HomeMovie Review‘கும்பாரி' சினிமா விமர்சனம்

‘கும்பாரி’ சினிமா விமர்சனம்

Published on

ஆழமான நட்பு, அண்ணன் தங்கை பாசப் பிணைப்பு கூடவே கலகலப்பு என குதூகலம் தருகிற ‘கும்பாரி.’

படத்தின் ஹீரோவுக்கு, குற்றச் செயல்களில் ஈடுபடுவதையே தொழிலாக கொண்ட ஒரு அடிதடி ஆசாமியின் தங்கை மீது காதல். தங்கையின் காதல் கல்யாணத்தில் முடிந்துவிடக் கூடாது என அந்த அண்ணன் களமிறங்குகிறான்.

அல்லக்கை, அடியாள் என பலமாக இருக்கிற அந்த அண்ணனுடைய எதிர்ப்பைச் சமாளித்து, ஹீரோவை அவன் விரும்பிய பெண்ணுடன் சேர்த்து வைக்க ஹீரோவின் நண்பன் முயற்சிக்கிறான். அந்த முயற்சியின் பலன் என்ன என்பதே கதை…

ஹீரோவாக விஜய் விஷ்வா. பிராங் வீடியோவுக்கு தன்னை பயன்படுத்திக் கொண்ட பெண் மீது எரிச்சலாகி, பின் அவள் மீது காதலாகி ஜாலியாக சுற்றித் திரிகிறார். காதலியின் அண்ணனுக்குப் பயந்து காதலியோடு வெவ்வேறு ஊர்களுக்கு ஓடுகிறார், ஒளிகிறார். எதற்காகவும் அலட்டிக் கொள்ளாமல் எல்லாவற்றையும் இயல்பாக செய்திருக்கிறார்.

என்னைப் பார் என இழுக்கும் இளமை, அழகான முகம், அசத்தல் புன்னகை என காம்போ பேக்காக மஹானா. போதும் போதும் என பிரியம் காட்டுகிற அன்ணனைப் பிரிந்து, காதலனோடு சேரத் துடிப்பதில் சுறுசுறுப்பு காட்டியிருக்கிறார்.

பாசம் என்ற பெயரில் கிறுக்குத்தனமாக நடந்து தங்கையை கிறுகிறுக்க வைப்பதாகட்டும், வீட்டை விட்டுப் போன தங்கையை துரத்திப் பிடிக்க அங்குமிங்கும் ஓடுவதாகட்டும் ஜான் விஜய்யின் நடிப்பு கொஞ்சம் அதிகப்படிதான் என்றாலும் முடிந்தவரை சிரிக்க வைக்கிறார்.

உறவுக்காரர்களோடு குடித்துக் கூத்தடிக்கிற பருத்தி வீரன் சரவணன், அம்மன் வேடம் போட்டு தம்பியைக் குழப்பிவிடுகிற செந்தி, தோழியின் காதலன் போட்ட மாலையை கழுத்தில் சுமந்து கதையை காமெடி டிராக்கில் தள்ளிவிடுகிற ‘ஜாங்கிரி’ மதுமிதா என பலரும் அவரவர் பங்குக்கு கலகலக்க வைக்கிறார்கள்.

அடியாட்களின் தலைவனாக வருகிற சாம்ஸின் அலப்பரைகள் ரசிக்க வைக்கின்றன.

தன் கும்பாரி (கன்னியாகுமரி மீனவர்களின் பேச்சுமொழியில் கும்பாரி என்றால் நண்பன் என்று அர்த்தம்)விரும்பியதை அடைய எதையும் செய்யத் தயாராகி, செய்து முடிக்கிற நலீப் ஜியாவின் நடிப்பும் கவர்கிறது.

