HomeCinemaஅட்வென்சர், எமோஷனல் ஃபேமிலி கதை என இரண்டையும் சரியாக டேவிட் கையாண்டிருக்கிறார்! -டேவிட் கோப்பின் திரைக்கதை...

அட்வென்சர், எமோஷனல் ஃபேமிலி கதை என இரண்டையும் சரியாக டேவிட் கையாண்டிருக்கிறார்! -டேவிட் கோப்பின் திரைக்கதை பற்றி இயக்குநர் கேரத் எட்வர்ட்ஸ் பெருமிதம்

Published on

ஜுராசிக் உலகத்தில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அடுத்த அத்தியாயமான ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த் ஜூலை 4, 2025 அன்று இந்தியாவில் வெளியாகிறது. உலகம் முழுவதும் ஜூலை 2 அன்று வெளியாகிறது.

மூச்சடைக்க வைக்கும் பிரமாண்டமான காட்சிகள் மற்றும் கதைக்களம் என இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இது உள்ளது. எம்மி விருது வென்ற கரேத் எட்வர்ட்ஸ் இயக்கியுள்ள இந்த ஆக்‌ஷன் அட்வென்ச்சர் படத்தில் அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஸ்கார்லெட் ஜோஹன்சன், எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மற்றும் ஆலிவர் விருது வென்ற ஜொனாதன் பெய்லி, மஹெர்ஷாலா அலி, லூனா பிளேஸ், ரூபர்ட் ஃப்ரெண்ட்எட் ஸ்க்ரீன் மற்றும் டேவிட் லாகோனோ ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் கதை ஜுராசிக் வேர்ல்ட் டொமினியனுக்குப் பிறகு வருகிறது. அங்கு மீதமுள்ள டைனோசர்கள் தனிமைப்படுத்தப்பட்ட அங்கு தன் இனத்தைப் பெருக்கி இருக்கிறது. அந்தச் சூழலில் இருக்கிற மிகப் பிரம்மாண்டமான மூன்று டைனோசர்கள், மனித இனத்துக்கு அதிசயிக்கத்தக்க உயிர்காக்கும் நன்மைகளைக் கொண்டுவரப்போகும் ஒரு மருந்தின் திறவுகோலைக் கொண்டிருக்கின்றன. இதில் நடிகர் ஜொனாதன் பெய்லி தொல்லுயிரியலாளர் டாக்டர் ஹென்றி லூமிஸாகவும் நடிகர் ஸ்கார்லெட் ஜோஹன்சன் திறமையான இரகசிய செயல்பாட்டு நிபுணர் ஜோரா பென்னட்டாகவும் நடித்துள்ளார்கள்.

அவர் உலகின் மூன்று மிகப் பெரிய டைனோசர்களிடமிருந்து மரபணுப் பொருளைப் பாதுகாப்பதற்கான ஒரு உயர் ரகசிய பணியில் திறமையான குழுவை வழிநடத்துகிறார். இது ஒரு குடும்பத்தை பாதிக்கிறது. அந்த குடும்பம் எதிர்பாராத விதமாக ஒரு தீவில் சிக்கித் தவிக்கிறார்கள். அங்கு அவர்கள் பல தசாப்தங்களாக உலகத்திலிருந்து மறைக்கப்பட்ட ஒரு அதிர்ச்சியூட்டும் கண்டுபிடிப்பை நேருக்கு நேர் சந்திக்கிறார்கள்.

டேவிட் கோப்பின் திரைக்கதை பற்றி இயக்குநர் கேரத் எட்வர்ட்ஸ் பகிர்ந்து கொண்டதாவது, “மிஷன் ஸ்டோரியாகத் தொடங்கும் இது சில காரணங்களால் சர்வைவல் கதையாக மாறுகிறது. இருந்தாலும் அட்வென்சர் மற்றும் எமோஷனல் ஃபேமிலி கதை என இந்த இரண்டையும் சரியாக டேவிட் கையாண்டிருக்கிறார். கடல், நிலம் மற்றும் காற்று என பல விதமான சூழல்களில் இந்தக் கதை பயணிக்கிறது. ஒவ்வொரு சூழலிலும் ஒரு சிறுகதைக்கான பரபரப்பும் எமோஷனும் இருக்கும். இது ஜாஸ் போலவும், மற்ற நேரங்களில் இந்தியானா ஜோன்ஸ் போலவும் இது இரண்டிற்கும் இடையில் டேவிட் அட்டன்பரோ படம் போல இயற்கையை கம்பீரமாகக் காட்டி இருக்கிறது.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இந்த திரைக்கதையைப் படிக்கும்போது ஜுராசிக் பார்க்கில் டைனோசர் தாக்குதல் நடத்துவது போன்ற தீவிரமான சூழல் அமைவதற்கான வாய்ப்பு இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் டேவிட்டின் ஸ்கிரிப்ட் நான் நினைத்ததை விடவும் பல வாய்ப்புகளை வழங்கியதால் நான் உற்சாகமடைந்தேன்” என்றார்.

Latest articles

மத்திய அரசு ஓடிடி நடத்தும்போது தமிழ்நாடு அரசால் செய்ய முடியாதா? -’சிலம்பம்’ பட விழாவில் இயக்குநர் மோகன்.ஜி

ஸ்டண்ட் மாஸ்டர் டாக்டர்.ஏ.கே.எஸ்.ஜோதி எழுதி இயக்கிய திரைப்படம் ‘சிலம்பம்.' அறிமுக நடிகர் அஜித் நாயகனாக நடிக்க, வில்லனாக ஹரிஷ்...

மே மாத வெளியீடாக திரைக்கு வருகிறது ரோபோ சங்கர் நடித்துள்ள ‘ஈகோ ராமன்.’

அஸ்ருதா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ரோபோ சங்கர் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'ஈகோ ராமன்.' கதாநாயகனாக சிபி புவனச்சந்திரனும், நாயகியாக...

96, மெய்யழகன் படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சி பிரேம்குமார் இயக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் துவங்கியது. மலையாள திரையுலகின்...

கருப்பு சினிமா விமர்சனம்

காவல்துறையும் நீதித்துறையும் நேர்மையாக செயல்படுவதில்லை என்கிற மோசமான சூழ்நிலையை மாற்ற கருப்பு சாமி, கருப்பு கோட் அணிகிற கதை. ஒரு...

More like this

மத்திய அரசு ஓடிடி நடத்தும்போது தமிழ்நாடு அரசால் செய்ய முடியாதா? -’சிலம்பம்’ பட விழாவில் இயக்குநர் மோகன்.ஜி

ஸ்டண்ட் மாஸ்டர் டாக்டர்.ஏ.கே.எஸ்.ஜோதி எழுதி இயக்கிய திரைப்படம் ‘சிலம்பம்.' அறிமுக நடிகர் அஜித் நாயகனாக நடிக்க, வில்லனாக ஹரிஷ்...

மே மாத வெளியீடாக திரைக்கு வருகிறது ரோபோ சங்கர் நடித்துள்ள ‘ஈகோ ராமன்.’

அஸ்ருதா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ரோபோ சங்கர் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'ஈகோ ராமன்.' கதாநாயகனாக சிபி புவனச்சந்திரனும், நாயகியாக...

96, மெய்யழகன் படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சி பிரேம்குமார் இயக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் துவங்கியது. மலையாள திரையுலகின்...