HomeMovie Reviewமாயன் சினிமா விமர்சனம்

மாயன் சினிமா விமர்சனம்

Published on

ஆன்மிகம், அறிவியல், சிஜி என மிக்ஸிங் காக்டெயிலாக ‘மாயன்.’

ஐடி பணியாளர் ஆதிக்கு வரும் மெயிலில் 13 நாட்களில் உலகம் அழிந்துவிடும் என்ற அதிர்ச்சித் தகவல் இருக்கிறது. அதில் சொல்லியிருப்பது நிஜம்தான் என்பதை உறுதிபடுத்தும்படி சில சம்பவம்ங்களும் நடக்கிறது. ஆதியின் நாட்கள், நிமிடங்கள், விநாடிகள் எல்லாமே பரபரப்பாகிறது.

பேங்கில் கடன் பெற்று தன் அம்மாவுக்காக வீடு ஒன்றை வாங்குகிறார். மனதுக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார். அப்படியே சில நாட்கள் கடந்துபோக, போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் மோதுகிற சூழ்நிலை. அவரிடமிருந்து தப்பிக்க சிலரை கொலை செய்ய வேண்டிய கட்டாயம்… ஆதி அந்த கொலைகளைச் செய்ய சம்மதித்தாரா இல்லையா? உலகம் அழிந்ததா இல்லையா? என்பதெல்லாம் அடுத்தடுத்த காட்சிகளில்…

ஆதி மாயர்களின் வாரிசு என்பதும், அவர் பிறவி எடுக்கும் போதெல்லாம் தீயவர்களை அழிப்பது வழக்கம் என்பதும் கதையிலிருக்கிற சுவாரஸ்யங்கள்…

அடர்ந்து படர்ந்த தலைமுடியோடும் மீசை தாடிக்குள் புதைந்த முகத்தோடும் ஆதியாக வருகிற வினோத் மோகன் ஐடி பணியிலிருக்கிற இளைஞனாக, சாமியார் தோற்றத்தில் தீயவர்களை அழிக்கிற மகா சக்தியாக என மாறுபட்ட வேடங்களை ஏற்றிருக்கிறார். அதற்கேற்ப நடிக்க முயற்சியும் செய்திருக்கிறார். அந்த முயற்சி இதெல்லாம் பத்தாது தம்பி என்று சொல்லும் விதத்தில் இருக்கிறது.

ஹீரோவின் காதலியாக பிந்து மாதவி. கண்களால் உணர்வுகளைக் காட்டி, புன்னகையால் மனதைக் கவர்ந்து நகர்கிறார்.

போலீஸ் அதிகாரியாக வருகிற ஜான் விஜய் பதவித் திமிரோடு ஆட்டம் காட்ட, ஆடுகளம் நரேன், சாய் தீனா, ராஜ சிம்மன் என மற்றவர்கள் அவரவர் பங்களிப்பை குறையின்றிச் செய்திருக்கிறார்கள்.

கடைசி கால் மணி நேர படத்தை பாகுபலி படத்தின் போர்க்களக் காட்சியைப் போல் எடுக்க நினைத்திருப்பார்கள் போலிருக்கிறது. சிஜி தொழில்நுட்பம் கவர்ந்தாலும் உருவாக்கத்தின் ரிசல்ட் வீடியோ கேம் ரேஞ்சில் வந்திருக்கிறது.

மாயர்கள், அவர்களின் பின்னணி, ஜென்ம ஜென்மமாய் தொடரும் நல்ல சக்திக்கும் தீய சக்திக்குமான போர், கதைநாயகனை வேட்டையாடத் துரத்தும் பிரமாண்ட பாம்பு, ஆதிசிவன் என ஆன்மிக சமாச்சாரங்களை கையிலெடுத்திருக்கும் இயக்குநர் ராஜேஷ் கண்ணா, கதை திரைக்கதையில் இப்போதைய ரசிகர்களின் மனநிலையை மனதில் வைத்து நேர்த்தி காட்டியிருந்தால் மாயன் வசூலில் மன்னனாகியிருப்பான்!

 

Latest articles

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

More like this

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...