HomeCinemaஇந்த படத்தில் யாரும் கஷ்டப்பட்டு வேலை செய்யவில்லை; இஷ்டப்பட்டு வேலை செய்தோம்! -‘வட்டார வழக்கு' பட...

இந்த படத்தில் யாரும் கஷ்டப்பட்டு வேலை செய்யவில்லை; இஷ்டப்பட்டு வேலை செய்தோம்! -‘வட்டார வழக்கு’ பட நிகழ்வில் நடிகர் சந்தோஷ் நம்பிராஜன் பேச்சு

Published on

‘டூலெட்’ படத்தில் நடித்து கவனம் ஈர்த்த சந்தோஷ் நம்பிராஜன், கதையம்சமுள்ள படங்களில் நடித்துவரும் ரவீனா ரவி நடிப்பில், கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கிய படம் ‘வட்டார வழக்கு.’ இந்த படம் வரும் டிசம்பர் 29-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

நிகழ்வில் இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் பேசியபோது, ‘‘பின்னணி இசையை நம்பி இருக்கக்கூடிய படம் இது. இந்தக் கதைக்கு இளையராஜா சார் இசை இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அவர் படம் பார்த்து சம்மதித்து 12 நாட்கள் ஒரு தியானம் போல, பின்னணி இசையை செய்து கொடுத்தார். அதேபோல் நல்ல படம் என்பதால் படத்தில் நடித்தவர்கள், ஒளிப்பதிவாளர் என பலரும் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆதரவு கொடுத்தனர். பொருளாதாரத்தில் சில குறை நிறைகளோடு இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். அதை மன்னித்து உங்கள் ஆதரவைக் கொடுங்கள்’ என்றார்.

நடிகர் சந்தோஷ் நம்பிராஜன், ‘‘இந்தப் படத்தில் யாரும் கஷ்டப்பட்டு வேலை செய்யவில்லை இஷ்டப்பட்டு தான் வேலை செய்து இருக்கிறோம். இசைஞானி இசையில் நடித்துள்ளது எனக்குப் பெருமையாக உள்ளது. இப்போதெல்லாம் சின்ன படங்களை வெளியிடுவது கஷ்டம், தியேட்டர் கிடைப்பதில்லை என்று சொல்கிறார்கள். அது முற்றிலும் பொய். நீங்கள் ஒரு தரமான படத்தை எடுத்தால் அதை வெளியிடுவதற்கு சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேல் சார் தயாராக இருக்கிறார். நீங்கள் உழைப்பையும், படத்தையும் நேர்மையாக கொடுத்தால் உங்களுக்கான அங்கீகாரமும் அடையாளமும் விருதுகளும் தானாக வந்து சேரும் என்பது நிச்சயம். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்” என்றார்.

நடிகை ரவீனா ரவி, ‘‘நல்ல கதையம்சம் கொண்ட படம் இது. எல்லோரும் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறோம். திரையரங்கில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.

படத்தை வெளியிடுகிற சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்தி வேலன் ‘‘கமர்ஷியல் படங்கள் என்பதை விட உண்மைக்கு நெருக்கமான படங்களை விநியோகிப்பதில்தான் எனக்கு ஆத்மார்த்த திருப்தி. இந்த படமும் அப்படியான படம். மக்கள் ஆதரவளிக்க வேண்டும்” என்றார்.

 

Latest articles

இயக்குநர் டூ நடிகர்… நடிகர் டூ ஹீரோ… ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் புதிய  அவதாரம் எடுத்துள்ள பாலாஜி சக்திவேல்!

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான 'ஆஃப் தி ரெக்கார்ட்'டில் கதாநாயகனாக நடித்துள்ளார்! இயக்குநராக...

கிச்சா சுதீப்,  ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் நடிக்கும் அண்டர் – 18 படம் பூஜையுடன் துவங்கியது!

மெட்ராஸ்காரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, SR PRODUCTIONS சார்பில் B. ஜெகதீஸ் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களிடம் அசோசியேட்...

தனி ஒருவன்’ இரண்டாம் பாகம் வராதது ஏன்? -‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில் காரணம் சொன்ன ரவிமோகன்

SUN NXT டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகும் 'ஜாலி ஓ ஜிம்கானா' நிகழ்ச்சியின் ஐந்தாவது எபிஸோடில் அனைவரும் ரவி மோகனின்...

பிரபல ஒளிப்பதிவாளர் ரவியாதவ் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய ‘ரஞ்சன்’ படக்குழு!

இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் தியாகராஜன் இயக்கத்தில் டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிப்பில் 'ரஞ்சன்' படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று...

More like this

இயக்குநர் டூ நடிகர்… நடிகர் டூ ஹீரோ… ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் புதிய  அவதாரம் எடுத்துள்ள பாலாஜி சக்திவேல்!

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான 'ஆஃப் தி ரெக்கார்ட்'டில் கதாநாயகனாக நடித்துள்ளார்! இயக்குநராக...

கிச்சா சுதீப்,  ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் நடிக்கும் அண்டர் – 18 படம் பூஜையுடன் துவங்கியது!

மெட்ராஸ்காரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, SR PRODUCTIONS சார்பில் B. ஜெகதீஸ் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களிடம் அசோசியேட்...

தனி ஒருவன்’ இரண்டாம் பாகம் வராதது ஏன்? -‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில் காரணம் சொன்ன ரவிமோகன்

SUN NXT டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகும் 'ஜாலி ஓ ஜிம்கானா' நிகழ்ச்சியின் ஐந்தாவது எபிஸோடில் அனைவரும் ரவி மோகனின்...