ரியோ ராஜ் நடிப்பில் ‘ஜோ’ திரைப்படம் உருவாகிற செய்தி வெளியானதிலிருந்தே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உருவாகிவிட்டது. அந்த எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாக, வண்ணமயமான, நேர்த்தியாக வழங்கப்பட்ட படத்தின் விஷூவல் புரோமோவான ‘உருகி உருகி’ என்ற பாடல் அமைந்தது.
அதையடுத்து ‘ஒரே கனா’ என தொடங்கும் பாடலில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தோன்றுவது படத்திற்கு புதிய அதிர்வலையை உருவாக்கியுள்ளது. அஜித் நடித்த ’துணிவு’ படத்தில் ‘சில்லா சில்லா’ என்ற சார்ட் பஸ்டர் ஹிட் பாடலை எழுதிய வைசாக் இந்த பாடலை எழுதியுள்ளார்.
‘அடிபொலி’ என்ற இண்டி பாடல், ’பேச்சுலர்’ படத்தில் ‘அடியே’ உள்ளிட்ட பெப்பி பாடல்களை கொடுத்த சித்து குமார் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார்.
இன்னொரு இசையமைப்பாளர் பாடலில் யுவன் ஷங்கர் ராஜா தோன்றுவது இதுவே முதல்முறை!
‘ஜோ’ படத்தில் ரியோ ராஜ், பவ்யா திரிகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஃபீல் குட் ரொமாண்டிக் என்டர்டெய்னரான இந்தப் படத்தை ஹரிஹரன் ராம்.எஸ் எழுதி இயக்கியுள்ளார். விஷன் சினிமா ஹவுஸின் டாக்டர். டி.அருளானந்து, மேத்வோ அருளானந்து தயாரித்துள்ளனர்.
‘யுவன் ஷங்கர் ராஜா போன்ற ஒரு மியூசிக்கல் லெஜெண்ட் எங்களது படத்தில் இருப்பது படத்தின் எதிர்பார்ப்பையும் மதிப்பையும் உயர்த்தும். அவரது பங்களிப்பு படத்தின் கோல்டன் டச்’ என்று சொல்லி மகிழ்கின்றனர் படக்குழுவினர்.
படம் வரும் நவம்பர் 24-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

