Sunday, December 14, 2025
spot_img
HomeCinemaஇந்த படம் இந்தி திணிப்பைப் பற்றி பேசவில்லை; பெண்கள் மீதான திணிப்பை நகைச்சுவையாக பேசுகிறது! -'ரகு...

இந்த படம் இந்தி திணிப்பைப் பற்றி பேசவில்லை; பெண்கள் மீதான திணிப்பை நகைச்சுவையாக பேசுகிறது! -‘ரகு தாத்தா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் சுமன் குமார் பேச்சு 

Published on

கதையின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, ‘தி ஃபேமிலி மேன்’, ‘ஃபார்ஸி’ ஆகிய வெற்றி பெற்ற இணைய தொடர்களுக்கு கதாசிரியராக பணியாற்றிய சுமன் குமார் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘ரகு தாத்தா.’

படத்தில் எம். எஸ். பாஸ்கர், ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, தேவதர்ஷினி, ராஜீவ் ரவீந்திரநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யாமினி யக்ஞமூர்த்தி ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ஹோம்பாலே ஃபிலிம்ஸ் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கிறார். படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி வெளியாகவிருக்கிறது. முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியபோது, ”இயக்குநர் சுமன், அறிமுகமான நண்பர் விஜய்யுடன் வந்து கதையை சொன்னார். அவர் கதையை சொல்லிவிட்டு சிரித்து விடுவார்.‌ இதற்கு முன்னால் இப்படி ஒரு திரைக்கதையை நான் கேட்டதில்லை. கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நடிக்கிறேன் என்றேன்.

இந்த படம் முழுமையான காமெடி டிராமா. படம் இந்தி திணிப்பை பற்றி பேசவில்லை. பெண்கள் மீதான திணிப்பை பற்றி தான் பேசுகிறது.‌ எந்த மாதிரியான திணிப்பு என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்தப் படத்தில் சிறிய அளவில் கருத்து சொல்ல முயற்சித்திருக்கிறோம். ஆனால் அது பிரச்சாரமாக இருக்காது. இது படத்தை பார்க்கும் போது ரசிகர்களுக்கு புரியும்.

பொதுவாகவே திணிப்பை பற்றி பேசியிருக்கிறோம். அதில் கதையை தொடர்பு படுத்தும் வகையில் இந்தியை ஒரு உதாரணமாக சொல்லியிருக்கிறோம். அரசியலையோ எதிர்மறையான விசயங்களையோ சொல்லவில்லை. இது  நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படம். ரசிகர்கள் படத்தை பார்த்து ஜாலியாக சிரித்து விட்டு மகிழ்ச்சியாக திரும்பலாம்” என்றார்.

இயக்குநர் சுமன் குமார் பேசியபோது, ”நண்பர்களிடம் நடைபெற்ற விவாதத்தின் போது ‘உறவினர் ஒருவர் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவாறே அவருடைய பதவி உயர்வுக்காக இந்தி தேர்வு ஒன்றினை எழுதினார்’ என்ற தகவலை பகிர்ந்து கொண்டார். அவரது பேச்சு என்னை கவர்ந்தது. அதுவே படத்திற்கான கருவாகவும் உருவானது. கீர்த்தி சுரேஷ், எம். எஸ். பாஸ்கர், ரவீந்திர விஜய் என ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அற்புதமான கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் இந்தி திணிப்பை பற்றி பேசவில்லை. பெண்கள் மீதான திணிப்பைத்தான் நகைச்சுவையாக பேசுகிறது” என்றார்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியபோது, ”யார் மீதும் எதையும் திணிக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட கருத்து.‌ அடிப்படையாக நான் நேசிக்கும் விசயம் இப்படத்தில் இருப்பதால் இசையமைக்க ஒப்புக் கொண்டேன்” என்றார்.

 

Latest articles

அசோக் செல்வன் – நிமிஷா சஜயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

அசோக் செல்வன் - நிமிஷா சஜயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. அசோக் செல்வனின் திரைப்பயணத்தில் மிக அதிக பெரும்...

Buddhi Clinic Hosts Landmark ‘Neurofrontiers 2025’ International Neuropsychiatry Colloquium

INA–GNG Partnership Brings 25 Global Experts to Chennai to Shape the Future of Brain–Mind...

விக்ரம் பிரபு, எல் கே அக்‌ஷய் குமார் நடித்துள்ள சிறை' படத்தின் டிரெய்லர் கோவை ஜி ஆர் டி...

பார்வதி நாயர் பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ள் ‘உன் பார்வையில்’ திரைப்படம் டிசம்பர் 19 முதல் Sun NXT-ல்…

பார்வதி நாயர் நடிப்பில், திரில்லர் ஜானரில் உருவான ‘உன் பார்வையில்’ படத்தை, Sun NXT-ல் டிசம்பர் 19, வெள்ளிக்கிழமை...

More like this

அசோக் செல்வன் – நிமிஷா சஜயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

அசோக் செல்வன் - நிமிஷா சஜயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. அசோக் செல்வனின் திரைப்பயணத்தில் மிக அதிக பெரும்...

Buddhi Clinic Hosts Landmark ‘Neurofrontiers 2025’ International Neuropsychiatry Colloquium

INA–GNG Partnership Brings 25 Global Experts to Chennai to Shape the Future of Brain–Mind...

விக்ரம் பிரபு, எல் கே அக்‌ஷய் குமார் நடித்துள்ள சிறை' படத்தின் டிரெய்லர் கோவை ஜி ஆர் டி...
error: Content is protected !!