HomeCinemaகே.பி.ஒய் பாலா கோலிவுட்டில் கண்டெண்ட் டிரிவன் ஸ்டார் ஆகிறார்! -இயக்குநர் பாலாஜி சக்திவேல்

கே.பி.ஒய் பாலா கோலிவுட்டில் கண்டெண்ட் டிரிவன் ஸ்டார் ஆகிறார்! -இயக்குநர் பாலாஜி சக்திவேல்

Published on

இயக்குநர் பாலாஜி சக்திவேல் தமிழ் திரைப்பட உலகில் தனது புதுமையான கதையம்சங்களால் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியவர். சினிமா இயக்கத்தில் சாதனை படைத்த அவர், தற்போது நடிகராக திகழ்ந்து, இயல்பான மற்றும் உண்மையான நடிப்பால் பாராட்டுகளை குவித்து வருகிறார். எந்த படத்திலும் அவர் தோன்றுவது அந்த படத்துக்கே கூடுதல் நிறைவை வழங்கும் ‘லக்கி சார்ம்’ என்று பாராட்டப்படுகிறார்.

சமீபத்தில் வெளிவந்த குடும்பஸ்தன் மற்றும் டிஎன்ஏ படங்களில் பார்வையாளர்களின் மனதை கவர்ந்த அவர், தற்போது காந்தி கண்ணாடி படத்தின் மூலம் மேலும் ஒரு முறை ரசிகர்களின் இதயங்களை வெல்ல தயாராக இருக்கிறார். செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் இத்திரைப்படத்தின் விளம்பர காட்சிகளிலேயே சினிமா ரசிகர்களின் ஆவலை தூண்டியுள்ளார்.

படத்தைப் பற்றி பேசும்போது பாலாஜி சக்திவேல் பேசியபோது “நான் பல வருடங்கள் இயக்குநராக இருந்து வந்திருக்கிறேன். நடிகர்களின் மூலம் கதாபாத்திரங்கள் உயிர்ப்பெடுப்பதைப் பார்ப்பது எனக்கு எப்போதும் மகிழ்ச்சி. ஆனால், மறுபுறம் நிற்கும் நடிகராக இருப்பது சுலபமல்ல என்பதைக் கற்றுக் கொண்டேன். நான் இணைந்த ஒவ்வொரு திட்டமும் சிறந்த இயக்குநர்களின் படைப்பாக இருந்தது. அதுபோலவே காந்தி கண்ணாடியை ஷெரீஃப் விவரித்தவுடன் உடனே சம்மதித்தேன். மிகவும் அழகான, உணர்ச்சிமிகு திரைக்கதை அது. இறுதிப் படத்தைப் பார்த்தபோது அவர் எவ்வளவு நன்றாக உருவாக்கியிருக்கிறார் என்பதில் மகிழ்ச்சி.

இந்த படத்தில் கே.பி.ஒய் பாலா நிச்சயமாக கோலிவுட்டின் ‘கண்டெண்ட் டிரிவன் ஸ்டார்’ ஆகப் போகிறார். அர்ச்சனா ஒரு அபாரமான திறமைசாலி, அவருடன் திரை பகிர்ந்தது பெருமையாக இருந்தது. காந்தி கண்ணாடி பார்வையாளர்களுக்கு அற்புதமான அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன்” என்றார்.

காந்தி கண்ணாடி திரைப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ஷெரீஃப். தயாரிப்பு ஆதிமூலம் க்ரியேஷன்ஸ் சார்பில் ஜெய்கிரண். படத்தில் கே.பி.வை பாலா, நமிதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கதாநாயக, கதாநாயகிகளாக நடித்துள்ளனர். பாலாஜி சக்திவேல், அர்ச்சனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை – விவேக்–மெர்வின், ஒளிப்பதிவு – பாலாஜி கே.ராஜா, திருத்தம் – சிவானந்தீஸ்வரன்.

இந்தப் படத்தை வரும் செப்டம்பர் 5-ம் தேதி சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

Latest articles

ராவ் பகதூர் (தெலுங்கு) திரைப்பட விமர்சனம்

மனித மனதின் உளவியல் சிக்கல்களைப் பேசும் விசித்திரமான பரிசோதனைப் படம். ராவ் பகதூர் மாபெரும் ஜமீன் பரம்பரை வாரிசு; தனது...

நிறைய உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்; நல்ல கதையோடு வாருங்கள்! -‘அர்ஜுனன் பேர் பத்து’ பட விழாவில் நடிகர் யோகிபாபு பேச்சு

யோகிபாபு நடித்துள்ள 300 வது படம் அர்ஜுனன் பேர் பத்து. இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில்...

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

Zee Studios  மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு...

தமிழ்வாணன் தயாரித்து நடிக்க ‘போங்கு’ பட இயக்குநர் தாஜ் இயக்கும் புதிய படம் தொடங்கியது!

மலைகளின் இளவரசியான ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைத்து, அந்த மக்களுக்கு...

More like this

ராவ் பகதூர் (தெலுங்கு) திரைப்பட விமர்சனம்

மனித மனதின் உளவியல் சிக்கல்களைப் பேசும் விசித்திரமான பரிசோதனைப் படம். ராவ் பகதூர் மாபெரும் ஜமீன் பரம்பரை வாரிசு; தனது...

நிறைய உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்; நல்ல கதையோடு வாருங்கள்! -‘அர்ஜுனன் பேர் பத்து’ பட விழாவில் நடிகர் யோகிபாபு பேச்சு

யோகிபாபு நடித்துள்ள 300 வது படம் அர்ஜுனன் பேர் பத்து. இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில்...

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

Zee Studios  மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு...