HomeCinemaகொலைச்சேவல் சினிமா விமர்சனம்

கொலைச்சேவல் சினிமா விமர்சனம்

Published on

சாதிவெறியால் சமூகத்தில் நடந்த, இப்போதும் நடக்கிற கொடூரங்களை மையப்படுத்தி வருகிற திரைப்படங்களில் ஒன்றாக, கொடூர சம்பவங்களைக் காண்பித்த விதத்தில் இதுவரை தராத அச்ச உணர்வைத் தருகிற படைப்பு.

காட்டுப்பகுதிக்குள் இருக்கிற தெய்வம் நிறைசூலி. நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிற இந்த கதையின் நாயகியை, அவருடைய கணவனின் குடும்பம் அந்த நிறைசூலியை தரிசிக்க, சேவல் பலியிட்டு படையலிட்டு வணங்க அழைத்துச் செல்கிறார்கள்.

சாமி கும்பிட போனால் நல்லதுதானே நடக்க வேண்டும்? மாறாக நடப்பதெல்லாம் விபரீதமாக இருக்கிறது.

கதாநாயகிக்கும் கதாநாயகனுக்குமான அறிமுகம், அவர்களுக்குள் உருவாகும் காதல், காதலோடு சுற்றித்திரியும் தருணங்கள், கோயிலுக்கு செல்கிற பயணம், படையலுக்கு முன்வரை அங்கு நடக்கும் சில விஷயங்கள் அத்தனையும் ஒவ்வொரு விதத்தில் மனதைக் கவர, அதன்பின் நடப்பதையெல்லாம் பார்க்க மனதைக் கல்லாக்கிக் கொள்ள வேண்டும்.

நாயகியாக தீபா பாலு, ஹோம்லி லுக் அவரது பாத்திரத்துக்கு அழகூட்டுகிறது. காட்சிகளுக்கேற்ப இயல்பாக நடித்துள்ள அவர் கிளைமாக்ஸில் உடம்பை வருத்திக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.

நாயகன் கலையரசன். அவரை எந்த படத்திலும் காதலியோடு உற்சாகம், மனைவி, பிள்ளை குட்டிகளோடு சந்தோஷம் என நல்லவிதமாக வாழவிட்டதில்லை. கொடுமைப்படுத்தி கொன்று தீர்ப்பதற்காகவே பயன்படுத்தப்படுகிற நடிகர் அவர். இந்த படத்திலும் சாதிவெறியர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகிறார். காதல், கல்யாணம் என கொஞ்சம் ஜாலியாக வலம்வரும்படியான காட்சிகளில் இயல்பாக நடித்திருக்கிறார்.

பாலசரவணனுக்கு வழக்கம்போல் கலகலப்பூட்டும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நிறைவுக் காட்சியில் அவரையும் போட்டுப் பிளக்கிறார்கள். ஐயோ பாவம் என்றிருக்கிறது.

தீபா பாலுவுக்கு அப்பாவாக வருகிற கஜராஜ், உறவினர்களாக வருகிறவர்கள் சாதிவெறியர்களாகி காட்டியிருக்கும் அரக்கத்தனம் பதற வைக்கிறது.

சாந்தன் தந்திருக்கும் இசையால் பாடல்கள் உயிரோட்டமாக கடந்துபோக, பரவச உணர்வுக்கேற்ப, பயங்கரமான சம்பவங்களுக்கேற்ப அமைந்திருக்கிறது பின்னணி இசை.

சம்பவங்கள் நிகழும் காட்டுப்பகுதியை பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு அழகாக காட்டியிருக்கிறது.

கடைசி கால் மணி நேரம் உயிரை உலுக்கியெடுக்கும் கொடூரங்கள் நடக்கும்போது பயத்திலும் பதட்டத்திலும் இதயத்துடிப்பு எகிற,

ஆணவக் கொலைகளுக்கு முடிவே இல்லை என்ற வேதனையோடு படம் முடிவுக்கு வருகிறபோது மனதில் பாரம் கூடுகிறது!

Rating 3 / 5  

 

 

Latest articles

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

More like this

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...