற்றங்களுடன் வழங்கியிருக்கிறார் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத்.

மனிதன் தெய்வமாகலாம் – கதைக்கேற்ற நடிகர் நடிகைகளின் பொருத்தமான நடிப்பால் ஓரளவு திருப்தியாகலாம்!

Rating 2.5 / 5

 

 

Latest articles

வெங்கட்ரமணன் பாசக்கார அமைச்சர்! -இயக்குநர் சுரேஷ் நெகிழ்ச்சி

விஜயகாந்த் நடித்த 'பெரியண்ணா', தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்த 'நாகா' படங்களை இயக்கியவர் சுரேஷ். இவர் எஸ்.ஏ. சந்திரசேகரின்...

ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் டீசர் வெளியீடு!

  https://www.youtube.com/watch?v=zF5Ug3GpJZ4 பன்முக தன்மை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் - 'பாகுபலி' போன்ற பிரம்மாண்டமான படங்களை உருவாக்கியவர்கள் - தனித்துவமான...

‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது!

இயக்குநர் ஷிவானி செந்தில் ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்....

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

More like this

வெங்கட்ரமணன் பாசக்கார அமைச்சர்! -இயக்குநர் சுரேஷ் நெகிழ்ச்சி

விஜயகாந்த் நடித்த 'பெரியண்ணா', தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்த 'நாகா' படங்களை இயக்கியவர் சுரேஷ். இவர் எஸ்.ஏ. சந்திரசேகரின்...

ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் டீசர் வெளியீடு!

  https://www.youtube.com/watch?v=zF5Ug3GpJZ4 பன்முக தன்மை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் - 'பாகுபலி' போன்ற பிரம்மாண்டமான படங்களை உருவாக்கியவர்கள் - தனித்துவமான...

‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது!

இயக்குநர் ஷிவானி செந்தில் ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்....