HomeMovie Reviewலாரா சினிமா விமர்சனம்

லாரா சினிமா விமர்சனம்

Published on

இன்வெஸ்டிகேஷன் திரில்லரில் இன்ட்ரெஸ்டிங் ஸ்கிரீன்பிளே.

தன் மனைவியைக் காணவில்லை என லாரன்ஸ் என்பவர் புகார் கொடுக்க, அவன் கொடுத்த அங்க அடையாளங்கள் போலீஸ் கைக்கு கிடைத்த பெண்ணின் சடலத்துடன் ஒத்துப் போகிறது. ஆனால், அது தன் மனைவியில்லை என அவன் மறுக்க போலீஸுக்கும் படம் பார்க்கும் நமக்கும் ‘இறந்த பெண் யார்?’ ‘காணாமல் போன பெண்ணுக்கு என்னவானது?’ என்ற குழப்பம் உருவாகிறது. அதற்கான பதில்களை போலீஸ் கண்டறியும்போது பல ஆச்சரியங்களும் சில அதிர்ச்சிகளும் காத்திருக்கிறது.

சம்பளம் தரும் முதலாளிக்காக முறைகேடான வேலைகளில் ஈடுபடுவது, அவருக்காக தன் மனைவியியை தவறாக அணுகுவது என டெரராகவும் முகம் சுளிக்க வைக்கும்படியும் கேரக்டரை உள்வாங்கி நடித்துள்ளார் லாரன்ஸாக வருகிற பாலா.

இன்ஸ்பெக்டராக வருகிறார் இந்த படத்தை தயாரித்திருக்கிற கார்த்திகேசன். துப்பு துலக்குவதில் அவசரம் காட்டாமல், நிதானமான விசாரணை மூலம் குற்றவாளிகளை நெருங்குகிற விதம் கதையின் நகர்வுக்கு சுறுசுறுப்பூட்டுகிறது.

படத்தின் பின்பகுதியில் வருகிற அசோக் காதல் உணர்வையும் காதலியைப் பிரிகிற நிலையில் வேதனையையும் கச்சிதமாக பிரதிபலித்திருக்க, அவருக்கு ஜோடியாக வருகிற அனுஸ்ரேயா பிரியமான காதலியாகவும் குறிப்பிட்ட கொள்கையின் வழி துணிச்சலாக நடக்கிற விதம் கவனம் பெறுகிறது.

கணவனின் சித்ரவதைகளில் மனம் உடைந்து ஒரு கட்டத்தில் விட்டு விலக நினைத்து கதையின் திருப்பத்துக்கு கை கொடுக்கிற வெண்மதி, பாலியல் தொழிலாளிகளின் சிக்கல்களை போகிற போக்கில் தொட்டுக் காட்டுகிற வர்ஷினி வெங்கட், ஆர்வக் கோளாறில் வாலிபத் திமிரில் சிறிய தவறு செய்து பெரிய குற்றத்தில் சிக்குகிற இ எஸ் பிரதீப், திலீப்குமார், எம் எல் ஏ.வாக மேத்யூ வர்கீஸ் என மற்றவர்கள் அவரவர் கேரக்டரை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.

பாடல்களை ரசிக்கும்படியும் பின்னணி இசையை குறை சொல்ல முடியாதபடியும் வழங்கியிருக்கிறார் ரகு ஸ்வரன். காரைக்காலின் சுற்றுவட்டத்தை சுற்றி வளைத்திருக்கிறது ஆர் ஜே ரவீனின் ஒளிப்பதிவு.

மனித மனங்களின் அழுக்கான பக்கங்களில் நுழைந்து விபரீத வில்லங்க கதையை உருவாக்கி,

கிட்டத்தட்ட ஒரே வயதுப் பெண்கள் மூன்று பேர், அவர்களுக்குள் ஒரேயொரு ஒற்றுமை என சித்தரித்து,

அடுத்து என்ன அடுத்து என்ன என எதிர்பார்ப்பைத் தூண்டும் விதமாக திரைக்கதை அமைத்து,

புதுமுகங்களை நேர்த்தியாக நடிக்க வைத்து லாராவை ஜோரான இன்வெஸ்டிகேஷன் திரில்லராக்கியிருக்கிறார் இயக்குநர் மணி மூர்த்தி!

Rating 3 / 5

 

 

 

Latest articles

கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் 2’ டீசர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=65mrBBZbSbo கார்த்தி கதாநாயகனாக, இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ். லக்ஷ்மண் குமார் மற்றும்...

பகுத்தறிவையும் பேண்டஸியையும் கலந்த க்ரைம் டிராமா ‘பீப்’ செப்டம்பரில் ரிலீஸ்!

‘நஞ்சுபுரம்’ புகழ் ராகவ் ரங்கநாதன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, இல.சண்முகசுந்தர் கதை எழுதி இயக்கியுள்ள படம் ‘பீப்.’ எம் குவெஸ்ட்...

இரு மாநில எல்லையில் நடக்கும் விறுவிறுப்பான காதல் கதையில் உருவான ஆலி’ தமிழ், மலையாள மொழிகளில் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது!

முற்றிலும் புதிய முகங்களின் பங்களிப்போடு உருவான 'ஆலி'  திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வரும் ஆகஸ்ட் 14-ம்...

மனதை வருடும் காதல் கதையாக உருவாகியுள்ள ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ படத்தின் டீசர் வெளியானது!

https://www.youtube.com/watch?v=EFI-xLTY9yU   டி ஆண்டனி எழுதி, இயக்கி, தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” திரைப்படத்தின் டீசர் வெளியாகி...

More like this

கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் 2’ டீசர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=65mrBBZbSbo கார்த்தி கதாநாயகனாக, இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ். லக்ஷ்மண் குமார் மற்றும்...

பகுத்தறிவையும் பேண்டஸியையும் கலந்த க்ரைம் டிராமா ‘பீப்’ செப்டம்பரில் ரிலீஸ்!

‘நஞ்சுபுரம்’ புகழ் ராகவ் ரங்கநாதன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, இல.சண்முகசுந்தர் கதை எழுதி இயக்கியுள்ள படம் ‘பீப்.’ எம் குவெஸ்ட்...

இரு மாநில எல்லையில் நடக்கும் விறுவிறுப்பான காதல் கதையில் உருவான ஆலி’ தமிழ், மலையாள மொழிகளில் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது!

முற்றிலும் புதிய முகங்களின் பங்களிப்போடு உருவான 'ஆலி'  திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வரும் ஆகஸ்ட் 14-ம்...