Thursday, January 22, 2026
spot_img
HomeCinemaசர்வதேச விருதுகளைக் குவித்த ‘கூழாங்கல்' படத்தின் அப்பா, மகன் பாசப்பிணைப்பு பார்வையாளர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்! -‘ரெளடி...

சர்வதேச விருதுகளைக் குவித்த ‘கூழாங்கல்’ படத்தின் அப்பா, மகன் பாசப்பிணைப்பு பார்வையாளர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்! -‘ரெளடி பிக்சர்ஸ்’ நயன்தாரா, விக்னேஷ் சிவன் நம்பிக்கை

Published on

மிகமிக புதுமையான கதைக்களத்தில் அமைந்த காரணத்தால் வெளியாவதற்கு முன்பே உலகளவில் அங்கீகாரம் பெற்ற படம் ‘கூழாங்கல்.’

அறிமுக இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் கருத்தடையான், சிறுவன் செல்லபாண்டி இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

படத்தின் கதை தந்த அற்புதமான உணர்வை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு இந்த படத்தை பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு அனுப்பியது நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ‘ரெளடி பிக்சர்ஸ்’ நிறுவனம். அதன் மூலம் , கூழாங்கல் ரோட்டர்டாம் 50வது சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று மிக உயரிய விருதான டைகர் விருதை வென்றது.

கடந்த 2022-ல் 94வது ஆஸ்கர் விருதுகளுக்கு இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாக இந்தப் படம் இருந்தது. அதே வருடம் இண்டிபெண்டண்ட் ஸ்பிரிட் அவார்டில் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் சிறந்த ஐந்து திரைப்படங்களில் ஒன்றாக பரிந்துரைக்கப்பட்டது.

அப்படியாக கடந்த இரண்டு வருடங்களில் 60-க்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்களில் தேர்வாகி முப்பதுக்கும் மேற்பட்ட விருதுகளை வென்று சாதனை படைத்தது.

அதையடுத்து அக்டோபர் 27; 2023 அன்று சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

படத்திற்கு ஆரம்பத்திலிருந்து ஆதரவு கொடுத்த வந்த இயக்குநர் ராமுக்கு நன்றி தெரிவித்துள்ள ’ரெளடி பிக்சர்ஸ்’ நயன்தாரா, விக்னேஷ் சிவன், ‘இந்த அப்பா மகன் பாசப்பிணைப்பு நிச்சயம் பார்வையாளர்களுக்கும் பிடிக்கும்’ என நம்பிக்கை தெரிவித்தனர்.

படக்குழு:- விக்னேஷ் குமுளை மற்றும் ஜெய பார்த்தி இருவரும் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்க, ஞான் ஊட் மற்றும் சிஞ்சு கலை இயக்குநராக பணியாற்ற கணேஷ் சிவா படத்தொகுப்பு செய்திருக்கிறார். ஒலி வடிவமைப்பை எம்.ஏ. ஹரிபிரசாத் கவனித்திருக்கிறார்.

Latest articles

பாரத்- சான்வி மேக்னா நடிப்பில் சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

நல்ல கதையம்சத்துடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்குவதை அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் நோக்கமாக கொண்டிருக்கிறது. அந்த...

‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகள் பகிர்ந்த அனுபவங்கள்!

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான வரலாற்று கதையான ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ள ரக்ஷனா இந்துசூடன்,...

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!

தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் காட்சிகள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டு...

தீவிரமான படைப்பாக ‘தடயம்.’ மீண்டும் ZEE5 ஓடிடி தளத்தில் சமுத்திரகனி!

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளுக்கும், சமூகப் பார்வை கொண்ட நடிப்புக்கும் பெயர் பெற்ற சமுத்திரகனி, மீண்டும் ZEE5 ஓடிடி...

More like this

பாரத்- சான்வி மேக்னா நடிப்பில் சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

நல்ல கதையம்சத்துடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்குவதை அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் நோக்கமாக கொண்டிருக்கிறது. அந்த...

‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகள் பகிர்ந்த அனுபவங்கள்!

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான வரலாற்று கதையான ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ள ரக்ஷனா இந்துசூடன்,...

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!

தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் காட்சிகள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டு...
error: Content is protected !!