குழந்தை நட்சத்திரம் லக்ஷனா ரிஷியின் நடனம் இடம்பெற்ற எங்க அப்பா இசை ஆல்பத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ‘சுவாமி சரணம் பாடுவோம்‘ என்ற இரண்டாவது இசை ஆல்பத்தில் திரைக்கலைஞர்கள் பலருடன் இணைந்து கருப்பாடை அணிந்து ‘கார்த்திகையில் மாலையிட்டு சரணம் பாடுவோம்; சுவாமி சரணம் பாடுவோம்; நெய்விளக்கு தீபமிட்டு சரணம் பாடுவோம்‘ என்று ஆடிப்பாடி நடித்திருக்கிறார்.
இந்த பாடல் காட்சியை கேரளாவின் மலைப்பகுதிகளில் உள்ள புல்லுமேடு, வாகமன், பசுப்பாறை, மேரி குளம், பருந்துபாறை மற்றும் ஐயப்பன் கோவிலைச்சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கியுள்ளார்கள்.
குழந்தை நட்சத்திரம் லக்ஷனா ரிஷியுடன் திரைக்கலைஞர்கள் பாவா லட்சுமணன், காதல் சுகுமார், கொட்டாச்சி, ஆன்ந்த் செல்வராஜ், செந்தூர்பாண்டியன், சாரப் பாம்பு சுப்புராஜ், காதல் சரவணன், ராஜாஜிராஜன், சித்ரகுப்தன், தெனாலி சாமி, சங்கர், சிவலிங்கம் மற்றும் பலர் ஆடிப்பாடி நடித்திருக்கிறார்கள்.
இந்த பாடல் காட்சி கால் கொலுசு படத்தை இயக்கிய டைரக்டர் எஸ்.வி.ரிஷி தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் ‘சுவாமி ஐயப்பன்’ வாழ்க்கை வரலாற்று படத்தில் இடம் பெறுகிறது.
இந்த பாடலானது, கதைப்படி மாலைப் போட்டுக்கொண்ட ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதும் அதனால் ஏற்படும் ஆபத்துகளும், பிரச்சனைகளும் அதிலிருந்து எப்படி தப்பித்து ஐயப்பனின் ஆசியோடு ஐயனை தரிசனம் செய்கிறார்கள் என்பதை விளக்கும் பாடலாக உருவாகியுள்ளது.
படக்குழு:-
எழுத்து, இயக்கம்: எஸ்.வி.ரிஷி
தயாரிப்பு: திருமதி அனீஷா சதீஷ்
இசை – சந்தோஷ் சாய்
ஒளிப்பதிவு: ரெஜி
எடிட்டிங்: பிரகாஷ் மப்பு ,
தயாரிப்பு மேற்பார்வை: சைமன் நெல்சன்
மக்கள் தொடர்பு: பெருதுளசி பழனிவேல்

