தொடர் மரணங்கள் நடக்கிற திக்திக் திரில்லராக ‘அந்தரன்.’
நாயகியை திருமணம் செய்துகொள்ளத் தயாராகிற இளைஞர்கள் ஒவ்வொரு விதமாக இறக்கிறார்கள். அதற்கெல்லாம் தன் தந்தைதான் காரணமாக இருப்பார் என நம்பும் நாயகி போலீஸில் புகார் கொடுக்கிறார்.
குற்றம் நடந்தது என்ன என்பதை விசாரிக்க வருபவர், நாயகியை பள்ளிப் பருவ வயதில் காதலித்து, பிரிந்து போனவர். இப்போது அவரும் கார்த்திகாவை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார்.
நடக்கிற மரணங்களையெல்லாம் பார்க்கும்போது அவரது உயிர் பறிபோய்விடுமோ என்ற பதற்றம் தொற்றுகிறது… இயக்கம் சந்தோஷ் ராகவன்
நாயகி இவானா. அழகாக இருக்கிறார். கதைக்குத் தேவையான மீட்டருக்குள் நடிக்க வருகிறது. தன்னை ஆணாக நினைத்துக் கொள்ளும் தருணங்களில் காட்டியிருக்கும் உடல்மொழி ஆஹா ரகம்.
காவல்துறை விசாரணை அதிகாரியாக பிரஜன். பல படங்களில் பார்த்தது போன்ற அதே ஸ்டைல் விசாரிப்புகள், அலசல்கள், ஆராய்ச்சிகள்… நடிப்பில் தன்னால் முடிந்தளவு கம்பீரம் காட்டியிருக்கிறார்.
அனுபமா குமார், செந்தி குமாரி, அறிமுக நடிகை இன்ஸ்டா பிரபலம் ஐஸ்வர்யா கண்ணன், ஆதிரன், தண்டபாணி, சாம்பசிவம் உள்ளிட்டோரின் நடிப்பு நேர்த்தி.

