HomeCinemaவள்ளுவன் சினிமா விமர்சனம்

வள்ளுவன் சினிமா விமர்சனம்

Published on

இளைஞன் வெற்றி தொடர்ச்சியாக மூன்று கொலைகள் செய்துவிட்டு இன்னொரு கொலை செய்யப் போவதாக போலீஸுக்கு தகவல் கொடுக்கிறான். ஏற்கனவே நடந்த கொலைகளைச் செய்தது யார் என்பதை தேடிக் கொண்டிருக்கும் போலீஸுக்கு, அடுத்து ஒரு கொலை நடக்கப் போகிறது என்ற தகவலால் தலைவலி அதிகரிக்கிறது.

நடக்கப் போகும் கொலையை தடுத்து, கொலைகாரனை பிடிக்க போலீஸ் ஸ்கெட்ச் போடுகிறது.

கொலைகளைச் செய்வது வெற்றி என்பதை போலீஸ் எப்படி கண்டுபிடிக்கிறது என்பது பரபரப்பான காட்சிகளாக கடந்தோட, வெற்றியால் திட்டமிட்ட கொலையை செய்ய முடிந்ததா இல்லையா என்பது கதையின் மிச்சசொச்சம்.

கொலைகளுக்கான காரணம் அதுவாக இருக்கலாம், இதுவாக இருக்கலாம் என தமிழ் சினிமா டெம்ப்ளேட்டை மனதில் வைத்து ஒன்றிரண்டை யூகித்தால் அதில் ஒன்றாகவே இருக்கிறது.

வெற்றியாக சேத்தன் சீனு. முதியோர் இல்லங்களில் உள்ளவர்கள் மீது அன்பு செலுத்திக் கொண்டு கொலைகள் செய்கிற கேரக்டர். யாரையெல்லாம் அவர் கொலை செய்கிறாரோ அவர்களால் அவர் பாதிக்கப்பட்டிருப்பார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அந்த பாதிப்பை காண்பிக்கும்போது நெஞ்சம் பதறுகிறது. அந்த தருணத்திற்கேற்ப கலங்கிக் கதறுபவர், கொலை செய்யும்போது அதற்கான வெறித்தனத்தை நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார்.

சேத்தன் சீனுவின் காதலியாக வருகிற ஆஷ்னா ஜாவேரியின் முகப் பொலிவு முந்தைய படங்களில் பார்த்ததை விட இளைத்தது போலிருந்தாலும், அழகில் இளமையில் குறையில்லை. காதலன் கொலைகாரன் என தெரிகிற போது அதிர்வதும், அவன் செய்வது தவறில்லை என்பதை உணர்கிற போதும், அவன் செய்ய நினைத்ததை தானே சாமர்த்தியமாக செய்து முடிப்பதுமாக நல்ல நடிப்பைத் தந்து கதையோடு கலந்து பயணிக்கிறார்.

பெண்களுக்கெதிரான குற்றங்களை உற்சாகமாக செய்கிறவராக ஷைலேகுமார் ஆடும் காமவெறியாட்டத்தில் மிரட்டல் போதுமானதான இருக்கிறது. அவருக்கு சட்டத்தின் மூலம் உதவி செய்பவர்களாக ராம்ஸ், ராஜசிம்மன், கராத்தே ராஜா கூட்டணி கெத்து காட்டுகிறது.

கொலையாளியைப் பிடிக்க, அடுத்த கொலை நடந்து விடாமல் தடுக்க காவல்துறை உயரதிகாரியாக வருகிற பிரேம் காட்டும் பரபரப்பில் எனர்ஜி அதிகம். சிங்கம் ஜெயவேல் உள்ளிட்ட மற்றவர்கள் ஏற்ற கேரக்டரில் பொருந்தி நியாயம் செய்திருக்க, பின்னணி இசையில் கதையோட்டத்தின் சுறுசுறுப்பை அதிகரித்திருக்கிறார் அஸ்வத். அந்தோணி தாசன் பாடும் டப்பாங்குத்து ஆட்டம் ஒண்ணா சேர்ந்து போட்டோம் குத்தாட்டப் பாடல் உற்சாகம் தருகிறது. சுரேஷ்பாலாவின் ஒளிப்பதிவு காட்சிகள் தரமாகியிருக்கிறது.

கதையும் திரைக்கதையும் பழக்கப்பட்டதாக இருக்க, திருக்குறள் ஒன்றில் சொல்லப்பட்டிருக்கும் கருத்தின் அடிப்படையில் கொலைகள் நடப்பதாக காட்சிகளில் பரபரப்பைக் கூட்டியிருக்கும் இயக்குநர் சங்கர் சாரதி, போகிற போக்கில் ஆதரவற்ற முதியோர்களின் மன வலியை எடுத்துக்காட்டி அவர்கள் மீது அன்பு காட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறார்.

Rating 3 / 5

Latest articles

ஆர்யன் ஷ்யாம் நடிப்பில் ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் தயாரிக்கும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாற்றுக் காவியம்… படப்பிடிப்புக்கு பரபரப்பாக தயாராகும் படக்குழு!

இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வாழ்க்கை, பாரம்பரியம் மற்றும் சாதனைகளை...

மோகன்லால், மீனா, ஜீத்து ஜோசப் கூட்டணியின் திரிஷ்யம் 3 ஜூன் 18 முதல் பிரைம் வீடியோவில் காணலாம்!

ஜீத்து ஜோசப் எழுதி இயக்கியுள்ள இந்த திரில்லர்-டிராமா திரைப்படம், PEN Studios மற்றும் Panorama Studios வழங்க, ஆண்டனி...

விஜய் ஆண்டனி இயக்குநர் சசி கூட்டணியின் ‘நூறு சாமி’ படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்வில் திரண்ட முத்திரை பதித்த முன்னணி படைப்பாளிகள்! 

'பிச்சைக்காரன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனித்துவமான கவனத்தை ஈர்த்த இயக்குநர் சசி-விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும்...

தொடங்கியது ‘சீயான் 63’ படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவின் பொற்காலம் முதல் நவீன காலம் வரை வெற்றியின் முத்திரையை பதித்து வரும் பெருமைமிக்க தயாரிப்பு நிறுவனமான...

More like this

ஆர்யன் ஷ்யாம் நடிப்பில் ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் தயாரிக்கும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாற்றுக் காவியம்… படப்பிடிப்புக்கு பரபரப்பாக தயாராகும் படக்குழு!

இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வாழ்க்கை, பாரம்பரியம் மற்றும் சாதனைகளை...

மோகன்லால், மீனா, ஜீத்து ஜோசப் கூட்டணியின் திரிஷ்யம் 3 ஜூன் 18 முதல் பிரைம் வீடியோவில் காணலாம்!

ஜீத்து ஜோசப் எழுதி இயக்கியுள்ள இந்த திரில்லர்-டிராமா திரைப்படம், PEN Studios மற்றும் Panorama Studios வழங்க, ஆண்டனி...

விஜய் ஆண்டனி இயக்குநர் சசி கூட்டணியின் ‘நூறு சாமி’ படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்வில் திரண்ட முத்திரை பதித்த முன்னணி படைப்பாளிகள்! 

'பிச்சைக்காரன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனித்துவமான கவனத்தை ஈர்த்த இயக்குநர் சசி-விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும்...