HomeCinemaஎந்த சந்தர்ப்பத்திலும் கொள்கைகளை விட்டுக் கொடுக்காத இரண்டு நபர்களைப் பற்றிய கதை இது! -தணல் படம்...

எந்த சந்தர்ப்பத்திலும் கொள்கைகளை விட்டுக் கொடுக்காத இரண்டு நபர்களைப் பற்றிய கதை இது! -தணல் படம் பற்றி சொல்கிறார் இயக்குநர் ரவீந்திர மாதவா 

Published on

ரசிகர்களிடம் நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் வரவேற்பு பெற்று வருவதை பார்க்கிறோம். அந்த வரிசையில் நடிகர் அதர்வாவின் ‘தணல்’ படமும் இணைய இருக்கிறது. அன்னை ஃபிலில் புரொடக்சன் தயாரிப்பில் எம். ஜான் பீட்டர் தயாரிப்பில் ரவீந்திர மாதவா இயக்கி இருக்கும் இந்தப் படம் செப்டம்பர் 12 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

தியேட்டர் மற்றும் ஓடிடி தளத்தில் பிளாக்பஸ்டர் ஹிட்டான நடிகர் அதர்வா முரளியின் ‘DNA’ படத்திற்குப் பிறகு அவரது ‘தணல்’ படம் மீதான எதிர்பார்ப்பும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

படம் குறித்து இயக்குநர் ரவீந்திர மாதவா கூறியிருப்பதாவது, “நிறைய ஆக்‌ஷன் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் உணர்வுப்பூர்வமான கதையாக ‘தணல்’ இருக்கும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தங்கள் கொள்கைகளை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லாத இரண்டு நபர்களைப் பற்றிய கதை இது. வாழ்நாள் முழுவதும் துன்பப்பட்டு, பழிவாங்கும் கோபத்தில் இருக்கும் முன்னாள் ராணுவ வீரர் மற்றும் வேதனையான கடந்த காலத்தைக் கொண்ட ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் நேர்மையாக தனது கடமையை செய்வது என இவர்களை சுற்றி கதை இருக்கும்.

திரைக்கதையில் கதாநாயகன் அப்பாவித்தனமும் அதேசமயம் கோபம் கொண்ட இளைஞனாகவும், அவனை யாரும் தடுத்து நிறுத்த முடியாத துணிச்சல் மிக்கவனாகவும் எழுதினேன். இந்த குணாதிசயங்கள் கொண்ட கதாபாத்திரத்திற்கு அதர்வா முரளி சரியான தேர்வாக இருந்தார். முன்னாள் இரணுவ அதிகாரி கதாபாத்திரத்தை பொருத்தவரை இதில் பல லேயர்கள் இருக்கும். நிறைய யோசனைக்குப் பிறகு அஸ்வின் காகமனுவை தேர்வு செய்தேன். அவரது நடிப்பை நிச்சயம் ரசிகர்கள் கொண்டாடுவார்கள்” என்றார்.

விறுவிறுப்பான திரைக்கதை, நடிகர்களின் திறமையான நடிப்பு, எமோஷன்ஸ் மற்றும் ஆக்ஷன் ஆகியவற்றின் கலவையாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் லாவண்யா திரிபாதி கதாநாயகியாக நடித்துள்ளார். ஷாரா, பாரத், லட்சுமி பிரியா மற்றும் அழகம் பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

 

Latest articles

ராவ் பகதூர் (தெலுங்கு) திரைப்பட விமர்சனம்

மனித மனதின் உளவியல் சிக்கல்களைப் பேசும் விசித்திரமான பரிசோதனைப் படம். ராவ் பகதூர் மாபெரும் ஜமீன் பரம்பரை வாரிசு; தனது...

நிறைய உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்; நல்ல கதையோடு வாருங்கள்! -‘அர்ஜுனன் பேர் பத்து’ பட விழாவில் நடிகர் யோகிபாபு பேச்சு

யோகிபாபு நடித்துள்ள 300 வது படம் அர்ஜுனன் பேர் பத்து. இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில்...

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

Zee Studios  மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு...

தமிழ்வாணன் தயாரித்து நடிக்க ‘போங்கு’ பட இயக்குநர் தாஜ் இயக்கும் புதிய படம் தொடங்கியது!

மலைகளின் இளவரசியான ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைத்து, அந்த மக்களுக்கு...

More like this

ராவ் பகதூர் (தெலுங்கு) திரைப்பட விமர்சனம்

மனித மனதின் உளவியல் சிக்கல்களைப் பேசும் விசித்திரமான பரிசோதனைப் படம். ராவ் பகதூர் மாபெரும் ஜமீன் பரம்பரை வாரிசு; தனது...

நிறைய உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்; நல்ல கதையோடு வாருங்கள்! -‘அர்ஜுனன் பேர் பத்து’ பட விழாவில் நடிகர் யோகிபாபு பேச்சு

யோகிபாபு நடித்துள்ள 300 வது படம் அர்ஜுனன் பேர் பத்து. இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில்...

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

Zee Studios  மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு...