பணக் கஷ்டத்தில் சிக்கியிருக்கும் விஜய் சேதுபதி. கோடிகளில் புரண்டு கொண்டிருந்து, பிசினஸ் எதிரிகளால் சாமானிய மனிதனாகிவிட்ட அரவிந்த் சுவாமி இருவரும் சந்திக்கிறார்கள். அந்த சந்திப்பு அவர்களின் வாழ்க்கையை மாற்றுகிறது. எப்படி மாற்றுகிறது என்பதும் அதனால் உருவாகும் விளைவுகளுமே வசனங்களே இல்லாத இந்த படத்தின் ஸ்க்ரீன்பிளே…
வறுமையில் தவித்தபடி, நாட்களை வெறுப்பாக கழித்தபடி காதலிலும் ஈடுபடும் விஜய் சேதுபதியின் உடல்மொழி பாவப்பட்ட மனிதனின் பிரதிபலிப்புக்கு பொருத்தமாக இருக்கிறது.
ஒரு கட்டம் வரை பணக்காரத்தனம், எதிரிகளால் வீழ்த்தப்பட்டபின் பந்தா தொலைத்த மனநிலை என அரவிந்த் சுவாமியின் பங்களிப்பு அசத்தல்.
விஜய் சேதுபதி மீது காதல் பார்வை வீசுவதாகட்டும், அவர் நேர்மை தவறி நடக்க முயற்சிக்கும்போது அது தவறென உணர்த்துவதாகட்டும் தன் கடமையை கச்சிதமாக செய்திருக்கிறார் அதிதி ராவ் ஹைதாரி.
ஏ ஆர் ரஹ்மான் இசையில் ஏதோ ஏதோ பாடல் மட்டும் மனதில் ஒட்டிக் கொள்கிறது. மற்ற பாடல்களில் இன்னும் அதிக வைப் தந்திருக்கலாம். பேச்சு மொழியே இல்லாத காட்சிகளுக்கு (பின்னணி) இசைமொழி உயிரூட்டியிருக்கிறது. கரண் பி ராவத் ஓளிப்பதிவு நேர்த்தி.
இருவேறு மனிதர்களின் உலகத்தில் காந்தி நோட்டு எப்படியெல்லாம் புகுந்து விளையாடுகிறது என்பதை மையப்படுத்தி கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கியுள்ள இந்த பேசா படம், திரையுலகில் பேசுபொருளாவது நிச்சயம்; ஆடியன்ஸ் மனதைக் கவர்வது சந்தேகம்.
Rating 2.5 / 5

