HomeMovie Reviewப்ராமிஸ் சினிமா விமர்சனம்

ப்ராமிஸ் சினிமா விமர்சனம்

Published on

‘குடி காதலைக் கெடுக்கும்’ என்ற ஒன்லைனில் சமூக விழிப்புணர்வுப் படைப்பாக ‘ப்ராமிஸ்.’

குடிக்க மாட்டேன் என காதலிக்கு செய்து கொடுத்த ப்ராமிஸை மீறுகிறான் நாயகன் மித்ரன். அவன் திருந்த மாட்டான் என்பதை தெரிந்துகொள்ளும் காதலி லெஷ்மி அவனுக்கு பை பை சொல்கிறாள். மித்ரன் அந்த பிரிவின் வலிக்கு மதுவை மருந்தாக எடுத்துக் கொள்கிறான். அளவுக்கதிகமான மது விஷமாகிறது; உயிரே போய்விடும் என்கிற அளவுக்கு நிலைமை மோசமாகிறது. அப்படியே அவனை விட்டுவிட மனமில்லாத லெஷ்மி, அவன் மீது அன்பையும் தாலிக்கு கழுத்தையும் காட்டி அவனை மீட்கிறாள். மகிழ்ச்சியாக வாழ்ந்து கர்ப்பமாகிறாள்.

நல்ல விஷயம் நடந்துள்ள நிலையில், விதி யாரை விட்டது என்பது போல் பேராபத்தான எச் ஐ வி அவனைத் தொற்றியதாக மெடிக்கல் ரிப்போர்ட் அதிர்ச்சி தருகிறது. மித்ரன் குடிகாரன்தான் என்றாலும் எச் ஐ வி பாதிக்கிற அளவு தவறான பாதையில் போகவில்லை என்பது முக்கியச் செய்தி.

சரி, எச் ஐ வி உடல் ரீதியான உறவால் மட்டும் வருவதல்ல என்பதால், வேறு எப்படி வந்திருக்கும் என்பதும், அதனால் மித்ரன் சந்திக்கும் விளைவுகளும் கதையின் மீதியாக பயணிக்கிறது.

குடிகாரனாக, குடியிலிருந்து திருந்தியவராக, நோய் பாதிப்பு என்கிற தகவல் கிடைத்து அதிர்ச்சியிலும் வேதனையிலும் தவிப்பவராக கதைக்குப் பொருந்திய நாயகனாக வலம் வருகிறார் படத்தை தயாரித்து இயக்கியிருக்கிற அருண்குமார் சேகரன்.

தன்னிடம் செய்து கொடுத்த சத்தியத்தை மீறி குடித்து கூத்தடிக்கும் காதலனை வெறுப்பதில் துவங்கி அவனுக்கு மனைவியாகி உற்சாக வாழ்வது, கணவன் வெளியில் சொல்ல முடியாத வியாதிக்கு ஆளானபின் கனிவான பார்த்துக் கொள்வது என கனமான காட்சிகளில் நதியா சோமுவின் நடிப்பில் நல்ல தேர்ச்சி இருக்கிறது. கிராமத்துப் பெண்ணுக்கான லட்சணம் நிரம்பியிருப்பவரின் உடல் இன்னும் கொஞ்சம் தேறினால் கூடுதல் அழகாக தெரிய வாய்ப்பிருக்கிறது.

நாயகன் நாயகியின் உறவினர்கள், நட்பு வட்டத்தினர் என மற்றவர்கள் கேரக்டர்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

சரவண தீபனின் பின்னணி இசை காட்சிகள் பரபரப்பு கூட்ட உதவுகிறது. ‘தேன்மழை சாரலே’ மற்றும் ‘உதிர்கிறேன் நானடி’ உள்ளிட்ட பாடல்களை ரசிக்க முடிகிறது. ஒளிப்பதிவுப் பணியை தரமாக செய்திருக்கிறார் வினோத் குமார்.

குடிபோதை மனிதனை எப்படியெல்லாம் சீரழிக்கும் என்கிற வழக்கமான கதையில், எச் ஐ வி அதுஇதுவென சேர்த்திருக்கும் சம்பவங்கள் ஓரளவு விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறது.

கையாண்டிருப்பது நல்ல சப்ஜெக்ட்தான் என்பதை மறுப்பதற்கில்லை. கால் நூற்றாண்டுக்கு முன் வந்திருந்தால் ப்ராமிஸாக பெரியளவில் கவனம் ஈர்த்திருக்கலாம்.

Rating 2.5 / 5

 

Latest articles

வெங்கட்ரமணன் பாசக்கார அமைச்சர்! -இயக்குநர் சுரேஷ் நெகிழ்ச்சி

விஜயகாந்த் நடித்த 'பெரியண்ணா', தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்த 'நாகா' படங்களை இயக்கியவர் சுரேஷ். இவர் எஸ்.ஏ. சந்திரசேகரின்...

ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் டீசர் வெளியீடு!

  https://www.youtube.com/watch?v=zF5Ug3GpJZ4 பன்முக தன்மை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் - 'பாகுபலி' போன்ற பிரம்மாண்டமான படங்களை உருவாக்கியவர்கள் - தனித்துவமான...

‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது!

இயக்குநர் ஷிவானி செந்தில் ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்....

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

More like this

வெங்கட்ரமணன் பாசக்கார அமைச்சர்! -இயக்குநர் சுரேஷ் நெகிழ்ச்சி

விஜயகாந்த் நடித்த 'பெரியண்ணா', தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்த 'நாகா' படங்களை இயக்கியவர் சுரேஷ். இவர் எஸ்.ஏ. சந்திரசேகரின்...

ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் டீசர் வெளியீடு!

  https://www.youtube.com/watch?v=zF5Ug3GpJZ4 பன்முக தன்மை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் - 'பாகுபலி' போன்ற பிரம்மாண்டமான படங்களை உருவாக்கியவர்கள் - தனித்துவமான...

‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது!

இயக்குநர் ஷிவானி செந்தில் ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்....