அந்தோணி தாசன் பாடும் ‘அவிய இவிய எல்லோரும் கேளுங்க’ பாடலில் உற்சாகம் கரைபுரள்கிறது; பாடல் வரிகளில் குமரி மக்களின் வட்டார வழக்கு பின்னிப் பிணைந்திருக்கிறது. ஜெய்பிரகாஷ், ஜெய்சன், பிரித்வி கூட்டணியின் இதமான இசையில் ‘நானும் நீயும் சேந்திடவே மனம் ஏங்குதே’ பாடம் இதயம் வருடுகிறது.

பூவாறு, திற்பரப்பு அருவி என கன்னியாகுமரியின் அழகை பிரகாசமாக படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரசாத் ஆறுமுகம்.

மிகமிக எளிமையான காதல் கதையில் நட்பையும் அண்ணன் தங்கை சென்டிமென்டையும் கலந்து சிம்பிளான சிரிப்பு விருந்து படைத்திருக்கிற இயக்குநர் கெவின் ஜோசப், அடுத்தடுத்த படங்களை சிறப்பாகத் தருவார் என நம்பலாம்.

Latest articles

பிரபல இயக்குநர் பாண்டிராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்ட ‘வாரண்ட்’ சீரிஸ் டிரெய்லர் வெளியீட்டு விழா!

விலங்கு சீரிஸ், மாமன் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள வாரண்ட்...

சென்னைஸ் அமிர்தாவின் விளம்பர தூதர் நடிகை ஶ்ரீலீலா,  சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் கல்லூரியை பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடி உற்சாகமூட்டினார்.

சென்னைஸ் அமிர்தா கல்லூரியின்  உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை பார்த்து அவர் பாராட்டு தெரிவித்தார்.   விமான நிலையம் போன்ற நிஜ...

விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளில் வெளியான ‘ரவுடி ஜனார்த்தனா’ படத்தின் ஸ்பெஷல் போஸ்டர்!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரின் கீழ், தில் ராஜூ மற்றும் ஷிரீஷ் தயாரிப்பில், ரவி கிரண் கோலா இயக்கத்தில்,...

29 சினிமா விமர்சனம்

தன் காதலன் தன்னையே சுற்றிக் கொண்டிருப்பதால் வெறுத்துப் போகும் காதலி பிரேக் அப் முடிவெடுக்கிறாள். வெறுக்கிற அளவுக்கு அவன்...

More like this

பிரபல இயக்குநர் பாண்டிராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்ட ‘வாரண்ட்’ சீரிஸ் டிரெய்லர் வெளியீட்டு விழா!

விலங்கு சீரிஸ், மாமன் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள வாரண்ட்...

சென்னைஸ் அமிர்தாவின் விளம்பர தூதர் நடிகை ஶ்ரீலீலா,  சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் கல்லூரியை பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடி உற்சாகமூட்டினார்.

சென்னைஸ் அமிர்தா கல்லூரியின்  உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை பார்த்து அவர் பாராட்டு தெரிவித்தார்.   விமான நிலையம் போன்ற நிஜ...

விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளில் வெளியான ‘ரவுடி ஜனார்த்தனா’ படத்தின் ஸ்பெஷல் போஸ்டர்!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரின் கீழ், தில் ராஜூ மற்றும் ஷிரீஷ் தயாரிப்பில், ரவி கிரண் கோலா இயக்கத்தில்,...
ஆழமான நட்பு, அண்ணன் தங்கை பாசப் பிணைப்பு கூடவே கலகலப்பு என குதூகலம் தருகிற ‘கும்பாரி.' படத்தின் ஹீரோவுக்கு, குற்றச் செயல்களில் ஈடுபடுவதையே தொழிலாக கொண்ட ஒரு அடிதடி ஆசாமியின் தங்கை மீது காதல். தங்கையின் காதல் கல்யாணத்தில் முடிந்துவிடக் கூடாது என அந்த அண்ணன் களமிறங்குகிறான். அல்லக்கை, அடியாள் என பலமாக இருக்கிற அந்த அண்ணனுடைய எதிர்ப்பைச் சமாளித்து, ஹீரோவை அவன் விரும்பிய...‘கும்பாரி' சினிமா விமர்சனம்