HomeCinemaரசிகர்களின் மனம் கவர 'குற்றம் புதிது' மூலம் திரையுலகில் அறிமுகமாகும் நடிகர் தருண் விஜய்!

ரசிகர்களின் மனம் கவர ‘குற்றம் புதிது’ மூலம் திரையுலகில் அறிமுகமாகும் நடிகர் தருண் விஜய்!

Published on

தமிழ் சினிமா எப்போதும் ஸ்டைல், அர்ப்பணிப்பு மற்றும் திறமையுள்ளவர்களை  வரவேற்கும். அந்த வகையில் ஆகஸ்ட் 29: 2015 அன்று வெளியாக இருக்கும் ‘குற்றம் புதிது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் நடிகர் தருண் விஜய்.

லெஜெண்ட் நடிகர்கள் புரூஸ் லீ, ஜாக்கி சான் மற்றும் டோனி ஜா போன்ற முகத்தோற்றம் தருண் விஜய்க்கு இருப்பதாக படத்தின் முதல் பார்வை போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடினர். SRM கல்லூரி மாணவர்கள் மத்தியில் தருண் புகழ்பெற்றவராக இருப்பதால் அவரின் ‘குற்றம் புதிது’ பட போஸ்டரை மாணவர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

திருவள்ளூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவரின் மகனான தருண் விஜய் சென்னை போன்ற இந்த பெரும் நகரத்தில் மற்றவர்களைப் போலவே சாதாரண மேன்ஷனில் தங்கி தனது கனவை நிறைவேற்றியுள்ளார். ‘குற்றம் புதிது’ படத்திற்காக கொரில்லா உடல்மொழியை மூன்று மாதங்கள் கற்று தேர்ந்திருக்கிறார் தருண் விஜய். அவரது அர்ப்பணிப்பை பார்த்த பலரும் சிறந்த அறிமுக நடிகருக்கான விருது பெற தகுதியானவர் தருண் எனப் பாராட்டி வருகின்றனர்.

நடிகர் தருண் விஜய் பகிர்ந்து கொண்டதாவது, “சிறுவயதில் இருந்தே எனக்கு தமிழ் சினிமா மிகவும் பிடிக்கும். படங்களில் நடிக்க வேண்டும் என்பதே என் கனவாக இருந்தது. கமல்ஹாசன் சாருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பதே என் மிகப்பெரிய கனவு. ‘குற்றம் புதிது’ படத்தில் என் நடிப்புத் திறனை முழுமையாக வெளிப்படுத்த ஆதரவு கொடுத்த ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி. ரசிகர்களுக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.

‘குற்றம் புதிது’ படத்தில் தருண் விஜயின் தனித்துவமான திறமை, தீவிரமான திரையிருப்பு போன்றவை நிச்சயம் அவரை தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த உயரத்திற்கு எடுத்து செல்லும்.

குடும்பத்தினரையும் பார்வையாளர்களையும் தமிழ் சினிமாவையும் பெருமைப்படுத்துவார்.

Latest articles

ராவ் பகதூர் (தெலுங்கு) திரைப்பட விமர்சனம்

மனித மனதின் உளவியல் சிக்கல்களைப் பேசும் விசித்திரமான பரிசோதனைப் படம். ராவ் பகதூர் மாபெரும் ஜமீன் பரம்பரை வாரிசு; தனது...

நிறைய உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்; நல்ல கதையோடு வாருங்கள்! -‘அர்ஜுனன் பேர் பத்து’ பட விழாவில் நடிகர் யோகிபாபு பேச்சு

யோகிபாபு நடித்துள்ள 300 வது படம் அர்ஜுனன் பேர் பத்து. இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில்...

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

Zee Studios  மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு...

தமிழ்வாணன் தயாரித்து நடிக்க ‘போங்கு’ பட இயக்குநர் தாஜ் இயக்கும் புதிய படம் தொடங்கியது!

மலைகளின் இளவரசியான ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைத்து, அந்த மக்களுக்கு...

More like this

ராவ் பகதூர் (தெலுங்கு) திரைப்பட விமர்சனம்

மனித மனதின் உளவியல் சிக்கல்களைப் பேசும் விசித்திரமான பரிசோதனைப் படம். ராவ் பகதூர் மாபெரும் ஜமீன் பரம்பரை வாரிசு; தனது...

நிறைய உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்; நல்ல கதையோடு வாருங்கள்! -‘அர்ஜுனன் பேர் பத்து’ பட விழாவில் நடிகர் யோகிபாபு பேச்சு

யோகிபாபு நடித்துள்ள 300 வது படம் அர்ஜுனன் பேர் பத்து. இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில்...

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

Zee Studios  மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு...