HomeGeneralபாட்ரிஷியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வெள்ளி விழா நிறைவு விழா: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர்...

பாட்ரிஷியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வெள்ளி விழா நிறைவு விழா: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் பங்கேற்பு!

Published on

அடையாறு பாட்ரிஷியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஓராண்டு கால வெள்ளி விழா கொண்டாட்டங்களின் மாபெரும் நிறைவு விழா  சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின் 25 ஆண்டுகால கல்விச் சேவை, சமூகப் பங்களிப்பு மற்றும் கல்விசார் சிறப்புகளைப் போற்றும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ்நாடு சட்டப்பேரவை மாண்புமிகு பேரவைத்தலைவர் திரு. ஜே. சி. டி. பிரபாகர் மற்றும் தமிழ்நாடு அரசின் செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மாண்புமிகு அமைச்சர் டாக்டர் ஆர். குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
இந்நிகழ்விற்கு அருட்சகோதரர் வின்சென்ட் ஜார்ஜ், இயக்குநர் மற்றும் செயலாளர் தலைமை வகித்தார். அருட்சகோதரர் முனைவர் எஸ். ஆரோக்கியராஜ், துணை மாகாணத் தலைவர், பாட்ரிஷியன் சகோதரர்கள்; அருட்சகோதரர் ஜெரோம் எல்லன்ஸ், சமூகத் தலைவர், சென்னை; முனைவர் பாத்திமா வசந்த், கல்வி இயக்குநர்; முனைவர் ஆரோக்கியமேரி கீதா ரூபஸ், முதல்வர் ஆகியோருடன் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
வெள்ளி விழாவின் ஒரு பகுதியாக, கல்லூரியின் முன்னாள் இயக்குநர்கள், முன்னாள் முதல்வர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்கள், 25 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்கள், முன்னாள் மாணவர் தலைவர்கள், சிறப்பு முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்–ஆசிரியர் கழக பிரதிநிதிகள் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். மேலும், வெள்ளி விழா மலர் மற்றும் நினைவுச் சிறப்பிதழை டாக்டர் ஆர். குமார் வெளியிட, வெள்ளி விழா சிறப்பு வெளியீட்டை மாண்புமிகு பேரவைத்தலைவர் திரு. ஜே. சி. டி. பிரபாகர் வெளியிட்டார்.
மாண்புமிகு பேரவைத்தலைவர் திரு. ஜே. சி. டி. பிரபாகர், கல்லூரியின் 25 ஆண்டுகால சிறப்பான பயணத்தைப் பாராட்டி, மாணவர்கள் நேர்மை, தலைமைத்துவம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
டாக்டர் ஆர். குமார், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர், கல்லூரி செயற்கை நுண்ணறிவு, புதுமை, டிஜிட்டல் திறன்கள் மற்றும் எதிர்காலத்தை நோக்கிய கல்விக்கு அளித்து வரும் முக்கியத்துவத்தைப் பாராட்டினார். மேலும், மாணவர்கள் தொழில்நுட்பத்தை அறநெறியுடனும் சமூகப் பொறுப்புடனும் பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புகளுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
நிகழ்வில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள், பாட்ரிஷியன் சகோதரர்கள், கல்லூரி நிர்வாகம், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவ–மாணவியருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து, கல்லூரி மேலும் பல கல்விசார் சாதனைகளையும் சமூகப் பணிகளையும் மேற்கொண்டு உயர்ந்திட தங்கள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Latest articles

உண்மையான வெற்றி என்பது நண்பர்களையும் உங்களுடன் சேர்த்துக்கொண்டு முன்னேறுவதுதான்! ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ஃபிரண்ட்ஷிப் டே மெசேஜ்

திரையுலகில் வெற்றி பல விஷயங்களை மாற்றிவிடும்! தொழில் வாழ்க்கை புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குகிறது. உறவுகள் மாறுகின்றன. பல நேரங்களில்,...

முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் சென்னையில் நடத்திய ஜன்சபை மற்றும் தென்னிந்திய மாநாடு!

2002ஆம் ஆண்டு முதல் முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் தேசிய அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச், சென்னை...

மாடர்ன் கல்யாணத்தின் ‘அட்ராசிட்டி’களை நகைச்சுவையாக காட்சிப்படுத்திய ‘பியார் பிரேமா கல்யாணம்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் சமூக வலைதளங்களில் வைரல்!

https://www.youtube.com/watch?v=3joIUDlLRgk இயக்குநர் இளன் இயக்கி, முதன்முறையாக கதாநாயகனாகவும் அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘அட்ராசிட்டி’...

More like this

உண்மையான வெற்றி என்பது நண்பர்களையும் உங்களுடன் சேர்த்துக்கொண்டு முன்னேறுவதுதான்! ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ஃபிரண்ட்ஷிப் டே மெசேஜ்

திரையுலகில் வெற்றி பல விஷயங்களை மாற்றிவிடும்! தொழில் வாழ்க்கை புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குகிறது. உறவுகள் மாறுகின்றன. பல நேரங்களில்,...

முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் சென்னையில் நடத்திய ஜன்சபை மற்றும் தென்னிந்திய மாநாடு!

2002ஆம் ஆண்டு முதல் முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் தேசிய அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச், சென்னை...