HomeGeneralமக்கள் நாயகன் என்.டி.ஆர் – இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மீண்டும் இணையும் பிரம்மாண்ட தெய்வீக திரைப்படம்!

மக்கள் நாயகன் என்.டி.ஆர் – இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மீண்டும் இணையும் பிரம்மாண்ட தெய்வீக திரைப்படம்!

Published on

பல ஆண்டுகளாக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளனர். மக்கள் நாயகன் என்.டி.ஆர் மற்றும் மாஸ் இயக்குநர்  திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இணையும் புதிய திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் முந்தைய வெற்றிப்படமான Aravinda Sametha Veera Raghava (அரவிந்த சமேத வீரராகவா)-க்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் உருவாகுவது இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்த படத்தைப் பற்றி என்.டி.ஆர் தனது X சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். படத்தின் அறிவிப்பு போஸ்டரில் திரிசூலம் மற்றும் வேல் ஒன்றிணைவதுடன் DNA வடிவமைப்பும் இடம்பெற்றுள்ளது. மேலும், “ஒரே வேல்… ஒரே நோக்கம்… ஒரே தெய்வீக தீர்ப்பு” (One Spear, One Purpose… One Divine Reckoning) என்ற டேக்லைன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
புராணக் கதைகளின் தாக்கத்துடன், தெய்வீக கருவை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், வலுவான கதைக்களம், ஆழமான உணர்வுகள், அதிரடி காட்சிகள் மற்றும் பிரம்மாண்டமான உலகக் கட்டமைப்புடன் உருவாகவுள்ளது.
இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் இணைந்துள்ளார். அவரது இசை இந்த பிரம்மாண்ட படைப்புக்கு மேலும் ஒரு சிறப்பை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படத்தை ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் சார்பில் எஸ். ராதாகிருஷ்ணா (சின்ன பாபு) மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் சார்பில் நந்தமூரி கல்யாண் ராம் இணைந்து தயாரிக்கின்றனர். தெலுங்கு சினிமாவின் வெற்றிகரமான நடிகர்–இயக்குநர் கூட்டணியும், இரண்டு முன்னணி தயாரிப்பு நிறுவனங்களும் இணைவதால், இந்திய சினிமாவின் மிகப் பிரம்மாண்டமான திரைப்படங்களில் ஒன்றாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்பு அட்டவணை குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும்.

Latest articles

படத்தை வித்தியாசமான ஜானரில் உருவாக்க படப்பிடிப்பின்போதே நிறைய உழைத்திருக்கிறோம்! -சென்னையில் நடந்த அரூபி பட விழாவில் இயக்குநர் அபிலாஷ் வாரியர்  

மலையாளத்தில் உருவாகியுள்ள ‘அரூபி’ திரைப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது....

சூர்யா – இயக்குநர் த.செ.ஞானவேல் கூட்டணியில் உருவாகும் திரைப்படம்… ஹொம்பாலே பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது!

மக்களின் பேராதரவும், ’அன்பான ஃபேன்ஸ்’ படையின் அன்பும் பெற்ற நடிகர் சூர்யா நடிப்பில், எல்லா தரப்பு சினிமா ரசிகர்களும்...

‘லவ் ஓ லவ்’ படக்குழுவினரின் சென்னை ஸ்கைஒன் ஆம்பா மால் ப்ரமோஷனல் ஈவென்ட்டிற்கு பிரமாண்ட வரவேற்பு!

இளமை துள்ளும் பொழுதுபோக்குத் திரைப்படமான 'லவ் ஓ லவ்' படக்குழுவினர் தங்களது திரைப்பட ப்ரமோஷனை சென்னை ஸ்கைஒன் மாலில்...

ஜாய் மேத்யூ, வைசாக் ரவி நடிப்பில் மலையாள புதுமுக இயக்குநர் அபிலாஷ் வாரியார் இயக்கிய ஹாரர் திரில்லர் ‘அரூபி’ ஜூலை 3-ம் தேதி ரிலீஸ்!

மலையாள புதுமுக இயக்குநர் அபிலாஷ் வாரியார் இயக்கியுள்ள ஹாரர் திரில்லர் திரைப்படம் 'அரூபி.' ஜாய் மேத்யூ, வைசாக் ரவி, நேஹா...

More like this

படத்தை வித்தியாசமான ஜானரில் உருவாக்க படப்பிடிப்பின்போதே நிறைய உழைத்திருக்கிறோம்! -சென்னையில் நடந்த அரூபி பட விழாவில் இயக்குநர் அபிலாஷ் வாரியர்  

மலையாளத்தில் உருவாகியுள்ள ‘அரூபி’ திரைப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது....

சூர்யா – இயக்குநர் த.செ.ஞானவேல் கூட்டணியில் உருவாகும் திரைப்படம்… ஹொம்பாலே பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது!

மக்களின் பேராதரவும், ’அன்பான ஃபேன்ஸ்’ படையின் அன்பும் பெற்ற நடிகர் சூர்யா நடிப்பில், எல்லா தரப்பு சினிமா ரசிகர்களும்...

‘லவ் ஓ லவ்’ படக்குழுவினரின் சென்னை ஸ்கைஒன் ஆம்பா மால் ப்ரமோஷனல் ஈவென்ட்டிற்கு பிரமாண்ட வரவேற்பு!

இளமை துள்ளும் பொழுதுபோக்குத் திரைப்படமான 'லவ் ஓ லவ்' படக்குழுவினர் தங்களது திரைப்பட ப்ரமோஷனை சென்னை ஸ்கைஒன் மாலில்...