HomeMovie Reviewஃபோர்த் ஃப்ளோர் சினிமா விமர்சனம்

ஃபோர்த் ஃப்ளோர் சினிமா விமர்சனம்

Published on

ஓரு விதத்தில் கிரைம் திரில்லராகவும் இன்னொரு விதத்தில் ஹாரர் திரில்லராகவும் வித்தியாச அனுபவம் தருகிற ‘ஃபோர்த் ஃப்ளோர்.’

நான்கைந்து வ்ருடங்கள் முன் தன்னைப் பிரிந்த மனைவிக்கு ஆபத்து என்ற சூழ்நிலையில், அவரைத் தேடி ஒரு அபார்ட்மெண்டுக்கு போகிறார் இந்த கதையின் நாயகன் தீரன். அங்கு சென்று தங்கியதிலிருந்து அவருக்கு தொடர்ச்சியாக அதே அபார்ட்மெண்டில் தங்கியிருக்கும் சிலர் தற்கொலை செய்து மரணமடைவது போன்ற கனவு வருகிறது. அப்படி கனவில் மரணமடைந்தவர்கள் நிஜத்தில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது திரைக்கதை நமக்குத் தருகிற அதிர்ச்சி.

அந்த அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிற தீரன், அதே அபார்ட்மெண்டில் வசித்து வந்த தன் மனைவியைக் காணவில்லை என்கிறபோது என்ன செய்கிறார்? நடந்த சம்பவங்கள் அவருக்கு கனவாக வருவதன் பின்னணி என்ன? அவரது மனைவிக்கு என்னவானது? கொலைகள் யாரால், எதற்காக நடந்தன?

இந்த எல்லா கேள்விகளுக்கும் இயக்குநர் எல் ஆர் சுந்தரபாண்டியின் திரைக்கதையில் பதில் கிடைக்கிறது.

மனம் முழுக்க குழப்பம், உடல் முழுக்க பதற்றம், தன்னுடன் லிவின் ரிலேசன்ஷிப்பில் வாழ்ந்த பெண் மீது நேசம், அந்த உறவில் பிறந்த மகள் மீது பாசம் என கலவையான உணர்வுகளை கச்சிதமாக தந்திருக்கிறார் தீரனான வருகிற ஆரி ஆர்ஜுனன்.

அவருடன் லிவின் ரிலேசன்ஷிப்பில் இருக்கிற பவித்ரா, ஆரியின் சிநேகிதியாக வருகிற தீப்ஷிகா, வில்லனாக இயக்குநர் சுப்ரமணிய சிவா என மற்றவர்களிடமிருந்து அவரவர் கேரக்டருக்கு ஏற்ற நடிப்பு கிடைத்திருக்கிறது.

ஜே.லக்‌ஷ்மனனின் ஒளிப்பதிவும், தரண்குமாரின் பின்னணி இசையும் ஹாரர், கிரைம் திரில்லர் என கலந்துகட்டிய கதையோட்டத்துக்கு பொருத்தமாக இருக்கிறது.

அப்பார்ட்மென்ட், ஃபோர்த் ஃப்ளோர், அதில் அமானுஷ்ய நடவடிக்கைகள், அதிரடி திருப்பங்கள், எமோஷ்னல் எபிசோடுகள் என கதைக்களத்தை வித்தியாசமாக யோசித்த இயக்குநர் எல் ஆர் சுந்தரபாண்டி, திரைக்கதை கட்டமைப்பை இன்னும் பலமாக்கியிருக்கலாம்.

Rating 3 / 5

Latest articles

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

More like this

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...