HomeGeneralநான் ஏற்று நடித்ததிலேயே தவசிமுத்து கதாபாத்திரம் மிகவும் சவாலானது! -‘என்ன விலை’ படம் குறித்து நடிகர்...

நான் ஏற்று நடித்ததிலேயே தவசிமுத்து கதாபாத்திரம் மிகவும் சவாலானது! -‘என்ன விலை’ படம் குறித்து நடிகர் கருணாஸ்

Published on

தமிழ்த் திரையுலகில் 25 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நடிகர் கருணாஸ், தொடர்ந்து பல்வேறு கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். பல்வேறு மறக்க முடியாத கதாபாத்திரங்கள் மூலம் தனக்கென தனியிடத்தைப் பிடித்துள்ள அவர், தற்போது தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் சஜீவ் பழூரின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தில் சவால் நிறைந்த, உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ராமேஸ்வரம் அருகே கடலில் பக்தர்கள் காணிக்கையாக வீசும் நாணயங்களை மீட்டெடுக்கும் நாணய மீட்பாளரான தவசிமுத்து கதாபாத்திரத்தில் இந்த படத்தில் கருணாஸ் நடித்துள்ளார். செப்டம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படம், வித்தியாசமான வாழ்வாதாரத்தை மையமாகக் கொண்ட கதையையும், கண்ணியத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ்வதற்கான போராட்டத்தையும் பற்றி பேசுகிறது.
இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் கருணாஸ் பகிர்ந்து கொண்டுள்ளார், “தவசிமுத்து கதாபாத்திரம் என்னிடம் முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையை எதிர்பார்த்தது. அவரது வாழ்க்கையும் வாழ்வாதாரமும் கடலுடன் மிகவும் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்திருக்கின்றன. அவர் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் படிப்படியாக அவரை மிகப்பெரிய போராட்டத்திற்குள் அழைத்துச் செல்கின்றன. இந்தக் கதாபாத்திரத்தை எனக்குச் சிறப்பானதாக மாற்றியது, அவர் கடந்து செல்லும் உணர்வுப்பூர்வமான பயணம்தான். ‘என்ன விலை’ திரைப்படத்தின் கருவாக வாழ்வாதாரம், கண்ணியம், சுயமரியாதையுடன் வாழ்வதற்கான உரிமை ஆகியவற்றை பேசுகிறது. ஒரு நடிகராக இந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததில் மிகவும் மகிழ்ச்சி”
மேலும் அவர் பகிர்ந்து கொண்டதாவது, “சஜீவ் பழூர் மிகவும் தெளிவான பார்வையுடன் இந்தக் கதையை எழுதியுள்ளார். உணர்வுப்பூர்வமான மைய கதையை சமரசம் செய்யாமல், வலுவான சமூக கருத்தையும் இதில் பேசியுள்ளார். கதாபாத்திரங்கள் மற்றும் அவை சார்ந்த உலகத்தைப் பற்றிய அவரது புரிதல், இந்தப் படப்பிடிப்பு அனுபவத்தை எனக்கு மிகவும் சுவாரஸ்யமானதாக மாற்றியது. நிமிஷா சஜயன் மற்றும் படத்தின் மற்ற நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியதும் சிறப்பான அனுபவமாக இருந்தது. ஒரு சாதாரண மனிதன் எதிர்கொள்ளும் அசாதாரணமான சூழ்நிலையை மிகவும் அழுத்தமாகப் பேசுவதால், ‘என்ன விலை’ திரைப்படத்தை நிச்சயம் ரசிகர்கள் தங்களுடன் பொருத்தி பார்ப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

Latest articles

துருவ் விக்ரம் நடிக்கும் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்’...

இசைஞானி இளையராஜா பங்கேற்பில் உற்சாக கொண்டாட்டமாக நடந்த ‘லெனின் பாண்டியன்’ படத்தின் முன் வெளியீட்டு விழா!

அறிமுக டி டி பாலச்சந்திரன் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில் உருவான திரைப்படம் 'லெனின் பாண்டியன்.' தர்ஷன் கணேசன், கங்கை...

நடிகர் முத்துக்காளையின் மகன் ஸ்டண்ட் யூனியனில் சேர்ந்தார்!

தன்னை நடிகனாக உருவாக்கிய ஸ்டண்ட் யூனியனுக்கு நன்றி சொன்னார் நடிகர் முத்துக்காளை. தான் நடிக்க முயற்சி செய்த போது...

More like this

துருவ் விக்ரம் நடிக்கும் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்’...

இசைஞானி இளையராஜா பங்கேற்பில் உற்சாக கொண்டாட்டமாக நடந்த ‘லெனின் பாண்டியன்’ படத்தின் முன் வெளியீட்டு விழா!

அறிமுக டி டி பாலச்சந்திரன் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில் உருவான திரைப்படம் 'லெனின் பாண்டியன்.' தர்ஷன் கணேசன், கங்கை...

நடிகர் முத்துக்காளையின் மகன் ஸ்டண்ட் யூனியனில் சேர்ந்தார்!

தன்னை நடிகனாக உருவாக்கிய ஸ்டண்ட் யூனியனுக்கு நன்றி சொன்னார் நடிகர் முத்துக்காளை. தான் நடிக்க முயற்சி செய்த போது...