HomeCinemaவழக்கமான கதை சொல்லலில் இருந்து மாறுபட்ட கோணத்தில் ‘ஈரப்பதம் காற்று மழை.' வெற்றி, கிஷன்...

வழக்கமான கதை சொல்லலில் இருந்து மாறுபட்ட கோணத்தில் ‘ஈரப்பதம் காற்று மழை.’ வெற்றி, கிஷன் தாஸ் நடிப்பில் உருவாகிறது.

Published on

‘ஜீவி’ படத்தின் மூலம் புகழ்பெற்ற வெற்றி, ‘முதல் நீ முடிவும் நீ’ பட நாயகன் கிஷன் தாஸ், தீப்தி ஓரண்டேலு ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ‘ஈரப்பதம் காற்று மழை.’

விதவிதமான கதைக்களங்களில் வித்தியாசமான வெற்றிப் படங்களைத் தயாரித்த ‘பிக் பிரிண்ட் பிக்சர்ஸ்’ ஐ.பி.கார்த்திகேயன் இந்த படத்தை தயாரிக்க, அறிமுக இயக்குநர் சலீம் ஆர் பாட்ஷா இயக்கியுள்ளார்.

இயக்குநர் சலீம் ‘மயக்கம் அது மாயம்’ உள்ளிட்ட குறும்படங்களை இயக்கியுள்ளார். அந்த படைப்புகள் வலுவான கதைக்களத்தாலும் நேர்த்தியான மேக்கிங் ஸ்டைலும் வரவேற்பைப் பெற்றவை. அவரது திறமையை இந்த படத்தின் தயாரிப்பாளர் பாராட்டியுள்ளார்.

படம் குறித்து இயக்குநரிடம் கேட்டோம். ‘‘இந்த படம் மூன்று வெவ்வேறு உலகங்களைச் சேர்ந்த வெவ்வேறு நபர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கிறது. வழக்கமான கதை சொல்லும் முறை இந்தப் படத்தில் இருக்காது.

வாழ்க்கை ஒருவர் மீது எந்த அளவுக்கு கொடூரமாகவும்,கனிவாகவும் இருக்கிறது என்பதை மையமாக வைத்து கதை நகரும்.

முற்றிலும் நல்லவர் என்றோ முற்றிலும் தீயவர் என்றோ மனிதர் யாரும் இல்லை. அது தனி நபரின் உணர்வைப் பற்றியது என்ற எண்ணத்தையும், அவர்கள் ஒருவரையொருவர் எப்படி எதிர்கொள்கிறார்கள் மற்றும் அதன் விளைவுகளை பெறுத்ததே வாழ்க்கை என்பதை உணர்த்தும் விதத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையின் மூன்று வெவ்வேறு பகுதிகளில் இந்தக் கதை நடைபெறுவதால், முடிந்த அளவுக்கு லைவ் லொகேஷனில் அதன் உண்மைத்தன்மையுடன் படம் பிடித்திருக்கிறோம்.

நடிகர் வெற்றி தனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைத்தேர்வின் மூலம் தனது அந்தஸ்தை உயர்த்திக் கொண்டே இருக்கிறார். திரையுலகில் நுழைவதற்கு முன்பே பிரபலமான நடிகர் கிஷன் தாஸ் ‘முதல் நீ முடிவும் நீ’ மற்றும் இன்னும் சில திரைப்படங்களில் தனது திறமையான நடிப்பின் மூலம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இவர்களுடன் திறமையான தியேட்டர் ஆர்டிஸ்ட்டான தீப்தியும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். அனைவரும் கதாபாத்திரங்களையும் அவற்றின் ஆழமான உணர்ச்சிகளையும் புரிந்து கொண்டு திறமையாக நடித்துள்ளனர்.

தாங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் கதையின் தரமும் படைப்பின் உண்மை உணர்வும் மாறாது வரவேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வரக்கூடிய பிக் பிரிண்ட் பிக்சர்ஸுடன் நாங்கள் இணைந்தது பெருமையாக இருக்கிறது” என்றார்.

படக்குழு:
இசை: ஸ்ரீராம் வெங்கடேஷ்
ஒளிப்பதிவு: அமல் டோமி
படத்தொகுப்பு: ஆஷிஷ் ஜோசப்
கலை இயக்குநர்: அந்தோணி மரியா கெர்லி எல்
சண்டைப் பயிற்சி: நூர் முகமது

Latest articles

கருணாஸ், நிமிஷா சஜயன் நடித்துள்ள ‘என்ன விலை’ திரைப்படம் ரிலீஸுக்கு முன் தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருது வென்றுள்ளது!

விருதுகளுக்கும் அங்கீகாரத்திற்கும் இடைப்பட்ட இடைவெளியை குறைக்கும் படங்கள் வெகு சிலதான். சில விருதுகள், குறிப்பாக ‘சிறந்த திரைக்கதை’ விருது...

பாண்டிராஜ் இயக்கியுள்ள திரில்லர் காமெடி டிராமா ‘பரிமளா & கோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

பாண்டிராஜ் இயக்கியுள்ள புதிய திரில்லர் காமெடி டிராமா 'பரிமளா & கோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே...

பார்வை மாற்றுத்திறனாளி சாதனையாளர்கள் 26 பேரை பற்றிய ‘காண்பதெல்லம் மறையுமென்றால்’ முதல் தமிழ் பிரெய்லி புத்தகம் வெளியீடு!

பத்திரிகை , இசை, அறிவியல், ராணுவம், விளையாட்டு,  மென்பொருள், சட்டம், வங்கி மற்றும் அரசாங்க உயர் பதவிகள்  என...

 ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் கதாபாத்திரங்களை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அறிமுகப்படுத்தினார்!

தயாள் பத்மநாபன் இயக்கிய ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்திலிருந்து விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படத்தின்...

More like this

கருணாஸ், நிமிஷா சஜயன் நடித்துள்ள ‘என்ன விலை’ திரைப்படம் ரிலீஸுக்கு முன் தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருது வென்றுள்ளது!

விருதுகளுக்கும் அங்கீகாரத்திற்கும் இடைப்பட்ட இடைவெளியை குறைக்கும் படங்கள் வெகு சிலதான். சில விருதுகள், குறிப்பாக ‘சிறந்த திரைக்கதை’ விருது...

பாண்டிராஜ் இயக்கியுள்ள திரில்லர் காமெடி டிராமா ‘பரிமளா & கோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

பாண்டிராஜ் இயக்கியுள்ள புதிய திரில்லர் காமெடி டிராமா 'பரிமளா & கோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே...

பார்வை மாற்றுத்திறனாளி சாதனையாளர்கள் 26 பேரை பற்றிய ‘காண்பதெல்லம் மறையுமென்றால்’ முதல் தமிழ் பிரெய்லி புத்தகம் வெளியீடு!

பத்திரிகை , இசை, அறிவியல், ராணுவம், விளையாட்டு,  மென்பொருள், சட்டம், வங்கி மற்றும் அரசாங்க உயர் பதவிகள்  என...