திரையுலகில் நட்சத்திர வாரிசுகள் அறிமுகமாவது சகஜம். அந்த வகையில் தமிழ்த் திரையிசை உலகத்தின் முடி சூடா மன்னனாக திகழ்ந்து பல பாடல்களை வழங்கி, இன்றும் மக்கள் மனதிலிருந்து மறையாத புலவர் புலமைப்பித்தனின் பேரன் திலீபன் புகழேந்தி ‘பள்ளிக்கூடம் போகாமலே’, ‘எவன்’ என இரு படங்களில் ஹீரோவாக நடித்தார். அந்த படங்கள் திரைக்கு வந்து வெற்றி பெற்றன. அதையடுத்து ‘சாகாவரம்’ என்ற படத்தை இயக்கி, ஹீரோவாக நடித்துள்ளார். அந்த படமும், ‘ஆண்டனி’ என்கிற திரைப்படமும் முடியும் நிலையில் உள்ளது. இதற்கிடையில், ஐந்து ஹீரோயின்கள் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்திலும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
புதுமுக இயக்குநர் இயக்கும் அந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

