HomeCinemaஹிப் ஹாப் ஆதியின் இசை நிகழ்ச்சியில் 30 ஆயிரத்துக்கும் அதிகமாய் திரண்ட ரசிகர்கள்!

ஹிப் ஹாப் ஆதியின் இசை நிகழ்ச்சியில் 30 ஆயிரத்துக்கும் அதிகமாய் திரண்ட ரசிகர்கள்!

Published on

சர்வதேச அளவில் தனித்துவம் வாய்ந்த இசை கலைஞராகவும், ராப் பாடகராகவும், தமிழ்த் திரையுலகில் முன்னணி இசை அமைப்பாளராகவும் வலம் வரும் ஹிப் ஹாப் தமிழா ஆதி ரிட்டர்ன் ஆஃப் த டிராகன் – ஹோம் எடிசன் (Return of the Dragon – Home Edition) எனும் பெயரில் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சியை நடத்தினார்.

Torque Entertainments நிறுவனம் சார்பில் சென்னையின் மையப் பகுதியில் உள்ள ஒய் எம் சி ஏ மைதானத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த Music Concert க்கு முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டனர். இந்த மைதானத்தில் நடைபெற்ற Music Concert ஒன்றில் இதுதான் அதிக அளவில் ரசிகர்கள் ஒன்று கூடிய இசை நிகழ்ச்சி என்ற புதிய சாதனையையும் படைத்திருக்கிறது. இந்த இசை நிகழ்ச்சியில் ஹிப் ஹாப் தமிழா ஆதி- மேடையின் இறுதி பகுதி வரை சென்று, அனைத்து தரப்பு ரசிகர்களையும் சந்தித்து உற்சாகத்துடன் பாட்டுப்பாடி நடனமாடினார்.

இசை நிகழ்ச்சியில் வழக்கமாக வடிவமைக்கப்படும் மேடை போல் இல்லாமல் அனைத்து ரசிகர்களையும் சந்திக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட மேடையில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடந்து சென்று, ரசிகர்களை சந்தித்தது இசை ரசிகர்களை மேலும் மகிழ்ச்சி அடைய செய்தது. இளைஞர்களும் , இளம் ரசிகைகளும் ஏராளமாக ஒன்று கூடி ரசித்தனர். இதனால் இசை ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சத்திற்கு சென்றனர். உற்சாக மிகுதியில் ரசிகர்களும் ஹிப் ஹாப் தமிழா ஆதி உடன் பாட்டு பாடியும், நடனமாடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும் இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை பெற்றிருந்த ரசிகர்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பரிபூரணமான ஒத்துழைப்பை இலவசமாக வழங்கியது. அத்துடன் ரசிகர்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் இரவு நேரத்தில் கூடுதலாக ஒரு மணி நேரம் வரை இயக்கப்பட்டது.

இசை நிகழ்ச்சியின் ஏற்பட்டாளர்கள் நிகழ்ச்சிக்கு வருகை தரும் ரசிகர்களின் பாதுகாப்பிற்கும், பயணத்திற்கும் திட்டமிட்டு விரிவான ஏற்பாடுகளை செய்திருந்ததால் ‘நிகழ்ச்சியை எந்தவித தடங்கலும் இல்லாமல் உற்சாகமாக ரசித்து அனுபவிக்க முடிந்தது’ என ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டிருக்கிறார்கள். இது அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தையும், பாராட்டையும் பெற்றிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியின் பாதுகாப்பு பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Latest articles

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட, பிரபல பாடகி சாருலதா மணி எழுதி இசையமைத்த ‘தென்றலில்’  சுயாதீன பாடல்!

https://www.youtube.com/watch?v=w1kKo7v-z6k இசைப் புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து உருவான 'தக் லைஃப்' திரைப்படத்தில் இடம்பெற்று, மாபெரும் வரவேற்பைப் பெற்ற...

டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்ட மூன்றாம் பிறை’ மே 1 முதல் Amazon Prime Video தளத்தில் பார்த்து ரசிக்கலாம்!

1982ஆம் ஆண்டு வெளியான மூன்றாம் பிறை, தமிழ் சினிமாவின் மிகவும் கொண்டாடப்படும் உணர்வுப்பூர்வமான கிளாசிக் திரைப்படங்களில் ஒன்றாக இன்று...

ராக்ஸ்டார் DSP vs தேவி ஸ்ரீ பிரசாத்… சன் நெக்ஸ்ட் தளத்தில் ஏப்ரல் 30 முதல் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ அதிரடி ஆரம்பம்!

https://www.youtube.com/watch?v=2bwUK-NvtSI   ராக்ஸ்டார் DSP-யின் மற்றொரு முகத்தை காட்டும் ஜாலி ஓ ஜிம்கானா - சன் நெக்ஸ்ட்-இன் புதிய நிகழ்ச்சி அவரது துள்ளல்...

More like this

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட, பிரபல பாடகி சாருலதா மணி எழுதி இசையமைத்த ‘தென்றலில்’  சுயாதீன பாடல்!

https://www.youtube.com/watch?v=w1kKo7v-z6k இசைப் புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து உருவான 'தக் லைஃப்' திரைப்படத்தில் இடம்பெற்று, மாபெரும் வரவேற்பைப் பெற்ற...

டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்ட மூன்றாம் பிறை’ மே 1 முதல் Amazon Prime Video தளத்தில் பார்த்து ரசிக்கலாம்!

1982ஆம் ஆண்டு வெளியான மூன்றாம் பிறை, தமிழ் சினிமாவின் மிகவும் கொண்டாடப்படும் உணர்வுப்பூர்வமான கிளாசிக் திரைப்படங்களில் ஒன்றாக இன்று...