HomeCinemaஇசைப்பயணத்தில் 51-ம் ஆண்டில் நுழைந்த 'இசைஞானி' இளையராஜா! பாடல் பதிவுக்கான பரபரப்போடு பத்திரிகையாளர்களைச் சந்தித்து உற்சாகம்.

இசைப்பயணத்தில் 51-ம் ஆண்டில் நுழைந்த ‘இசைஞானி’ இளையராஜா! பாடல் பதிவுக்கான பரபரப்போடு பத்திரிகையாளர்களைச் சந்தித்து உற்சாகம்.

Published on

‘இசைஞானி’ இளையராஜா ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்து, 50 ஆண்டுகளை நிறைவு செய்து 14.5.2026 இன்று 51-வது ஆண்டில் நுழைகிறார். அதையடுத்து அவருக்கு திரையுலகினரிடமிருந்தும், ரசிகர்களிடமிருந்தும் வாழ்த்துக்கள் குவிகிறது.

இந்த நிலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இளையராஜா, ”ஆண்டுகள்தான் கடந்துபோகிறதே தவிர நான் முதல் படத்திற்காக எப்படி ஈடுபாட்டுடன் பணியாற்றினேனோ அதேபோல்தான் இப்போதும் பணிபுரிகிறேன். இப்போதுகூட (உடனிருந்த இயக்குநர் பால்கியை சுட்டிக்காட்டி) இவர் இயக்கும் படத்தின் பாடல் பதிவுக்குத்தான் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன்” என்றார் உற்சாகமாய்.

பத்திரிகையாளர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி, தான் இசையமைத்த முதல் படம் பற்றியும், அன்றைக்கும் இன்றைக்கும் ரசிகர்களின் மனதில் அசைக்கமுடியாத இடம்பெற்றிருக்கிற ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே’ பாடலுக்கு இசையமைத்த விதம் பற்றியும் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

இளையராஜாவின் 51-ம் வருட இசைப்பயணத் துவக்கத்தையொட்டி வாழ்த்த வந்திருந்த இயக்குநர் கே.பாக்யராஜ், பாடலாசிரியர் பா.விஜய் உள்ளிட்டோர் பத்திரிகையாளர் சந்திப்பில் உடனிருந்தனர். பாடலாசிரியர் பா.விஜய் இளையராஜாவுக்கு மாலையணிவித்து, வணங்கி ஆசி பெற்றுக் கொண்டார்.

திரைப்பட பத்திரிகையாளர்கள் இளையராஜாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Latest articles

இந்தக் குழுவுடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் பணியாற்ற வேண்டும்! -இதயம் முரளி படத்தின் வெற்றி விழாவில் விருப்பம் தெரிவித்த நடிகை கயாது லோகர் 

அதர்வா நடிக்க, ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கிய 'இதயம் முரளி' திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துகொள்ள...

‘நெக்ஸா இந்தியன் ஸ்ட்ரீமிங் அகாடமி விருதுகள்’ விழாவில் சிறந்த இசையமைப்பாளராக கௌரவிக்கப்பட்ட சாம் சி எஸ்!

இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம்...

மூன்றாம் முறை தேசிய விருது… ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு பாடகர் வேல்முருகன் காசு மாலையுடன் பாராட்டு!

நேற்று (19 ஜூலை 2026) அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில்  ஜி.வி. பிரகாஷ்குமார் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்குத் தேர்வு...

46 ஆண்டுகால திரைப்பயணத்தில் மேலும் ஒரு மகுடம் சூட்டிய ‘அமரன்’ – 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் மூன்று விருதுகளை வென்றது!

இந்திய திரையுலகில் நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தனது தனித்துவமான கலைப் பார்வையால் அழியாத...

More like this

இந்தக் குழுவுடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் பணியாற்ற வேண்டும்! -இதயம் முரளி படத்தின் வெற்றி விழாவில் விருப்பம் தெரிவித்த நடிகை கயாது லோகர் 

அதர்வா நடிக்க, ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கிய 'இதயம் முரளி' திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துகொள்ள...

‘நெக்ஸா இந்தியன் ஸ்ட்ரீமிங் அகாடமி விருதுகள்’ விழாவில் சிறந்த இசையமைப்பாளராக கௌரவிக்கப்பட்ட சாம் சி எஸ்!

இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம்...

மூன்றாம் முறை தேசிய விருது… ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு பாடகர் வேல்முருகன் காசு மாலையுடன் பாராட்டு!

நேற்று (19 ஜூலை 2026) அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில்  ஜி.வி. பிரகாஷ்குமார் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்குத் தேர்வு...