HomeMovie Reviewகாந்தி கண்ணாடி சினிமா விமர்சனம்

காந்தி கண்ணாடி சினிமா விமர்சனம்

Published on

உணர்வுபூர்வமான கதையில், எளிமையான பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் ‘காந்தி கண்ணாடி.’

செக்யூரிட்டி வேலையிலிருக்கும் சீனியர் சிட்டிசன் காந்தி மகான் மனைவியின் சந்தோஷத்துக்காக 60-ம் கல்யாணம் செய்துகொள்ளும் முடிவுக்கு வருகிறார். அதற்காக ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் நடத்தும் கதிரை அணுகுகிறார். காந்தி எதிர்பார்க்கும்படி அந்த கல்யாணத்தை நடத்தி முடிக்க 50 லட்சத்துக்கும் அதிக செலவாகும் என்கிறார் கதிர். அந்த பணத்தை தருவதாக சொல்கிறார் காந்தி.

கதை இப்படி துவங்க, சாதாரண செக்யூரிட்டியால் எப்படி அத்தனை லட்சத்தை புரட்ட முடியும்? கல்யாணம் நடக்குமா நடக்காதா? என்ற நம் மனதில் உருவாகும் சில கேள்விகளுக்கு பதில்களாய் கடந்தோடுகின்றன அடுத்தடுத்த காட்சிகள்…

மனைவி மீது காட்டும் அளவுகடந்த குழந்தைத் தனமான பாசம், மனைவியின் ஆசையை நிறைவேற்றத் துடிக்கும் ஆர்வம், ஒரு கோடி ரூபாய் கைக்கு கிடைத்தும் அது பயன்படாத நிலைமையில் பதறித் துடித்தல் என கதையின் முக்கியப் பகுதிகளை தாங்கிப் பிடிக்கும் பொறுப்பு பாலாஜி சக்திவேலுக்கு. மனிதர் வெகுளித்தனம் என்ற பெயரில் கொஞ்சம் அதிகமாகவே நடித்து அந்த பொறுப்பை நிறைவேற்றியிருக்கிறார்.

கதைநாயகன் பாலாஜி சக்திவேல் என்றால் கதாநாயகன் கதிராக பாலா. விஜய் டிவி’யிலிருந்து மற்றுமொரு ஹீரோ. முதல் படம்; நடிப்பில் அலட்டல் தெரிந்தால் விமர்சனங்களை சந்திக்க வேண்டும் என்பதை உணர்ந்து களமிறங்கியிருக்கிறார். பணத்தின் மீது குறிக்கோளாய் இருப்பது, அதனால் காதலியின் வெறுப்ப்புக்கு ஆளாவது, தன்னை தேடி வந்த காந்தி மகான் கையில் ஒரு கோடி கிடைத்ததும் அதில் தன்னால் எந்தளவு சுருட்ட முடியும் என திட்டமிடுவது, சிலபல அனுபவங்களுக்குப் பிறகு பணத்தை விடவும் மகிழ்ச்சி தருகிற விசயம் உண்டு என உணர்வது… இப்படி பல காட்சிகளில் பொருத்தமான அளவான நடிப்பைத் தந்து, காமெடி காட்சிகளில் ஒன்லைனர்களால் ரசிக்க வைக்கிறார்.

காதலனை பிடிக்கும்; அவன் பணத்தின் மீது குறிக்கோளாக இருப்பது பிடிக்காது என்ற மனநிலையில் இருப்பவராக கதாநாயகி நமீதா கிருஷ்ணமூர்த்தி தந்திருக்கும் நடிப்பு நேர்த்தி.

வெள்ளை உள்ளம், கணவர் மீது கொள்ளைப் பாசம் என அன்பாலும் அழுகையாலும் நெகிழ வைக்கிறார் பாலாஜி சக்திவேலுவின் மனைவியாக வருகிற ஊர்வசி அர்ச்சனா.

பாலாவின் நண்பனாக வருகிற மதன் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் தேவைக்கேற்ப நடித்திருக்க, ‘வண்டி வண்டி புல்லட்டு வண்டி’ பாடல் மூலம் உற்சாகத்தையும் ‘திமிருக்காரி’ பாடல் மூலம் இதத்தையும் தருகிறது விவேக் – மெர்வின் கூட்டணி.

பாலாஜி கே.ராஜாவின் ஒளிப்பதிவு நேர்த்தி.

60 வயதிலும் புது மாப்பிள்ளை போல் மனைவியை நேசிக்கிற ஒருவர், சூழ்நிலை தந்த கசப்பான அனுபவங்களால் பணத்தின் மீது பற்று வைக்கிற இளைஞர் என இருவருக்கிடையில் தொடர்பு உருவாகும் விதமாக கதையை உருவாக்கி, பணத்தையும் தாண்டி மனதுக்கு நிறைவு தரும் விஷயங்கள் உலகத்தில் உண்டு என்பதை எடுத்துச் சொல்லியிருக்கும் இயக்குநர் ஷெரிஃபை படத்தின் குறைகளைத் தள்ளிவைத்து விட்டு பாராட்டலாம்!

Rating 3 / 5

 

 

 

Latest articles

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

துல்கர் சல்மானின் ஐ ‘ம் கேம் டிரெய்லர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=MDtbNcgqAXc மலையாள திரையுலகில் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ம் கேம்”...

உற்சாகமாக நடந்த கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்ட நடு நாடு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா!

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்குகிறார்.   சாகித்யா கிரியேஷன் மற்றும் தி...

‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது!

பிரைம் வீடியோ மற்றும் டி-சீரிஸ் இணைந்து, விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் த்ரில்லர் சீரிஸான ‘வதந்தி...

More like this

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

துல்கர் சல்மானின் ஐ ‘ம் கேம் டிரெய்லர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=MDtbNcgqAXc மலையாள திரையுலகில் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ம் கேம்”...

உற்சாகமாக நடந்த கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்ட நடு நாடு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா!

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்குகிறார்.   சாகித்யா கிரியேஷன் மற்றும் தி...