தேசிய விருது வென்ற இயக்குநர் சீனு ராமசாமி இலக்கியத்திலும் தடம் பதித்து வருகிறார். அந்த வகையில் அவர் எழுதிய ‘நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்’ எனும் கவிதை நூலின் வெளியீட்டு விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.
நடிகர் விஜய் சேதுபதி வாழ்த்துரை வழங்கி, நூலை வெளியிட்டார்.
நிகழ்வுக்கு எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பாரதி புத்தகாலயம் பதிப்பக உரிமையாளர் க. நாகராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார். கவிஞர் நந்தலாலா நூலுக்கான ஆய்வுரை வழங்கினார். சீனு. ராமசாமி ஏற்புரையாற்றினார்.
நிகழ்வில் ஏராளமான வளரும் கவிஞர்களும் புத்தக வாசிப்பாளர்களும் இலக்கிய ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

