HomeCinemaபுதுமுக நாயகன் ஜெகவீர் தமிழ் சினிமாவில் கண்டிப்பாகத முக்கிய இடத்தைப் பிடிப்பார்! -'2K லவ் ஸ்டோரி'...

புதுமுக நாயகன் ஜெகவீர் தமிழ் சினிமாவில் கண்டிப்பாகத முக்கிய இடத்தைப் பிடிப்பார்! -‘2K லவ் ஸ்டோரி’ பட வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் இயக்குநர் சுசீந்திரன் பேச்சு

Published on

புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடிக்க, சுசீந்திரன் இயக்கி, கடந்த பிப்ரவரி 14-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான ‘2K லவ் ஸ்டோரி’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் சென்னையில் நடந்தது.

நிகழ்வில் பேசிய இயக்குநர் சுசீந்திரன், ”நிறைய பத்திரிகை நண்பர்கள், இந்தப்படம் பார்த்து, சுசீந்திரன் கம்பேக் எனப் பாராட்டினார்கள். அனைவருக்கும் நன்றி. இந்த படத்தின் தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியன், அவர் தந்த ஆதரவுக்கு மிகப்பெரிய நன்றி, தயாரிப்பாளர் தனஞ்செயன் சார், இந்தத் திரைப்படத்தை 200 தியேட்டர்களுக்கு மேல் கொண்டு சேர்த்தார், அவருக்கு என் நன்றி. என் உடன் நின்ற இசையமைப்பாளர் இமான், அவர் தந்த அருமையான பாடல்களுக்கும், இசைக்கும் நன்றி. நிறையப் பேர் ஒளிப்பதிவு, விளம்பர படம் போல் உள்ளதாகப் பாராட்டினார்கள், ஒளிப்பதிவாளர் ஆனந்த் கிருஷ்ணனுக்கு நன்றி. ஒரு உதவி இயக்குநர் போல என்னுடன் உழைத்த எடிட்டர் தியாகுவுக்கு நன்றி. போஸ்டர் வடிவமைப்பாளர் கார்த்திக்கு நன்றி. இப்படம் நடக்கக் காரணமாக இருந்த திருப்பூர் தமிழ் மணி அண்ணாவுக்கு நன்றி. புதுமுக நாயகன் ஜெகவீர் கண்டிப்பாகத் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தைப் பிடிப்பார். என் நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. படம் பார்த்து வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி” என்றார்.

படத்தின் நாயகன் ஜெகவீர், இந்த நல்ல திரைப்படத்தைப் பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. என்னைப் புதுமுகமாக இருந்தாலும் என்னை வரவேற்று வாழ்த்திய அன்பு ரசிகர்களுக்கு நன்றி. என் குரு, என்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் சுசீந்திரன் சாருக்கு நன்றி. என் தயாரிப்பாளர் நண்பர் விக்னேஷ் சுப்ரமணியனுக்கு நன்றி. எங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க உதவியாக இருந்த, தனஞ்செயன் சாருக்கு நன்றி. அற்புதமான இசையைத் தந்த தமன் சாருக்கு நன்றி. படம் பார்த்து ஊக்கம் தந்து பாராட்டிய இயக்குநர் பிரபு சாலமன் சாருக்கு நன்றி. சுமார் மூஞ்சி குமாரான என்னையும், எங்கள் அனைவரையும் அழகாகக் காட்டிய ஆனந்த கிருஷ்ணன் சாருக்கு நன்றி. உடன் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. படத்திற்காக உழைத்த அனைவருக்கும், படம் பார்த்துத் தொடர்ந்து பாராட்டி வரும் அனைவருக்கு நன்றி” என்றார்.

படத்தில் பவித்ராவாக நடித்திருந்த லத்திகா, எங்கள் படத்திற்கு தந்து வரும் ஆதரவுக்கு நன்றி. இந்தப்படத்தில் பவித்ரா கேரக்டருக்கு தந்து வரும் பாராட்டுக்களுக்கு நன்றி. முதல் படத்தில் அழகான கேரக்டர் மூலம், அறிமுகப்படுத்திய சுசி சாருக்கு நன்றி. என் கோ ஆக்டர் ஜெகவீருக்கு நன்றி. இப்படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருந்த அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும் நன்றி. எங்கள் அனைவரையும் அழகாகக் காட்டிய ஒளிப்பதிவாளர் ஆனந்த கிருஷ்ணன் சாருக்கு நன்றி. எங்கள் அனைவருக்கும் இதே ஆதரவைத் தொடர்ந்து தருவீர்கள் என நம்புகிறேன் நன்றி” என்றார்.

 

 

 

Latest articles

கருணாஸ், நிமிஷா சஜயன் நடித்துள்ள ‘என்ன விலை’ திரைப்படம் ரிலீஸுக்கு முன் தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருது வென்றுள்ளது!

விருதுகளுக்கும் அங்கீகாரத்திற்கும் இடைப்பட்ட இடைவெளியை குறைக்கும் படங்கள் வெகு சிலதான். சில விருதுகள், குறிப்பாக ‘சிறந்த திரைக்கதை’ விருது...

பாண்டிராஜ் இயக்கியுள்ள திரில்லர் காமெடி டிராமா ‘பரிமளா & கோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

பாண்டிராஜ் இயக்கியுள்ள புதிய திரில்லர் காமெடி டிராமா 'பரிமளா & கோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே...

பார்வை மாற்றுத்திறனாளி சாதனையாளர்கள் 26 பேரை பற்றிய ‘காண்பதெல்லம் மறையுமென்றால்’ முதல் தமிழ் பிரெய்லி புத்தகம் வெளியீடு!

பத்திரிகை , இசை, அறிவியல், ராணுவம், விளையாட்டு,  மென்பொருள், சட்டம், வங்கி மற்றும் அரசாங்க உயர் பதவிகள்  என...

 ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் கதாபாத்திரங்களை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அறிமுகப்படுத்தினார்!

தயாள் பத்மநாபன் இயக்கிய ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்திலிருந்து விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படத்தின்...

More like this

கருணாஸ், நிமிஷா சஜயன் நடித்துள்ள ‘என்ன விலை’ திரைப்படம் ரிலீஸுக்கு முன் தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருது வென்றுள்ளது!

விருதுகளுக்கும் அங்கீகாரத்திற்கும் இடைப்பட்ட இடைவெளியை குறைக்கும் படங்கள் வெகு சிலதான். சில விருதுகள், குறிப்பாக ‘சிறந்த திரைக்கதை’ விருது...

பாண்டிராஜ் இயக்கியுள்ள திரில்லர் காமெடி டிராமா ‘பரிமளா & கோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

பாண்டிராஜ் இயக்கியுள்ள புதிய திரில்லர் காமெடி டிராமா 'பரிமளா & கோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே...

பார்வை மாற்றுத்திறனாளி சாதனையாளர்கள் 26 பேரை பற்றிய ‘காண்பதெல்லம் மறையுமென்றால்’ முதல் தமிழ் பிரெய்லி புத்தகம் வெளியீடு!

பத்திரிகை , இசை, அறிவியல், ராணுவம், விளையாட்டு,  மென்பொருள், சட்டம், வங்கி மற்றும் அரசாங்க உயர் பதவிகள்  என...