Sunday, December 14, 2025
spot_img
HomeCinemaநான்கு பேர் கைகளுக்கு கிடைத்த துப்பாக்கி என்னவெல்லாம் செய்கிறது? வித்தியாசமான கதையம்சத்தில் 'ஒன்ஸ் அபான் எ...

நான்கு பேர் கைகளுக்கு கிடைத்த துப்பாக்கி என்னவெல்லாம் செய்கிறது? வித்தியாசமான கதையம்சத்தில் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்.’

Published on

ஹைபர் லூப் வகை படைப்பாக, திரில்லர் சப்ஜெக்டில் வித்தியாசமான கதையம்சத்தில் உருவாகிவரும் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’

ஹைபர் லூப் வகை படைப்பாக, திரில்லர் சப்ஜெக்டில் வித்தியாசமான கதையம்சத்தில் உருவாகிவரும் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ படத்தில் பரத், ஷான், ராஜாஜி என மூவர் கதைநாயகர்களாக நடிக்கின்றனர்.

கதையின் நாயகிகளாக விருமாண்டி அபிராமி, டாணாக்காரன் அஞ்சலி நாயர், ‘குக் வித் கோமாளி’ பவித்ரா லட்சுமி ஆகியோர் நடிக்க, மாறுபட்ட கதாபாத்திரங்களில் கன்னிகா, தலைவாசல் விஜய், அருள் டி சங்கர், பொற்கொடி, பிஜிஎஸ், கல்கி, சையத் மற்றும் பலர் நடிக்கின்றனர். திருநங்கை தீக்‌ஷா முக்கிய கேரக்டரில் வருகிறார்.

இதுவரையிலான படப்பிடிப்பு முழுக்க முழுக்க சென்னையிலும் அதன் சுற்றுவட்டார பகுதியிலும் நடைபெற்றுள்ளது. இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த படம் ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில், பாலா, ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் புரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில் உருவாகிறது.

படத்தை இயக்குகிற இப்படத்தைப் பற்றி இயக்குநர் பிரசாத் முருகனிடம் பேசியபோது, ”மனித வாழ்வில் சந்தர்ப்பம் தான் ஹீரோ, சந்தர்ப்பம் தான் வில்லன். ஒரு பொருள் ஒரு மனிதன் கையில் எந்த சந்தர்ப்பத்தில் கிடைக்கிறது என்பதைப் பொறுத்து தான் அவன் அப்பொருளை நன்மைக்கோ அல்லது தீமைக்கோ பயன்படுத்துவான்.

அப்படி நான்கு பேர் கைகளில் எதிர்பாராத விதமாக ஒரு துப்பாக்கி கிடைக்கிறது. வெவ்வேறு வாழ்வியலில் இருக்கும், அவர்களது வாழ்க்கையை, அந்த துப்பாக்கி எப்படி மாற்றுகிறது என்பதை கருத்தியல் அரசியலுடன், கமர்ஷியல் கலந்து பேசியுள்ளோம்.

தயாரிப்பாளர் கேப்டன் எம்.பி. ஆனந்த் படத்தின் உருவாக்கத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் செய்து கொடுத்தார். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது” என்றார்.

படக்குழு:
தயாரிப்பு மேற்பார்வை: சிவமாணிக்க ராஜ்
இசை – நெடுநல்வாடை படத்தின் இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்க்ளின்
வசனம், பாடல்கள்: ஜெகன் கவிராஜ்
ஒளிப்பதிவு: காளிதாஸ், கண்ணன்
எடிட்டிங்: ‘ராட்சசன்’ படத்தின் எடிட்டர் ஷா\ன் லோகேஷ்
கலை இயக்குநர் நட்ராஜ்
சண்டைக்காட்சி: சுகன்
காஸ்ட்யூம் டிஸைனர்: ரிஸ்வானா
லைன் புரொடியூசர்: ஸ்ரீதர் கோவிந்தராஜ், பொன்சங்கர்
எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர்: கே.எஸ்.கே. செல்வகுமார்

Latest articles

அசோக் செல்வன் – நிமிஷா சஜயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

அசோக் செல்வன் - நிமிஷா சஜயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. அசோக் செல்வனின் திரைப்பயணத்தில் மிக அதிக பெரும்...

Buddhi Clinic Hosts Landmark ‘Neurofrontiers 2025’ International Neuropsychiatry Colloquium

INA–GNG Partnership Brings 25 Global Experts to Chennai to Shape the Future of Brain–Mind...

விக்ரம் பிரபு, எல் கே அக்‌ஷய் குமார் நடித்துள்ள சிறை' படத்தின் டிரெய்லர் கோவை ஜி ஆர் டி...

பார்வதி நாயர் பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ள் ‘உன் பார்வையில்’ திரைப்படம் டிசம்பர் 19 முதல் Sun NXT-ல்…

பார்வதி நாயர் நடிப்பில், திரில்லர் ஜானரில் உருவான ‘உன் பார்வையில்’ படத்தை, Sun NXT-ல் டிசம்பர் 19, வெள்ளிக்கிழமை...

More like this

அசோக் செல்வன் – நிமிஷா சஜயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

அசோக் செல்வன் - நிமிஷா சஜயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. அசோக் செல்வனின் திரைப்பயணத்தில் மிக அதிக பெரும்...

Buddhi Clinic Hosts Landmark ‘Neurofrontiers 2025’ International Neuropsychiatry Colloquium

INA–GNG Partnership Brings 25 Global Experts to Chennai to Shape the Future of Brain–Mind...

விக்ரம் பிரபு, எல் கே அக்‌ஷய் குமார் நடித்துள்ள சிறை' படத்தின் டிரெய்லர் கோவை ஜி ஆர் டி...
error: Content is protected !!