HomeMovie Reviewரூபன் சினிமா விமர்சனம்

ரூபன் சினிமா விமர்சனம்

Published on

அடர்ந்த காட்டையும் ஆன்மிகத்தையும் இணைத்திருக்கும் கமர்ஷியல் படம்.

திருமணமாகி பல வருடங்களாக குழந்தையில்லாத விஜய் பிரசாத், காயத்ரி தம்பதி பரந்து விரிந்த காட்டுப் பகுதியில் இருக்கிற கிராமத்தில் வசிக்கிறார்கள். விஜய் காட்டில் சுற்றித் திரிந்து தேன் எடுத்து, விற்பனை செய்து சம்பாதிக்கிறார்.

ஒருமுறை அவர் தேனெடுக்க காட்டுக்குள் போகும்போது, பச்சிளங் குழந்தையொன்று அழுதபடி, யாருடைய ஆதரவும் இல்லாமல் கிடப்பதை பார்க்கிறார். குழந்தையை வீட்டுக்கு தூக்கிப்போக, அது அவர்களின் சொந்த வாரிசுபோல் வளர்கிறது.

இது ஒருபுறமிருக்க, பணத்துக்காக யானை உள்ளிட்ட காட்டு விலங்குகளை வேட்டையாடுவதை தொழிலாக வைத்திருக்கிற அயோக்கியன் ஒருவருக்கும் விஜய்க்கும் பகை உருவாகிறது. அந்த அயோக்கியனின் சூழ்ச்சியால் விஜய் ஊர் மக்களுக்கு பகையாளியாகிறார்.

அப்படியே நாட்கள் நகர ஊருக்குள் புலி நடமாட்டம் அதிகரிக்கிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர அரசாங்கம் தடை விதிக்கிறது. அதனால், மாலை போட்டிருக்கும் பக்தர்கள் சபரி மலைக்கு போக முடியாமல் தவிக்கும் சூழ்நிலை. புலி ஊருக்குள் வருவதற்கு விஜய்தான் காரணம் என மக்களும், ஐயப்ப பக்தர்களும் பழி சுமத்த, அந்த பழியிலிருந்து தன்னை மீட்க ஐயப்பனிடன் வேண்டுகிறார் விஜய்.

அவரது வேண்டுதலை ஐயப்பன் நிறைவேற்றினாரா இல்லையா என்பதே மீதிக் கதை… ஐயப்பனின் மகிமையை எடுத்துச் சொல்லும் இந்த படத்தை இயக்கியிருப்பவர் ஐய்யப்பன்!

கதையின் நாயகன் விஜய் பிரசாத்தின் தாடி மீசை அடர்ந்த முரட்டு தோற்றம், காட்டுப்பகுதியில் தேனெடுக்கிற நபர் வேடத்திற்கும் ஆக்சன் காட்சிகளுக்கும் சரியாய் பொருந்தியிருக்கிறது. காட்டு விலங்குகள் மீது நேசம், குழந்தையில்லா ஏக்கம், குழந்தை கிடைத்தபின் அதன் மீது காட்டும் பாசம் என இயல்பான நடிப்பால் கவர்கிறார்.

குழந்தையில்லா தம்பதி, காடு, ஆன்மிகம் என நகரும் கதைக்குத் தொடர்பில்லாமல், வீடு கட்ட லோன் வாங்கும் ஒருவர் அதை கட்ட முடியாமல் வேதனைக்கு ஆளாவதுபோல் இன்னொரு கதை தனி டிராக்கில் பயணிக்கிறது. அதில் நடித்திருக்கிற சார்லியின் நடிப்பு பரிதாபத்தை அள்ளுகிறது.

விஜய் பிரசாத்துக்கு மனைவியாக வருகிற காயத்ரி ரெமா எளிமையான நடித்திருக்க, வில்லனாக வருபவரிலிருந்து மற்ற அனைவரும் அவரவர் பங்களிப்பை நேர்த்தியாய் தர முயற்சித்திருக்கிறார்கள்.

வீட்டில் மனைவிக்கு அடங்கியவர், வெளியில் அலட்டலான அரசியல்வாதி என உருவாக்கப்பட்ட பாத்திரத்தில் விஜய் டிவி ராமர் ஓரளவு கலகலப்பூட்டுகிறார்.

ஒளிப்பதிவாளர் ராஜீவ் ராஜேந்திரன் காட்டின் பிரமாண்டத்தை அழகாக காட்டியிருக்க, அரவிந்த் பாபுவின் இசையில் நிறைவுக் காட்சியின் ஐய்யப்பன் பாடலில் பரவசம் வழிகிறது.

ரூபன் – ஐய்யப்ப பக்தர்களை கவர்வான்.

Latest articles

‘தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ்’ திரைப்படத்தின் சக்திவாய்ந்த நட்சத்திரக் கூட்டணியில் பெலவாடி மல்லம்மாவாக இணைந்த நடிகை பூமி சதீஷ் பெட்னேக்கர்! 

தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ் திரைப்படத்தின் நட்சத்திர பட்டியல் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. இந்திய...

இசைஞானி இளையராஜாவின் உறவினர் ஜெயனுடன் களமிறங்கும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவு: திரைப்படம் தீவிரமாகத் தொடங்கியது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்.

எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "ராஜாஸ் பிளேலிஸ்ட்" திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது...

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

'சில்வர் ஜூப்ளி ஸ்டார்' மோகன் அவர்கள் நடித்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான...

More like this

‘தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ்’ திரைப்படத்தின் சக்திவாய்ந்த நட்சத்திரக் கூட்டணியில் பெலவாடி மல்லம்மாவாக இணைந்த நடிகை பூமி சதீஷ் பெட்னேக்கர்! 

தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ் திரைப்படத்தின் நட்சத்திர பட்டியல் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. இந்திய...

இசைஞானி இளையராஜாவின் உறவினர் ஜெயனுடன் களமிறங்கும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவு: திரைப்படம் தீவிரமாகத் தொடங்கியது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்.

எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "ராஜாஸ் பிளேலிஸ்ட்" திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது...

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

'சில்வர் ஜூப்ளி ஸ்டார்' மோகன் அவர்கள் நடித்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான...
அடர்ந்த காட்டையும் ஆன்மிகத்தையும் இணைத்திருக்கும் கமர்ஷியல் படம். திருமணமாகி பல வருடங்களாக குழந்தையில்லாத விஜய் பிரசாத், காயத்ரி தம்பதி பரந்து விரிந்த காட்டுப் பகுதியில் இருக்கிற கிராமத்தில் வசிக்கிறார்கள். விஜய் காட்டில் சுற்றித் திரிந்து தேன் எடுத்து, விற்பனை செய்து சம்பாதிக்கிறார். ஒருமுறை அவர் தேனெடுக்க காட்டுக்குள் போகும்போது, பச்சிளங் குழந்தையொன்று அழுதபடி, யாருடைய ஆதரவும் இல்லாமல் கிடப்பதை பார்க்கிறார். குழந்தையை வீட்டுக்கு தூக்கிப்போக,...ரூபன் சினிமா விமர்சனம்