HomeCinemaஇரவுப் பறவை படம் பார்த்து வி சி க தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்த கருத்து!

இரவுப் பறவை படம் பார்த்து வி சி க தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்த கருத்து!

Published on

வேதாஜி பாண்டியன் இயக்கத்தில் உருவான ‘இரவுப் பறவை’ படத்தின் சிறப்புக் காட்சியை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பார்த்து தனது கருத்துகளைப் பகிர்ந்தார்.

”ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டில் கால் நூற்றாண்டுக்கு மேலாக முகாம்களில் தங்கி வாழ்ந்து வருகிறார்கள். இன்று மறுவாழ்வு மையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

இலங்கையில் குடியுரிமை உண்டு என்றாலும் கூட இந்தியாவில் தமிழ்நாட்டில் பல ஆயிரக்கணக்கானோர் பிறந்து வளர்ந்தவர்கள் உள்ளனர். அவர்களைப் பொறுத்தவரை இதுதான் தாயகம். இச்சூழலில் அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வேண்டும் என்று பரவலாக எழுந்துள்ளது. இக்கருத்தை மையமாக வைத்து இயக்குனர் வேதாஜி பாண்டியன் இயக்கி இருக்கிறார். இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

இலங்கையில் இருந்து தப்பித்து தமிழ்நாட்டுக்கு வந்த இளம் பெண் பல்வேறு காரணங்களால் இன்னல்களுக்கு ஆளாகிறார். இங்கேயே திருமணம் செய்து வாழ வேண்டும் என்று விரும்பினால் கூட பல்வேறு சக்திகளால் இன்னல்களுக்கு ஆளாகிறார். இச்சூழலில் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக முதலமைச்சரை சந்தித்து இம்மண்ணில் வாழ வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார். இந்திய அரசிற்கு எடுத்துச் சென்று குடியுரிமை வழங்குவதாக மசோதா இயற்றி நிறைவேற்றப்பட்டு அந்தப் பெண்மணிக்கும் இங்கு தங்கி இருக்கும் மக்களுக்கும் குடியுரிமை வழங்கப்படுவதாக சொல்லப்படுகிற கதைக் களமாக கொண்டு நண்பர் வேதாஜி பாண்டியன் படத்தை இயக்கியிருக்கிறார்.

இரட்டை குடியுரிமை பல நாடுகளில் தஞ்சம் புகுந்தவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் இஸ்லாமியர் மற்றும் ஈழத் தமிழர்களுக்கும் இல்லை என்று இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆனாலும் கூட திரைப்படத்திற்காக இந்திய பாராளுமன்றத்தில் இரட்டை குடியுரிமை வழங்கியதாக கதையை முடித்திருக்கிறார்.

நம் உறவுகள் தான்,நம் தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டு இருக்கிறார்கள். அவர்களுடைய உணர்வை மதிப்பளித்து கட்டாயம் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன்.”

சத்யா, நந்தினி ,நிழல்கள் ரவி ,சிவா, டாக்டர்.ஆர் பாண்டியன்,இயக்குனர் செல்வகுமாரன் ஆகியோர் கதையின் பாத்திரங்களாக நடித்துள்ளனர்.

ஆர்.பாண்டியன் வழங்க வேதாஜி பாண்டியன் எழுதி இயக்கியிருக்கிறார். பாடல்கள் எழுதி ஆல்வின் கலைபாரதி இசையமைத்திருக்கிறார். எஸ்.பி பகவதி பாலா ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

Latest articles

இந்தக் குழுவுடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் பணியாற்ற வேண்டும்! -இதயம் முரளி படத்தின் வெற்றி விழாவில் விருப்பம் தெரிவித்த நடிகை கயாது லோகர் 

அதர்வா நடிக்க, ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கிய 'இதயம் முரளி' திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துகொள்ள...

‘நெக்ஸா இந்தியன் ஸ்ட்ரீமிங் அகாடமி விருதுகள்’ விழாவில் சிறந்த இசையமைப்பாளராக கௌரவிக்கப்பட்ட சாம் சி எஸ்!

இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம்...

மூன்றாம் முறை தேசிய விருது… ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு பாடகர் வேல்முருகன் காசு மாலையுடன் பாராட்டு!

நேற்று (19 ஜூலை 2026) அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில்  ஜி.வி. பிரகாஷ்குமார் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்குத் தேர்வு...

46 ஆண்டுகால திரைப்பயணத்தில் மேலும் ஒரு மகுடம் சூட்டிய ‘அமரன்’ – 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் மூன்று விருதுகளை வென்றது!

இந்திய திரையுலகில் நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தனது தனித்துவமான கலைப் பார்வையால் அழியாத...

More like this

இந்தக் குழுவுடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் பணியாற்ற வேண்டும்! -இதயம் முரளி படத்தின் வெற்றி விழாவில் விருப்பம் தெரிவித்த நடிகை கயாது லோகர் 

அதர்வா நடிக்க, ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கிய 'இதயம் முரளி' திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துகொள்ள...

‘நெக்ஸா இந்தியன் ஸ்ட்ரீமிங் அகாடமி விருதுகள்’ விழாவில் சிறந்த இசையமைப்பாளராக கௌரவிக்கப்பட்ட சாம் சி எஸ்!

இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம்...

மூன்றாம் முறை தேசிய விருது… ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு பாடகர் வேல்முருகன் காசு மாலையுடன் பாராட்டு!

நேற்று (19 ஜூலை 2026) அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில்  ஜி.வி. பிரகாஷ்குமார் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்குத் தேர்வு...