HomeCinema'லஹரி - எம்ஆர்டி மியூசிக் - பிரயோக் இந்திய பாரம்பரிய இசை நிகழ்ச்சி' மூலம் 50-வது...

‘லஹரி – எம்ஆர்டி மியூசிக் – பிரயோக் இந்திய பாரம்பரிய இசை நிகழ்ச்சி’ மூலம் 50-வது வருடத்தை கொண்டாடுகிறது லஹரி மியூசிக் மற்றும் எம்ஆர்டி மியூசிக்!

Published on

இசை, இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் புகழ்பெற்ற நிறுவனங்களான லஹரி மியூசிக் மற்றும் எம்ஆர்டி மியூசிக், பொன் விழா ஆண்டான 50-வது வருடத்தில் அடியெடுத்து வைப்பதை மகிழ்வுடன் அறிவிக்கறது!

இந்த நிகழ்வின் அங்கமாக லஹரி மியூசிக் மற்றும் எம்ஆர்டி மியூசிக் ஆகியவை பிரயோக் ஸ்டுடியோ மற்றும் ஒன்லி கன்னடா ஓடிடியுடன் இணைந்து, ‘லஹரி – எம்ஆர்டி மியூசிக் – பிரயோக் இந்திய பாரம்பரிய இசை நிகழ்ச்சி’யை தொடங்குவதில் பெருமை அடைகிறது.

இந்திய கிளாசிக்கல் இசை மற்றும் பிற கலை வடிவங்களின் வளமான பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக அடுத்த வருடம் 10,000 பாடல்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

முக்கிய சிறப்பம்சங்கள்:

* கிளாசிக்கல் இசை, பக்தி பாடல்கள், நாட்டுப்புற இசை உள்ளிட்ட பல்வேறு கலை வடிவங்களில் 10,000 பாடல்களை அடுத்த வருடத்திற்குள் உருவாக்க வேண்டும்.

– பிரயோக் ஸ்டுடியோ மற்றும் ஒன்லி கன்னடா ஓடிடி உடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் அதிக பார்வையாளர்களை சென்றடைய முடியும்.

* புதிய திறமைகளைக் கண்டறிந்து ஊக்குவித்தல் மற்றும் வளர்ந்து வரும் கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான தளத்தை உருவாக்குதல்.

* புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் தொழில் நிபுணர்களின் ஆதரவும் வழிகாட்டுதலும் இளம் திறமையாளர்களுக்கு கிடைக்கும்.

நிகழ்வு குறித்து லஹரி மியூசிக் மற்றும் எம்ஆர்டி மியூசிக் இயக்குநர் லஹரி வேலு கூறியதாவது, “கலையில் 50 வருடங்களை எட்டியிருக்கும் இந்த வேளையில் எங்கள் புதிய பயணத்தைத் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்திய கிளாசிக்கல் இசையை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், புதிய திறமைகளுக்கான தளமாகவும் இது அமையும். இதற்காக பிரயோக் ஸ்டுடியோ மற்றும் ஒன்லி கன்னடா ஓடிடி உடன் இணைந்து பணியாற்ற நாங்கள் ஆர்வமுடன் இருக்கிறோம்” என்றார்.

லஹரி மியூசிக் மற்றும் எம்ஆர்டி மியூசிக் பற்றி:

லஹரி மியூசிக் மற்றும் எம்ஆர்டி மியூசிக் ஆகியவை இசை, இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக நிறுவப்பட்ட மதிப்புமிக்க நிறுவனங்கள். 50 வருட அனுபவத்துடன், அவர்கள் தொழில்துறையில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர். மேலும் பல்வேறு கலை வடிவங்களில் புது திறமையாளர்களுக்கும் வாய்ப்பு வழங்கி வருகின்றனர்.

Latest articles

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

More like this

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...