HomeMovie Reviewஆர்யமாலா சினிமா விமர்சனம்

ஆர்யமாலா சினிமா விமர்சனம்

Published on

பருவம் கடந்தும் வயதுக்கு வராமல் மன உளைச்சலில் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கும் அந்த பெண், தன் கனவில் வருகிற இளைஞனைக் காதலிக்கிறாள்.

கனவில் வந்தவன் ஒருநாள் நேரில் வருகிறான். அந்த ஊர் திருவிழாவில் நடக்கும் நாடகத்தில் கதாநாயகனாக மேடையேறி மக்களைக் கவர்கிறான்.

கனவில் வந்தவனை நேரில் பார்க்கும் அவள் உற்சாகமாகி அவனை நேசத்தோடு பார்க்க, அதில் மயங்கிய அவன் அவள் மீது காதல் கொள்ள…

இப்படி நகரும் கதையில், தான் பூப்பெய்தாததை நினைத்து அவள் அவனது காதலை ஏற்காமல் விலகுகிறாள். அதன்பின் இருவரும் அதிர்ச்சியான சில சம்பவங்களைச் சந்திக்கிறார்கள். அதையெல்லாம் கடந்து அவர்கள் மணவாழ்வில் இணைந்தார்களா இல்லையா என்பது கிளைமாக்ஸ்… இணை இயக்கம் ஆர் எஸ் விஜயபாலா

கதைநாயகியை மையப்படுத்திய கதை என்பதை புரிந்து அதற்கேற்ற உணர்வுகளை உயிரோட்டத்துடன் வெளிப்படுத்தியிருக்கிறார் மனிஷா ஜித். தன் குறைகளை இஷ்ட தெய்வத்திடம் சொல்லி ஆறுதலடைவது, தெய்வம் நல்லதாக எதையுமே செய்யாத நிலையில் அந்த தெய்வத்தை அடித்து ஆத்திரத்தை தணித்துக் கொள்வது என நீளும் காட்சிகள் இளகிய மனம் கொண்டோரை கலங்கடிக்கும்.

நாயகன் ஆர் எஸ் கார்த்திக் கூத்துக் கலைஞனாக காத்தவராயன் வேடமிட்டு மேடையில் நடிக்கும்போது பொருத்தமான பங்களிப்பை தந்திருக்கிறார். நாயகி மீது காதல் வயப்படும்போது அதற்கேற்ப நடிப்பில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்.

கூத்து நாடக ‘ஜமா’வின் தலைவராக டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர், நாயகியின் தாய்மாமனாக மாரிமுத்து என மற்றவர்களின் கச்சிதமான நடிப்பு, இதமான பாடல்கள், கதையோட்டத்தின் தேவையை நிறைவு செய்திருக்கிற பின்னணி இசை,  எளிமையான ஒளிப்பதிவு என அனைத்து அம்சங்களும் பின்னிப் பிணைந்து வளமாகியிருக்கிறது கதைக்களம்.

வயதுக்கு வராத பெண்ணுக்கு காதல் வருவது என்ற கதை ஒரு விதத்தில் புதியதுதான் என்றாலும், திரைக்கதை தாறுமாறாக பயணித்திருப்பதால் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கும் வாய்ப்பை இழந்திருக்கிறது.

Rating 2.5 / 5

 

Latest articles

ஒவ்வொரு காட்சியும், பாடலும், கதாபாத்திரமும் கதைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது! -நிறம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் முகேன் பேச்சு

முகேன் நடிப்பில், பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ள படம் 'நிறம்.'...

காவல்துறையிலிருக்கும் மனிதனை சோதிக்கும் ஒழுக்கப் போராட்டங்களை ஆராய்வதே சுவாரஸ்யமாக இருந்தது! -வதந்தி 2′ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைக் குவித்து வரும் நிலையில் நாயகன் சசிகுமார் பேச்சு

https://www.youtube.com/watch?v=7cCI3G8XmH8 இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட தனது தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘வதந்தி’யின்...

இந்த படத்தைப் பார்ப்பவர்கள் ஆரோக்கியம், மனிதநேயம், சமூகப் பொறுப்பு குறித்து சிந்தித்தால் அதுவே இந்தப் படைப்பின் மிகப்பெரிய வெற்றி! -தான் இயக்கி நடிக்கும் ‘செய் செய்யாதே’ படம் பற்றி சொல்கிறார் இயக்குநர் டாக்டர்...

சமூகத்திற்குத் தேவையான கருத்துகளை பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுத்துரைக்கும் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் மருத்துவ...

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

More like this

ஒவ்வொரு காட்சியும், பாடலும், கதாபாத்திரமும் கதைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது! -நிறம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் முகேன் பேச்சு

முகேன் நடிப்பில், பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ள படம் 'நிறம்.'...

காவல்துறையிலிருக்கும் மனிதனை சோதிக்கும் ஒழுக்கப் போராட்டங்களை ஆராய்வதே சுவாரஸ்யமாக இருந்தது! -வதந்தி 2′ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைக் குவித்து வரும் நிலையில் நாயகன் சசிகுமார் பேச்சு

https://www.youtube.com/watch?v=7cCI3G8XmH8 இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட தனது தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘வதந்தி’யின்...

இந்த படத்தைப் பார்ப்பவர்கள் ஆரோக்கியம், மனிதநேயம், சமூகப் பொறுப்பு குறித்து சிந்தித்தால் அதுவே இந்தப் படைப்பின் மிகப்பெரிய வெற்றி! -தான் இயக்கி நடிக்கும் ‘செய் செய்யாதே’ படம் பற்றி சொல்கிறார் இயக்குநர் டாக்டர்...

சமூகத்திற்குத் தேவையான கருத்துகளை பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுத்துரைக்கும் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் மருத்துவ...