HomeCinemaசென்னை ஆழ்வார்பேட்டை சாலை இனி 'கே.பாலச்சந்தர் போக்குவரத்து தீவு.' இயக்குநர் சிகரம் பிறந்தநாளில் தமிழ்நாடு அரசு...

சென்னை ஆழ்வார்பேட்டை சாலை இனி ‘கே.பாலச்சந்தர் போக்குவரத்து தீவு.’ இயக்குநர் சிகரம் பிறந்தநாளில் தமிழ்நாடு அரசு வழங்கிய கெளரவம்!

Published on

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் 95’வது பிறந்தநாள் விழா இன்று (ஜூலை 9; 2024) சென்னையில் உலகநாயகன் கமல்ஹாசனின் அலுவலகத்தில் நடந்தது. இயக்குநர் இமயம் பாரதிராஜா கலந்து கொண்டார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவக்குமார், சிரஞ்சீவி, மம்மூட்டி போன்ற முக்கிய நடிகர்கள், நடிகைகள், திரையுலக பிரபலங்களின் கடிதத்தோடு, இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் வாழ்ந்த பகுதியில், கே.பாலசந்தர் சாலை’ என பெயர் சூட்டவும், அவரின் திருவுருவ சிலை வைக்கவும் கோரிக்கையை, கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கவிதாலயா வீ.பாபு கொடுத்த கடிதம் தற்போது தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து, பெருநகர சென்னை மாநகராட்சி, முதன்மைச் செயலர் ஆணையரின் கருத்துரு அரசால் கவனமாக விரிவான ஆய்வுக்கு பின், பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-9, பகுதி-25, கோட்டம் 123-ல் உள்ள லஸ் சர்ச் சாலையில் காவேரி மருத்துவமனை அருகே, சுமார் 1000 சதுர அடி அளவில் அமையப் பெற்றுள்ள போக்குவரத்து தீவு என்று அமைந்துள்ள இடத்தினை, இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் போக்குவரத்து தீவு என்று பெயர் மாற்றம் செய்து பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் தலைமைச் செயலாளர், ஆணையர் அவர்களுக்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

கே.பாலசந்தர் போக்குவரத்து தீவு என்ற பெயரை சாலையில் நிறுவுவதற்கு முக்கியமாக முயற்சித்தவர்கள் கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கத்தின் தலைவரும், நடிகருமான ராஜேஷ் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவருமான பூச்சி எஸ்.முருகன், ஒளிப்பதிவாளரும், இயக்குநரும், கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளருமான கவிதாலயா வீ.பாபு ஆகியோர் முக்கியமானவர்கள்.

09.07.2024 இன்று இயக்குநர் கே.பாலசந்தர் அவர்களின் 94-வது பிறந்தநாளை முன்னிட்டு, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் நிறுவப்பட்டிருக்கும் கே.பாலசந்தர் திருவுருவ சிலைக்கு மலர் மாலை சூட்டி, கேக் வெட்டி கொண்டாடினார்கள். இவ்விழாவில் பாரதிராஜா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் தலைவர் பூச்சி முருகன், தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி, கே.பாலச்சந்தர் ரசிகர்கள் சங்க பொதுச்செயலாளர் வீ.பாபு, இயக்குனர்கள் வஸந்த், சரண், மங்கை அரிராஜன், நடிகர்கள் பூ விலங்கு மோகன், தாசரதி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

Latest articles

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

சவிர் சுதாகர் இயக்கத்தில், எஸ்.எஸ். குழுமத்தின் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள மம்மட்டியான் ஸ்டார்ஸ், நட்பு, கனவுகள் மற்றும் கிரிக்கெட்...

இந்த படம் நம் நாட்டின் வரலாறு மற்றும் ஆன்மிக மரபுகளை புதிய தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சி! -நாகபந்தம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விராட் கர்ணா 

அபிஷேக் நாமா இயக்கத்தில், இளம் நடிகர் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்க புராணக் கதைகள், மர்மங்கள் மற்றும் பிரம்மாண்டமான...

‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

சில திரைப்படங்களின் சீக்வல் மட்டும்தான் வெளியீடு என்பதைத் தாண்டி, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வாக மாறிவிடுகின்றன. குறிப்பாக...

இஸ்லாமியர்கள் குறித்த பார்வையை இந்த படம் மாற்றி இருக்கிறது என்பதை பெரும் வெற்றியாக நினைக்கிறேன்! -‘ஹபீபி’ படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் மீரா கதிரவன் பேச்சு

மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான ‘ஹபீபி’ திரைப்படத்தின் வெற்றிக்கு...

More like this

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

சவிர் சுதாகர் இயக்கத்தில், எஸ்.எஸ். குழுமத்தின் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள மம்மட்டியான் ஸ்டார்ஸ், நட்பு, கனவுகள் மற்றும் கிரிக்கெட்...

இந்த படம் நம் நாட்டின் வரலாறு மற்றும் ஆன்மிக மரபுகளை புதிய தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சி! -நாகபந்தம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விராட் கர்ணா 

அபிஷேக் நாமா இயக்கத்தில், இளம் நடிகர் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்க புராணக் கதைகள், மர்மங்கள் மற்றும் பிரம்மாண்டமான...

‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

சில திரைப்படங்களின் சீக்வல் மட்டும்தான் வெளியீடு என்பதைத் தாண்டி, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வாக மாறிவிடுகின்றன. குறிப்பாக...