HomeCinemaரியோ ராஜ் - மாளவிகாவின் ஆண் பாவம் பொல்லாதது டிரெய்லர் செய்த உலக சாதனை!

ரியோ ராஜ் – மாளவிகாவின் ஆண் பாவம் பொல்லாதது டிரெய்லர் செய்த உலக சாதனை!

Published on

ரியோ ராஜ் – மாளவிகாவின் வெற்றிக் கூட்டணியில், பிளாக்‌ஷிப் இயக்குனர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஆண் பாவம் பொல்லாதது.’ இந்த படத்தினுடைய டிரெய்லர் லாஞ்ச் நிகழ்வு உலக சாதனையை புரிந்துள்ளது.

இதன் மூலம் , ‘உலகிலேயே அதிகபட்ச நபர்களால் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்ட திரைப்பட டிரெய்லர்’ எனும் பெருமையைப் பெற்றிருக்கிறது ஆண் பாவம் பொல்லாதது திரைப்படம் … இதுவரை எந்த உலக சினிமாவும் தொட்டிடாத உயரம் இது.

இந்த நிகழ்வில் 8000 மாணவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கெடுத்து சரியாக காலை 11.30 மணிக்கு அனைவரும் ஒன்று சேர்ந்து , தங்கள் சமூக ஊடக கணக்குகளிலிருந்து ஆண் பாவம் பொல்லாதது திரைப்படத்தின் டிரெய்லரை பதிவேற்றம் செய்தனர் … இந்நிகழ்வு ஈரோடு எக்ஸெல் கல்லூரியில் சிறப்பாக நடைப்பெற்றது.

“மாணவர்களின் உற்சாகமும் , ஊக்குவிப்பும் தான் இந்த உலக சாதனையை சாத்தியப்படுத்தியிருக்கிறது, குழுவிற்கு வாழ்த்துகள்” என சாதனை கேடையத்தை வழங்கிப் பேசினார், உலக சாதனை இயக்ககத்தின் அதிகாரி Ms.Alice Raynaud …

“படம் பெரும்பாலும் மக்களோடு ஒன்றிப்போகும் என்பதாலேயே , இதை மக்களை வைத்தே ரிலீஸ் செய்ய முடிவெடுத்தோம் .. இந்த உலக சாதனையை பெருவெற்றியாக்கிய , எக்ஸெல் நிறுவனத்திற்கும் மாணவர்களுக்கும் நன்றிகள் என மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டார் , திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி சக்திவேல் அவர்கள் …

“இது எனது ஊர் .. நான் வளர்ந்த ஊரில் இவ்வளவு பிரம்மாண்டமாய் என் படத்தின் ஒரு நிகழ்வு நடந்தேறும் என ஒரு போதும் நான் எண்ணியதில்லை , ஆனால் அதற்காக உழைத்துக்கொண்டேதான் இருந்திருக்கிறேன் “ என படத்தின் கதாநாயகன் ரியோ ராஜ் நெகிழ்ந்து பேசினார்.

“இங்கிருந்து சினிமாவில் ஜொலிக்கும் ஒரு குழுவிற்கு , இந்த மண்ணில் இப்படி ஒரு விழா எடுப்பது எங்களுக்கே பெருமை” என சிலாகித்தார் எக்ஸெல் கல்லூரி நிர்வாக இயக்குனர் திரு.மதன்.

இணை தயாரிப்பாளர் விஜயன் , கதாநாயகி மாளவிகா மனோஜ், நடிகர் விக்னேஷ்காந்த் , இயக்குனர் கலையரசன் , டிரம்ஸ்டிக்ஸ் மணிகண்டன் , விவேக் என அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சாதனைப் பயணத்தைத் தொடங்கியிருக்கும் “ஆண் பாவம் பொல்லாதது” திரைப்படம் , அக்டோபர் 31 முதல் உலகெங்கிலும் வெளியாகிறது.

Latest articles

இந்தக் குழுவுடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் பணியாற்ற வேண்டும்! -இதயம் முரளி படத்தின் வெற்றி விழாவில் விருப்பம் தெரிவித்த நடிகை கயாது லோகர் 

அதர்வா நடிக்க, ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கிய 'இதயம் முரளி' திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துகொள்ள...

‘நெக்ஸா இந்தியன் ஸ்ட்ரீமிங் அகாடமி விருதுகள்’ விழாவில் சிறந்த இசையமைப்பாளராக கௌரவிக்கப்பட்ட சாம் சி எஸ்!

இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம்...

மூன்றாம் முறை தேசிய விருது… ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு பாடகர் வேல்முருகன் காசு மாலையுடன் பாராட்டு!

நேற்று (19 ஜூலை 2026) அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில்  ஜி.வி. பிரகாஷ்குமார் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்குத் தேர்வு...

46 ஆண்டுகால திரைப்பயணத்தில் மேலும் ஒரு மகுடம் சூட்டிய ‘அமரன்’ – 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் மூன்று விருதுகளை வென்றது!

இந்திய திரையுலகில் நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தனது தனித்துவமான கலைப் பார்வையால் அழியாத...

More like this

இந்தக் குழுவுடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் பணியாற்ற வேண்டும்! -இதயம் முரளி படத்தின் வெற்றி விழாவில் விருப்பம் தெரிவித்த நடிகை கயாது லோகர் 

அதர்வா நடிக்க, ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கிய 'இதயம் முரளி' திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துகொள்ள...

‘நெக்ஸா இந்தியன் ஸ்ட்ரீமிங் அகாடமி விருதுகள்’ விழாவில் சிறந்த இசையமைப்பாளராக கௌரவிக்கப்பட்ட சாம் சி எஸ்!

இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம்...

மூன்றாம் முறை தேசிய விருது… ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு பாடகர் வேல்முருகன் காசு மாலையுடன் பாராட்டு!

நேற்று (19 ஜூலை 2026) அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில்  ஜி.வி. பிரகாஷ்குமார் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்குத் தேர்வு...